உரைக்கப்பட்ட வார்த்தையே மூலவித்து #1 THE SPOKEN WORD IS THE ORIGINAL SEED #1 மார்ச்சு 18, 1962 பிரன்ஹாம் கூடாரம், செயர்ஸன்வில், இந்தியான, அமெரிக்கா 1. நன்றி சகோ. நெவில். நீர் இந்த இடைவேளையில் ஞானஸ்நான ஆராதனையை வைத்துக்கொள்ளப் போகின்றீரா? காலை வணக்கம் நண்பர்களே! இங்கிருப்பதனால் மிக்க மகிழ்ச்சியுறுகிறேன். இன்று காலையில் சற்று முன்னதாகவே நாம் துவக்குவோம். ஜனங்களுக்குப் போதுமான இருக்கைகளைக் கொடுத்து அமரச் செய்ய முயற்சித்தும் அது முடியாமற்போகிறது. எனவே அது எப்பொழுதுமே வருத்தமளிக்கிறது. நீங்கள் நின்று கொண்டிருப்பது கடினமென்று அறிந்திருக்கிறேன். இன்று காலையில் நான் செய்திக்கென்று அதிகமான நேரத்தை எடுத்துக் கொள்ள விரும்புகிறேன். இது ஒரு நீண்ட பிரசங்கமாக இருக்கப்போகிறபடியினால் - சிலர் நின்று கொண்டிருக்கிறபடி யினால் உட்கார்ந்து கொண்டிருப்பவர்கள் அவர்களுக்கு இடமளித்து சற்று நேரம் வெளியே சென்று இளைப்பாறி வரலாம். ஒரு நீண்ட ஆராதனையில் அவ்விதம் செய்வது ஒரு சரியான காரியம் என்று நினைவிற் கொள்ளுங்கள். அப்பொழுது ஒருவருக்கொருவர் உதவியாக இருக்கக்கூடும்.  2. இப்பொழுது அவர்கள்... இங்கு கூடாரத்திலுள்ளவர்கள் அனேகருக்கு வசதியாக இருக்கையளிக்கும் விதத்தில் ஒரு பெரிய சபைக்கட்டிடம் கட்டும் திட்டத்தில் முனைந்துள்ளார்கள். இங்குள்ள இக்கட்டிடம் 250 அல்லது 300 பேர்களுக்கான இருக்கைகள் மட்டுமே அளிக்கக் கூடியதாயிருக்கிறது; அந்தக் கட்டிடம் இதைவிட 100க்கும் அதிகமான பேர்களுக்கு இருக்கையளிக்கக் கூடியதாயிருக்கும். எனவே அது... இங்கு ஜனங்கள் தங்கள் வாகனங்களை நிறுத்தவும் இடமில்லாமல் கதவினருகில் வந்து பார்த்து கூடாரமும், சுவர்களும், நடைபாதைகளும் ஜனங்களால் நிரம்பி வழிவதைக் கண்டு திரும்பிப் போய்விடுவதை நான் காண்கிறேன். எல்லோரும் இங்கு வந்து கர்த்தருடைய செய்தியைக் கேட்பதற்கு அவர்கள் ஒவ்வொருவரையும் இங்கு கொண்டுவர முயற்சிக்கிறோம்.  3. நான் இன்று 12 மணி வரை பேச முயற்சிப்பேன் என்று அறிவிக்க விரும்புகிறேன். அதன் பிறகு 12 மணிக்குக் கூட்டத்தை முடிக்கலாம். ஜனங்கள் ஆகாரமருந்தி வர ஒவ்வொருவருக்கும் நேரமளிப்போம். அவ்வேளையில் நமது ஊழியராகிய போதகர் நெவில் ஒரு ஞானஸ்நான ஆராதனையை நடத்துவார். ஜனங்களாகிய நீங்கள் வெளியில் சென்று ஏதாவது ஆகாரம் உண்டு திரும்பி வாருங்கள். நான் சரியாக இரண்டு மணிக்குப் பீடத்திற்கு வர முயற்சி செய்வேன். இப்பொழுது பிற்பகல் கூட்டம் ஆரம்பிக்கும். 4. இந்த வாரத்தில் நான் பெரும்பாலும் ஜெபத்திலிருந்தேன். மூன்று, நான்கு நாட்கள் ஜெபித்த பிறகு தான் இந்தச் செய்தியினைப் பெற்றுக் கொள்ள முடிந்தது என்பதை உங்களுக்குச் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். இப்பொழுது, இக்கூட்டத்திற்காக ஜெபத்தின் மூலம் தாங்கி இதில் வந்து கலந்து கொண்டதற்காக என் நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன். 5. ஒரு வயதான முதியவரிடத்திலும், ஒரு முதிய பெண் மணியிடமும் சில கணம் பேச எனக்குச் சிலாக்கியம் கிடைத்தது - சகோதரன் மற்றும் சகோதரி கிட் உடன். அவர்கள் கடந்த வருடங்களெல்லாம் உண்மையுள்ளவர்களாக இருந்திருக்கிறார்க ளென்று நாம் அறிந்துள்ளோம். அவர்கள் என்னைக் காணவேண்டு மென்று சில கணம் நின்றார்கள். அவர்களிடம் வாருங்கள் என்றேன். அவர்களை சிறிது நேரம் கண்டு பேச விரும்பினேன். நான் சிறு குழந்தையாயிருந்த போதிலிருந்தே சுவிசேஷத்தைப் பிரசங்கித்து வரும் இப்படிப்பட்ட முதியோருடன் பேசுவதென்பது எப்படிப்பட்ட சிலாக்கியம்! நாம் பாதையின் முடிவுக்கு வரவர அந்தப் பழைய மகிமையான சுவிசேஷம் நமக்கு இன்னும் அருமையானதாக ஆகிறது.  6. இப்பொழுது, இங்கு சில துணிகள் ஜெபத்திற்கென்று வைக்கப்பட்டுள்ளது. சிறிது நேரத்திற்குப் பிறகு அவைகளின் மீது கைகளை வைத்து ஜெபிப்பேன். இப்பொழுது ஜெபத்திற்காக கொஞ்ச நேரம் நம் தலைகளைத் தாழ்த்துவோம். 7. எங்கள் பரலோகப் பிதாவே, நீர் உம்முடைய வார்த்தையில் "நான் பூமியிலிருந்து உயர்த்தப்பட்டிருக்கும்போது, எல்லோரையும் என்னிடத்தில் இழுத்துக் கொள்ளுவேன்” என்று கூறியிருக்கிறீர். இயேசுகிறிஸ்து இன்னும் தேவனுடைய குமாரன் என்றும், உலகரட்சகர் என்றும், இந்த மரித்துக் கொண்டிருக்கிற சந்ததியின் முன்பாக உயர்த்திக் காட்டுவதே எங்கள் வாழ்க்கையின் நோக்கமா யிருக்கிறது. அவரைத் தங்கள் சொந்த இரட்சகராக ஏற்று கொண்டு விசுவாசிக்கும் ஜனங்கள் எங்கிருக்கிறார்களோ, அங்கு நானும் வாழ்வதை அறியும் போது மிகவும் மகிழ்ச்சியுறுகிறேன். 8. இந்த ஜீவன் முடிந்த பிறகு மறுகரையில் ஒரு மகத்தான ஜீவன் உண்டாயிருந்து, சில மணி நேரமுள்ள இந்த பிரயாசம், சோதனைக்களமாகிய இந்த உலகத்தின் நிழல்களினூடே கடந்து, ஒரு ஆகாயப் பாதைக்குள்ளாக நுழைந்து, தேவனுடைய காலம் நிறைவேறும் நேரம் ஒன்று துரிதமாக வரும் என்று காத்திருப்பதை அறிந்திருக்கிறோம். காலங்களைத் தமது மகத்துவமான கரங்களில் அந்நாள் பரியந்தம் ஏந்திக்கொண்டிருப்பவர், முடிவிலே தம் சபையை இப்பூமியைவிட்டு போக விட்டு, ஆகாயத்தில் எங்கோ ஒரு தேசத்திற்கு கொண்டு செல்வார், அங்கு வியாதியும், வருத்தமும், வயது சென்ற நிலையும், மரணமும் இருப்பதில்லை, ஆகவே தான் கர்த்தாவே, இந்தக் காரியங்களையெல்லாம் குறித்த எங்கள் உணர்ச்சிகளை வெளிப்படுத்த இன்று இங்கே கூடியிருக்கிறோம்.  9. ஏதோ ஒன்றுமில்லாதற்காக ஜனங்கள் இங்கு கூட்டி சேர்க்கப் படவில்லை. ஏனெனில் வாக்குத்தத்தங்களைச் செய்த தேவகுமாரன் மரிக்கவில்லையென்றும், எங்கள் மத்தியில் என்றென்றும் ஜீவித்துக்கொண்டிருக்கிறார் என்றும், ஒருபோதும் இவ்வுலகம் கண்டிராவண்ணம் அந்த உண்மைத்துவமானது நிரூபிக்கப் பட்டிருப்பதை அறியும் போது நாங்கள் மிகவும் பரவச மடைகிறோம். எல்லாவற்றிக்கும் மேலாக கர்த்தாவே, இந்த உலகத்தை நாங்கள் சுதந்தரித்துக் கொண்டு அநேக நூற்றாண்டுகள் இளமையாயிருந்து மகிழ்ச்சியாயிருந்தாலும், அது ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே. ஆனால், அவரில் அன்பு கூருகிறவர்களுக்காக என்ன காலமானது வைக்கப்படிருக்கிறது என்பதை அது ஒத்து இருக்கிறதை அறியும் போது நாங்கள் இந்தக் காலையில் மிகவும் சந்தோஷமாயிருக்கிறோம். ஆகவே இந்த மகத்தான வேளை நெருங்குகிற தென்பதை எங்கள் சகோதர, சகோதரிகளுக்கு குறிப்பிட்டு காட்ட முயற்சிக்கிறோம். அந்த நேரமானது வருவதை நாங்கள் பார்க்கும் போது கர்த்தாவே, எங்கள் உள்ளம் கொழுந்து விட்டு எரிகிறது. எங்களை ஆயத்தமாக்க விரும்புகிறோம்.  10. ஒருவர் பின் ஒருவராக நாங்கள் அந்த பாதையின் வழியாகக் கடந்து செல்கிறோம். எங்கள் மத்தியிலிருந்த சகோதரி பெல்லை சற்று முன்பு தான் நாங்கள் அடக்கம் செய்தோம். அவர்களோடு ஜெபிக்கவும் நேரமில்லாதவாறு அவ்வளவு துரிதமாக கடந்து சென்று விட்டார்கள். (நாங்கள் அங்கு வரவேண்டுமென்று அவர்கள் விருப்பங் கொண்டார்கள்). எங்கள் இருதயத்திலுள்ள காரியங்களைக் கூட தருவதற்கு நீர் நல்லவராயிருக்கிறீர். உம்முடைய ஒருவரையும் இழக்கமாட்டீர் என்று வாக்கு கொடுத் திருக்கிறீர்.  11. இப்பொழுது, உம்மை அறிந்து கொள்ளாதவர்கள் தங்கள் இருதயத்தில் உம்மை அறிந்து கொள்ள நாங்கள் ஜெபிக்கிறோம். பாவிகளை மனந்திரும்புதலுக்கென்றும், வியாதியுள்ள ஜனங்களை தெய்வீக சுகமளித்தலின் அறிவிற்கும் திருப்பியருளும். ஓ, தேவனே, உம்முடைய பரிசுத்தவான்களை ஆசீர்வதித்து அவர்கள் இருதயங்களை ஒருமனக் கட்டிற்குள் கட்டியருளும். மேலும், இந்த ஒலி நாடாக்கள் பட்டினங்களுக்கும் உலகமுழுவதிலுமுள்ள நாடுகளின் எல்லா சபைகளுக்கும் செல்லும் போது, ஊழியக்கார சகோதரர்கள், ஒருக்கால் முதலில் தவறாகப் புரிந்துக் கொண்ட வர்கள், இப்பொழுது சரியாகப் புரிந்து கொண்டு உம்முடைய சபையாக ஆயத்தப்படட்டும்.  12. இப்பொழுதும் ஓ, கர்த்தாவே, என் தாயின் வயிற்றினின்றும் என்னை பிரித்து என் வாழ்நாளெல்லாம் என்னைப் பராமரித்து உம்முடைய கிருபையினால் இந்த மணி நேரத்திற்குள் என்னைக் கொண்டு வந்திருக்கிறீர்; நான் ஏன் அவ்விதமாக நடந்து கொண்டேன் என்றும் உம்முடைய சித்தத்தை ஜனங்களுக்கு விளக்கிச் சொல்லும் போது, கர்த்தாவே, உம்முடைய ஊழிக்காரர் களுடைய விசித்திரமான தன்மையை ஜனங்கள் புரிந்துக் கொள்ளட்டும்.  13. பிதாவே, இந்த வாரமெல்லாம் ஜெபித்து ஆராய்ந்து எழுதி யிருக்கிற இந்த பொருளைக் குறித்த வசனங்களையும், வார்த்தை களையும் ஆசீர்வதியும். அவைகள் எங்கெங்கு கேட்கப்படுகிறதோ அங்குள்ள நல்ல நிலத்தில் அவை விழுந்து காக்கப்பட்டு விளையச் செயல்படட்டும். அப்பொழுது துதியும் உமக்கே செலுத்தப்படும். இயேசுவின் நாமத்தில் கேட்கிறோம், ஆமென்.  14. உள்ளே வர இயலாமல் காரிகளில் அமர்ந்திருக்கும் மக்கள் கவனிக்கவும், இப்பொழுது இங்கே ஒரு சிறு கருவியை நான் பொருத்துகிறேன், நீங்கள் உங்கள் வானொலியில் 1150 ற்கு திருப்பவும். அப்பொழுது சரியாக உங்கள் காரில் உள்ள உங்கள் வானொலியில் செய்தியைக் கேட்கலாம். இப்பொழுது இதில்... இங்கேயுள்ள கருவி ஒலிநாடாக்களுக்கா? 15. இப்பொழுது இங்கிருக்கும் என் நண்பர்களுக்கும், இந்த ஒலி நாடாக்கள் எங்கெல்லாம் செல்கின்றனவோ அங்குள்ளவர்களுக் கும் நான் செய்த அநேக வர்த்தமானங்களைக் குறித்த விவரம் சொல்ல வேண்டியவனாயிருக்கிறேன் என்பதை உணருகிறேன். அநேக சமயங்களில் ஜனங்கள் என்னிடம் வந்து, "சகோ. பிரன்ஹாமே, நீங்கள் ஏன் அவ்விதம் செய்தீர்கள்? அதை ஏன் சொன்னீர்கள்? அவ்விதமாக செய்வதற்கு முகாந்திரம் என்ன?" என்றெல்லாம் கேட்கிறார்கள். நான் செய்த ஒவ்வொரு காரியங்களும் நல்ல நோக்கத்திற்காக செய்யப்பட்டன என்பதை என் இருதயப் பூர்வமாக கூறுகிறேன், அவைகளை ஒரு காரியத் திற்காக செய்தேன்; மேலும் இந்த காலையிலே, அவைகளை நான் ஏன் செய்தேன் என்றும் எந்த நோக்கத்திற்காக செய்தேன் என்றும் தேவனுடைய உதவியினால் வேதாகமத்திலிருந்து விவரிக்க முயற்சிப்பேன்.  16. ஒருக்கால் இங்கு இத்தகைய பெரிய கூட்டத்தில் அநேக ஊழியக்காரர் அமர்ந்திருந்து செய்தியைக் கேட்கக் கூடும். என்னு டைய எண்ணங்களையெல்லாம் வசனத்தை ஆதாரமாகக் கொண்டு வசனங்களோடு ஜனங்களுக்குக் கொடுக்கத்தக்கதாக போதுமான நேரம் உண்டாயிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். என்னு டைய சகோதரர்களுக்கு : நான் உங்களுக்கும், ஒலிநாடாக்களின் பதிவுக்காகவும் பேசுகிறேன். நான் எதை சரியென்று நினைத்து அதின் மேல் நிலையாயிருக்கிறேனோ, அதை குறித்து ஒரு வேளை நீங்கள் அதிகமாக என்னோடு ஒத்துப் போகாமலிருக்கலாம். அவ்விதமாக செய்வதற்கு உங்களுக்கு உரிமையுண்டு. ஏனெனில் நீங்கள் அதை வேறுவிதமாகப் பார்க்கக் கூடும்; ஆனால் இக்காலையில், நான் ஏன் அவ்விதமாக நிலைநின்றேன் என்பதை தேவ ஒதாசையினால் உங்களுக்கு காட்ட முடியும் என்று நம்புகிறேன்.  17. அநேக நேரங்களில் நான் சபைகளையும், ஸ்தாபனங்களையும், பெண்கள் ஆபாச ஆடையணிவதைக் குறித்தும், மனிதனின் நடவடிக்கைகளைக் குறித்தும், கடிந்து கொண்டிருக்கிறேன். அவ்விதம் செய்வதற்கு நான் முழுவதுமாக வேத வசனங்களைச் சார்ந்திருந்தேன் என்று நினைக்கிறேன். ஒருபோதும் ஒருவரைக் குறித்தாகிலும் தீய உணர்வு எனக்கு இருந்ததில்லை. என் இருத யத்தை தேவன் அறிவார். கிழக்குக்கும் மேற்குக்கும் எவ்வளவு தூரமோ அவ்வளவு தூரமாய் அவர்கள் என்னோடு ஒவ்வாமலிருந் தாலும் இன்னும் நான் அவர்களை நேசித்துக்கொண்டுதான் இருக்கிறேன். அவர்கள் என்ன செய்தாலும் சரி, அல்லது என்னை எவ்விதம் நடத்தினாலும் சரி, அது ஒரு காரியமல்ல, தேவனுடைய ஆவி எனக்குள் இருக்கும் வரை நான் எப்பொழுதும் அவருடைய சபையையும் ஜனங்களையும் நேசிக்கத்தான் செய்வேன். 18. ஒரு சமயம் மோசே என்ற ஒரு மனிதன் இருந்ததை நான் நினைவு கூறுகிறேன், அந்த ஜனங்கள் அவனைத் தொடர்ச்சியாக பாரப்படுத்தி வந்தார்கள். எல்லாக் காரியங்களிலும் அவர்கள் முறு முறுத்தார்கள். ஆனால் முறையிட்டார்கள். மோசேக்கு எடுத்துக் காண்பிக்கும் நேரம் ஒன்று வந்தது. அப்பொழுது தேவன் "அவர்களிடமிருந்து உன்னைப் பிரித்துக் கொள்; நான் உன்னை ஒரு ஜாதியாக்குவேன்” என்று சொன்ன போது, மோசே, தேவனுடைய கோபக்கினைக்கு குறுக்கே விழுந்து, "என்னை கொன்று போடும், இந்த ஜனங்களை விட்டு விடும்” என்று கூறினான். அவர்களை அவன் கலகக்காரர் என்று அழைத்தான்; (அவனுக்கும் தேவனுக்கும் விரோதமாக அவர்கள் கலகம் செய்தார்கள்) இருந்தாலும் அவன், "என்னை எடுத்துக் கொள்ளும், அவர்களை இரட்சியும்” என்று கூறும் அளவிற்கு அவர்களை நேசித்தான். கிறிஸ்து மோசேயில் இருந்ததை அது குறிக்கிறது. 19. ஒரு மனிதன் மற்றவர் எவ்வளவுதான் அதிகம் அவனோடு ஒத்துப் போகாமலிருந்தாலும் அவன் அவ்விதமாக நேசிக்கா விட்டால் - உதட்டளவிலல்ல, உள்ளத்தால் - இந்த மனித பிறவிகளை நேசியாவிட்டால் கிறிஸ்துவின் அன்பு அவனிடத்தில் இல்லை என்று நான் நம்புகிறேன். 20. ஒரு சமயம் நான் ஒரு காரியத்தைக் குறித்து அதிசயித்தேன் (ஒரு வேடிக்கைக்காக நான் இதைக் கூறவில்லை). சிக்காகோ என்ற இடத்தில் நடந்த கூட்டத்தில் ஒரு நீக்ரோ மனிதன் அமர்ந்திருந்து, "நான் டாக்டர் - பிரன்ஹாமை பார்க்க விரும்புகிறேன்” என்று கூறிக் கொண்டேயிருந்தாராம். அவர் பெரிய தொப்பியை தலையில் கொண்டவராயும், பத்து அங்குல நீள சிலுவையை அணிந்த வராயும், நீண்ட அங்கிதரித்து, மணிகளாலும் வளையல்களாலும் உடுத்தி ஒரு வினோத காட்சியளித்தார். நான் என்னுடைய உடன் ஊழியரான சகோ. பாக்ஸ்டரிடம், “அவரை அறைக்குள் அழைத்து வாருங்கள், நான் அவரைப் பார்க்க விரும்புகிறேன்.” என்று கூறினேன். ஆக, அங்கு அவர் என்னோடு அமர்ந்து, "ஐயா, நான் உங்களை எவ்விதம் அழைக்கட்டும்? பிதா, கனம் பொருந்திய, அல்லது மூப்பர், அல்லது எவ்விதமாக நீங்கள் அழைக்கப்பட விரும்புகிறீர்கள்'' என்று கேட்டார். அதற்கு நான், "நீங்கள் என்னை நேசிக்கிறதுண்டானால் என்னை 'சகோதரன்' என்று அழையுங்கள்" என்றேன். அவர் அவ்விதமே எனக்கு மரியாதை செலுத்தினார். பின்பு அவர் தன்னுடைய பெயரையும், சபையின் பட்டப் பெயரையும், தன்னுடைய பட்டப் பெயர்களையும் கூறினார். அவைகளை எழுத அநேகவரிகள் தேவைப்படும். ஆனால் அவர் சொன்ன ஒரு காரியம் என்னை எப்பொழுதும் உறுத்தும். அவர், "சகோ பிரன்ஹாமே, நான் ஒரு ஜாதியைக் குறித்து மாத்திரமே வாஞ்சையுள்ளவனாயிருக்கிறேன், அது இந்த மனித ஜாதிதான்” என்றார். 21. அப்பொழுது நான். "அது அவ்விதமானால் அதன் பேரில் நாம் கைகளைக் குலுக்கிக் கொள்வோம்” என்றேன். மனித ஜாதி என்ற இந்த ஒவ்வொருவருக்காகவும், ஒவ்வொரு மதத்தினருக்காகவும், ஒவ்வொரு நிறத்தாருக்காகவும், கிறிஸ்து மரித்தார். ஆகவே இக் காலையில் அதுவே என் விருப்பமும்கூட, மேலும் அதை எப்பொழுதும் என்னுடைய விருப்பமாக்க முயற்சிக்கிறேன். 22. நான் பிரசங்கிக்க நோக்கம் கொள்ளவில்லை. ஏனெனில் நான் இங்கு சொல்வதற்காக வைத்திருக்கும் காரியங்களை கூறுவே னென்றால் பெரும்பாலும் அதற்கு 4 அல்லது 5 மணி நேரம் பிடிக்கும். ஆகவே நான் இப்போதிருந்து 2 மணிநேரம் எடுத்துக் கொள்கிறேன். பின்பு கலைந்து செல்லலாம். பின்பு 1.30 மணி அளவில் இங்கு கூடுவீர்களானால் இரவு கூடியவரையில் சீக்கிரமாய் முடிக்கலாம்.  23. நான் இன்று பிற்பகல் ஜார்ஜியாவிலுள்ள டிப்டன் என்ற இடத்திற்குப் புறப்படவேண்டும். அங்கு உயர்நிலைப் பள்ளியிலுள்ள அரங்கில் நாளை இரவு நான் பேச பிரசங்கிக்க இருக்கிறேன். அதன்பின் அங்கிருந்து எங்கு செல்வேன் என்பதை நான் அறியேன்: அவர் அங்கிருந்து எங்கே வழிநடத்துகின்றாரோ அங்கு மட்டும் செல்வேன். அநேக இடங்கிளில் ... சகோ. ஆர்கன் பிரைட் மற்றவரும் என்னை அழைத்து வெளி நாடுகளிலும், மேற்குப்பகுதி கனடா மற்றும் உலக முழுவதும் செல்ல வேண்டுமென்றனர். ஆனால் நான்.. நீங்கள் அறிவீர்கள்... நான் இந்த பிரசங்கத்தை முடித்தபின் நீங்கள் அதை அறிவீர்கள். தேவன் எனக்கு அளித்தபடியே நான் அதை உங்களுக்கு அளிக்க உதவுவாரானால், இந்த ஆராதனை முடிந்தவுடன் நீங்கள் அதைப் புரிந்து கொள்வீர்கள் என்று நான் நம்புகிறேன். 24. அதன்பின், நீங்கள் புரிந்து கொள்ள முடியாதது ஏதாவது இருந்தால், உங்கள் புத்தகங்களையும், கேள்விகளையும் கொண்டு வாருங்கள். ஒலிப்பதிவு கருவிகளையுடையவர்கள், உங்கள் திறந்த இருதயத்தோடே உங்கள் வீடுகளில் அந்த ஒலி நாடாக்களைக் கேளுங்கள். "ஆண்டவரே, இப்பொழுது நான் ஓய்வாய் இருக்கிறேன்; நான் அதைக் கேட்கப் போகிறேன்,” என்று கூறுங்கள். நீங்கள் கேட்கையில் உங்களுக்கு ஏதாவது சந்தேகமிருந்தால், உடனே வேதவாக்கியங்களைக் கவனியுங்கள். வேதம் கூறுகிறது, இயேசு, “என்னைக் குறித்து சாட்சி கொடுப்பவைகளும் அவைகளே”, என்றார். பாருங்கள்? அது சரியானதா என்பதை நாம் வேதத்தின் வழியாகப் பார்த்துக் கொள்ளலாம். 25. இப்பொழுது நாம் வசனத்திற்கு வருவோம். (மன்னிக்கவும். இன்று காலையில் இங்கே ஏராளமான ஒலிப்பெருக்கிக் கருவிகள் உள்ளன. நான் எதில் ஆரம்பிப்பது என்று எனக்குத் தெரியவில்லை.) நான் ஆதியாகமத்திலிருந்து ஆரம்பித்து இன்றிரவு வெளிப்படுத்தின விசேஷத்தில் முடிக்கப் போகிறேன். நான் வார்த்தையை விசுவாசிக்கிறேன். ஆதியாகமம் முதல் அதிகாரத்தில் தேவவார்த் தையின் ஒரு பாகத்தை வாசிக்க விரும்புகிறேன். உங்களுடைய தாள்களையும் எழுது கோல்களையும் ஆயத்தமாக வைத்திருங்கள். ஏனெனில் என்னிடம் அநேக வசனங்கள் உள்ளன. நான் எல்லா நேரங்களிலும் அவ்வசனங்களை தொடர்ந்து படித்துக்கொண்டே யிருப்பேன். ஆதியாகமம் 1ம் அதிகாரம் 1லிருந்து 13 வசனங்களை இப்பொழுது நாம் வாசிப்போம்.  "ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித் தார். பூமியானது ஒழுங்கின்மையும் வெறுமையுமாய் இருந்தது; ஆழத்தின்மேல் இருள் இருந்தது; தேவ ஆவியானவர் ஜலத்தின் மேல் அசைவாடிக்கொண்டி ருந்தார். தேவன் வெளிச்சம் உண்டாகக்கடவது என்றார், வெளிச்சம் உண்டாயிற்று. வெளிச்சம் நல்லது என்று தேவன் கண்டார்; வெளிச்சத்தையும் இருளையும் தேவன் வெவ்வேறாகப் பிரித்தார்.  தேவன் வெளிச்சத்துக்குப் பகல் என்று பேரிட்டார், இருளுக்கு இரவு என்று பேரிட்டார்; சாயங்காலமும் விடியற்காலமுமாகி முதலாம் நாள் ஆயிற்று. பின்பு தேவன்: ஜலத்தின் மத்தியில் ஆகாய விரிவு உண்டாகக் கடவது என்றும் அது ஜலத்தினின்று ஜலத்தைப் பிரிக்கக்கடவது என்றும் சொன்னார்.  தேவன் ஆகாயவிரிவை உண்டுபண்ணி, ஆகாயவிரிவுக்குக் கீழே இருக்கிற ஜலத்திற்கும், ஆகாயவிரிவுக்கு மேலே இருக்கிற ஜலத்திற்கும் பிரிவுண்டாக்கினார்; அது அப்படியே ஆயிற்று. தேவன் ஆகாயவிரிவுக்கு வானம் என்று பேரிட்டார்; சாயங்காலமும் விடியற்காலமுமாகி இரண்டாம் நாள் ஆயிற்று.  பின்பு தேவன்: வானத்தின் கீழே இருக்கிற ஜலம் ஓரிடத்தில் சேரவும், வெட்டாந்தரை காணப்படவும் கடவது என்றார்; அது அப்படியே ஆயிற்று. தேவன் வெட்டாந்தரைக்குப் பூமி என்றும், சேர்ந்த ஜலத்திற்குச் சமுத்திரம் என்றும் பேரிட்டார்; தேவன் அது நல்லது என்று கண்டார்.  அப்பொழுது தேவன்: பூமியானது புல்லையும், விதையைப் பிறப்பிக்கும் பூண்டுகளையும் பூமியின்மேல் தங்களில் தங்கள் விதையையுடைய கனிகளைத் தங்களில் தங்கள் ஜாதியின் படியே கொடுக்கும் கனிவிருட்சங்களையும் முளைப்பிக்கக் கடவது என்றார்; அது அப்படியே ஆயிற்று. பூமியானது புல்லையும், தங்கள் தங்கள் ஜாதியின்படியே விதையைப் பிறப்பிக்கும் பூண்டுகளையும், தங்கள் தங்கள் ஜாதியின் படியே தங்களில் தங்கள் விதையையுடைய கனிகளைக் கொடுக்கும் விருட்சங்களையும் முளைப்பித்தது; தேவன் அது நல்லது என்று  கண்டார். சாயங்காலமும் விடியற்காலமுமாகி மூன்றாம் நாள் ஆயிற்று.”  26. இந்த காலையில் என் மூலவாக்கியத்தின் தலைப்பாக 'உரைக்கப்பட்ட வார்த்தையே மூலவித்து” என்று ஆரம்பித்து பேச விரும்புகிறேன். "உரைக்கப்பட்ட வார்த்தையே மூலவித்து.'' தேவன், “தங்கள் தங்கள் ஜாதியின்படி ..... பிறப்பிக்கக்கடவது” என்று கூறியதை நீங்கள் கவனிக்க விரும்புகிறேன். அது எதுவாயிருந்தாலும் அது தன் இனத்தைப் பிறப்பிக்க வேண்டும்.  27. தேவனுடைய இந்த வார்த்தையானது நித்தியமாயிருக்கிறது. தேவன் நித்தியமானவராய் இருக்கிறபடியால், அவர் ஒரு காரியத்தைப் பேசி, பின்பு வேறெதாகிலும் ஒரு நல்ல முடிவுக்கு திரும்பவும் அதை மாற்றுகிறவரல்ல. ஏனெனில் தேவனுடைய ஒவ்வொரு முடிவும் பரிபூரணமாயிருக்கிறது. ஒருதரம் அவர் வார்த்தையை உரைத்த பின்பு, அது ஒருபோதும் மரிப்பதில்லை; அது தொடர்ந்து ஜீவிக்கிறது. அது ஒருபோதும் மரிப்பதில்லை. ஏனெனில் அது தேவனாயிருக்கிறது. அவருடைய வார்த்தை மரிப்பதைக் காட்டிலும் அவர் மரிக்கலாம்! ஆகவே தான் யோவான் 1ம், அதிகாரத்தில் “ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனா யிருந்தது. அந்த வார்த்தை மாம்சமாகி ....'' என்று எழுதப் பட்டிருக்கிறது. ஆதியிலே நித்திய நோக்கத்திற்காக உரைக்கப்பட்ட அதே வார்த்தை மாம்சமாகி நமது மத்தியிலே வாசம் செய்தார்; தேவனுடைய வார்த்தை.  28. சில ஆண்டுகளுக்கு முன்பாக ஒரு பெண் (ஒருவேளை இது அதிகார பூர்வமானதாக இல்லாமலிருக்கலாம்) கடிகாரங்கள், கைகடிகாரங்கள், இவைகளின் மணிகாட்டும் முற்களுக்கு ரேடியம் (Radium) என்னும் இரசாயனத்தை பூசும்போது அதை தன் நாவினால் நக்கினாளாம். அது அந்த பெண்ணைக் கொன்றுவிட்டது. அவர்கள் அப்பெண்ணின் மண்டையோட்டை ஒரு சோதனைக்காக வைத்திருந்தார்களாம். அநேக ஆண்டுகளுக்குப்பின்பு, அப்பெண் மரித்து அநேக வருடங்கள் ஆகியும், அவர்கள் உபயோகிக்கும் சில கருவிகளை அம்மண்டை ஓட்டின் அருகே கொண்டு சென்றபோது ஒரு அதிர்ச்சியோடு அம்மண்டையோட்டினுள்ளே ரேடியம் இன்னுமாக ஓடிக்கொண்டிருந்ததை காதினால் கேட்க முடிந்ததாம். இந்த ரேடியமானது தொடர்ந்து ஓடிக்கொண்டேயிருக்கிறது.  29. தேவனுடைய வார்த்தையானது தொடர்ந்து சென்றுக் கொண்டேயிருக்கிறது. கிரகிக்கத்தக்கதான கருவி ஒன்று நமக்கு உண்டாயிருக்குமானால் அதைக்கொண்டு ஒரு மனிதனுடைய சத்தத்தையோ அல்லது நான் இன்று பேசும் என்னுடைய சத்தத்தையோ, இன்றிலிருந்து 10 ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்பும் ஆகாயத்திலிருந்து கிரகிக்கமுடியும் என்று என்னிடம் கூறினார்கள். இது ஒரு கூழாங்கல்லை குளத்தின் நடுவே போடுவதை ஒத்திருக்கிறது. அதில் ஏற்படும் சிறு அலைகள், நம் கண்களுக்கு காணப்படாமற் போனாலும், அது கரையை தொடுமளவும் தொடர்ந்து செல்கிறது. அதுபோன்று நம்முடைய சப்த அலைவரிசைகள் இந்த உலகத்தைச் சுற்றி சுற்றி பிரயாணம் செய்து கொண்டேயிருக்கிறது. ஆகவே, நம்முடைய சப்தம் என்கிற காரியமே நமக்கு நியாத்தீர்ப்பாகிறது. நம்முடைய சாட்சியே நமக்கு விரோதமாக எழும்பும். அவருடைய மகத்தான அந்த கருவி நம்முடைய சப்தத்தை கிரகிக்கும் போது, நாம் முணுமுணுத்த ஒவ்வொரு வார்த்தயும் நாம் பேசிச் சொன்ன ஒவ்வொரு வார்த்தையாகிய நம்முடைய சொந்த சப்தமே அந்த நியாத்தீர்ப்புப் பீடத் தண்டையில் நம் காதுகளில் எதிரொலிக்கும். 30. அந்த தவறான சப்தத்தை நிறுத்துவதற்கு ஒரே ஒரு வழி மனந்திரும்புதலாகும். தேவன் மட்டுமே அதை நிறுத்த முடியும். அவ்விதம் அது நிறுத்தப் படவில்லையென்றால் அது தொடர்ந்து சென்று உன்னை நித்தியத்தில் சந்திக்கும். ஆகவே தேவன் பரிபூரணமானவராயும், அவருடைய சப்தம் நித்தியமாயும் இருப்பதால், அவருடைய சொந்த சப்தமே அவரை பிடிப்பதா யிருக்கிறது. ஆதலால், அவர் தம்முடைய எல்லா தீர்மானத்திலும், பரிபூரணமுள்ளவராக இருத்தல் வேண்டும். ஏனெனில், அவர் ஒரு காரியத்தைச் சொல்வாரென்றால், அது முழுவழியும் சென்று பின்பு நியாயத்தீர்ப்புக்கு வர வேண்டியதாயிருக்கிறது. 31. நீங்கள் உண்மையிலே புரிந்துக் கொள்பவர்களாக அல்லது அவ்விதம் முயற்சி செய்பவர்களாயிருப்பின், நான் ஏன் எப்பொழுதும் நான் கொண்டிருக்கின்ற தேவனுடைய வார்த்தைக்காக நிற்கின்றேன் என்பதை காணமுடியும். ஏனெனில் மற்ற எல்லாக்காரியங்களும் நிச்சயமாக ஒழிந்து போகும். ஆனால் தேவன் நித்தியமானவர், அவர் வார்த்தையும் நித்தியமாகும். நீங்கள் இதை படிக்கத்தக்கதாகவும், முழு பொருளையும் பெற்றுக் கொள்ளத்தக்க தாகவும், எவ்வளவு விவரமாக பேசமுடியுமோ அவ்வளவு விவரமாக பேச முயற்சிக்கிறேன். மேலும் ஒலி நாடாக்களுக் காகவும் நான் அவ்விதம் செய்ய வேண்டும் - இந்த வேதபுத்தகமே தேவனுடைய வார்த்தையென்பதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும். 32. நியாயத்தீர்ப்பு என்னும் ஒன்றை நாம் சந்திக்க வேண்டும். தேவனுடைய சப்தம் எங்கோ நம்மை பிடிக்கப்போகிறது என்பதையும் நாம் அறிந்திருக்கிறோம். ஏனெனில், ஒவ்வொரு மானிடப் பிறவிக்கும், அந்த சப்தத்தை கேட்பதற்கு சமயமானது கொடுக்கப்படுகிறது. ஊழியக்காரர்கள் அதை எடுக்க உத்திரவாத முள்ளவர்களாயிருக்க வேண்டும். தேவனுடைய சப்தமானது ஒவ்வொரு மனிதனையும் சந்திக்க இருப்பதினால், ...... அதை நீ இங்கோ, அல்லது நியாயத்தீர்ப்பு பீடத்தண்டையிலோ கேட்க வேண்டியவனாயிருக்கிறாய். சபையானது தேவனுடைய சப்தமா யிருக்குமானால், ரோமன் கத்தோலிக்கர்கள் கூறுவது போல, நீ சபையின் சப்தத்தைக் கேட்க வேண்டும். ஆனால் அவர்களுக்குள்ளே உபதேசபேதங்களினால் குழப்பமான நிலை உண்டாயிருப்பதனால் (ரோமர்கள் என்றும், கிரேக்கர்கள் என்றும் பிரிவுகள் உள்ளன) விசுவாசம் கொள்ளத்தக்கதான இடம் உண்டாயிருக்க முடியாது. ஏனெனில் எது சரியான சபை என்ற கேள்வி எழுகிறதே! 33. ரோம சபை உண்மையானதா? கிரேக்க சபை உண்மையானதா? அல்லது வேறு எந்த சபைகள் உண்மை? லூத்தரன்களா? பாப்டிஸ்டுகளா? மெத்தோடிஸ்டுகளா? பிரஸ்பிடேரியன்களா? அல்லது யார் உண்மையான சபை? அவர்களுக்குள்ளே பல வித்தியாசமான மார்க்க பேதங்களைக் கொண்டிருந்து, கிழக்குக்கும் மேற்குக்கும் எவ்வளவு தூரமோ, அவ்வளவு தூரம் ஒருவருக் கொருவர் பிரிந்திருக்கும் அவர்கள் எவ்வாறு உண்மையான சபையாயிருக்க முடியும்? என்னைப் பொருத்த மட்டில் தேவனுடைய சப்தமே நியாயாதிபதியாகும். ஆகவே, தேவனுடைய சப்தமானது மிக பரிபூரணமாயிருக்கிறது, பரிபூரணமான நிலைமையினின்று அது வரவேண்டியதாயிருக்கிறது. ஆனால் மனிதர் அதை தங்களுடைய ஸ்தாபன வித்தியாசங்களோடு பல வழிகளிலும் கொண்டு வருவார்களென்றால் அவர்கள் சொல்வதைக் கேட்டு, நம்முடைய விசுவாசத்தை நிச்சயமாக எதிலும் வைக்க முடியாது.  34. அது தெளிவாயிருக்கிறது என நான் நம்புகிறேன். ஏனெனில் ஒருவர் இது தான் என்று கூறுகிறார் ...... மற்றொருவர், நீ இந்த சபையை சேர்ந்துக் கொள் என்று கூறுகிறார். “இந்த சபை மட்டுமே இரட்சிக்க முடியும்” என்று ஒருவர் கூறுகிறார் - இது கத்தோலிக்கரு டைய வாக்குமூலம். அவ்விதமே, லூத்தரன்களும், மெத்தோடிஸ்டு களும், பாப்டிஸ்டுகளும், பெந்தெகொஸ்தே யினரும் தாங்களே வழி என்று கூறுகின்றனர். ஆக, ஒரு கூட்டமான குழப்பம் அங்கு உண்டாயிருக்கிறதென்று காண்கிறோம். இவ்வித நிலையில் எழுதப்பட்ட வார்த்தையை இச்சகோதரரிடத்திற்கு நீ கொண்டு செல்வாயானால், "அந்த நாட்கள் இப்போதைக் குரியதல்ல” என்று அநேகர் கூறுவார்கள். வேறு சிலர், "அது வெறும் சரித்திரமே" என்றும், "வேதப் புத்தகம் பாடல்கள் நிறைந்த புத்தகம்” என்றும், " அதை மாற்றியமைக்க சபைக்கு அதிகார முண்டு" என்றும் கூறுவார்கள். அப்படியானால் நாம் எங்கே நிற்பது? விசுவாசம் இளைப்பாறத்தக்க இடம் தான் எது?  35. நாம் ஏதாவதொன்றினால் நியாயந் தீர்க்கப்பட வேண்டு மானால், அவ்விதம் கட்டளை கொடுத்த நித்தியமான தேவனுடைய வார்த்தையினால் மட்டுமே ஆகும்; ஆக, அந்த தேவனுடைய வார்த்தையினால் நாம் நியாயந்தீர்க்கப்பட வேண்டுமானால், ஏழை மனிதனின் மனமானது மிகவும் வீணாக்கப்பட்டு, என்ன செய்வதென்று தெரியாமல், ஒருவன் ஒரு ஸ்தாபனத்தையும், மற்றவன் வேறு ஒரு ஸ்தாபனத்தையும் சேர்ந்த இந்த அளவுக்கு ஒரு குழப்பத்தை பூமியில் போட தேவன் அநீதியுள்ளவரா யிருப்பார். அந்த ஏழை மனிதன், தான் சரியானதை செய்கிறான் என்று நினைக்க முயற்சித்து ஒரு ஸ்தாபனத்தின் சப்தத்திற்கு செவி கொடுப்பான்; பின்பு வேறொரு ஸ்தாபனத்திற்கு செவி கொடுத்து, அதை விட இது சற்று நன்றாயிருக்கிறது, என்று யோசித்து சில காலம் அதில் தரித்திருந்து விட்டு பின்பு முதல் இடமே நன்றாயிருந்தது என்று நினைத்து அதற்கு செல்வான். தான் என்ன செய்ய வேண்டும் என்பதை அறியாதவனாயிருக்கிறான். ஆனால் தேவன், ஏதாகிலும் ஒன்றைக்கொண்டு இவ்வுலகத்தை நியாயந்தீர்க்கப் போகிறார் என்றால், அது அவருடைய வார்த்தையைக் கொண்டுதான் என்று நான் விசுவாசிக்கிறேன்.  36. சகோதரர்களே, நான் ஏன் இதை சொல்லுகிறேனென்றால் இங்கிருக்கும் இந்த சிறிய கூட்டத்தாருக்கு மட்டும் இதை கூற வில்லை. இந்த ஒலி நாடாக்கள் உலகமெங்கும் செல்லும் இடமெல் லாம் உள்ள யாவருக்கும் இதை கூறுகிறேன். சற்று என்னை நீங்க ளெல்லாரும் பொறுத்துக் கொண்டு யோசனை செய்யுங்கள்.' ஏனெனில் ஏதோ ஒரு இடத்திற்கு நியாயத்தீர்ப்படைய நாம் வர வேண்டியதாயுள்ளது. சிலர் "ஜேம்ஸ் அரசனின் மொழிப் பெயர்ப்பே " (King James Version) சரியானதென்று கூறுகின்றனர். வேறு சிலர் வேறொரு மொழிப் பெயர்ப்பை சுட்டிக் காட்டு கிறார்கள், தற்பொழுது நிலையான மொழிப் பெயர்ப்பு (Standard Version) என்று ஏற்படுத்தியிருக்கிறார்கள்.  37. தேவன் தம்மில் தாமே இயங்குபவராயும், (அவர் அவ்விதம்தான்) நித்தியமானவராயுமிருப்பின், அதை அவர்தான் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று நான் விசுவாசிக்கிறேன். ஏனெனில் அது அவரை சார்ந்தது. அவர் இருக்கும் இடமான பரலோகத்திற்கு நான் செல்ல வேண்டுமானால், நான் எங்கிருந்து கொண்டு எதை செய்ய வேண்டும் என்பதை அவர்தான் எனக்கு கொடுக்க வேண்டும். ஏதாகிலும் ஒரு இடத்தில் உங்கள் கைகளை வைத்து "இது தான் சரியானது என்று கூறவேண்டுமல்லவா?" என்பார்கள். நீங்கள் இதை ஒப்புக்கொள்கிறீர்களா? ஏதாகிலும் ஒரு இடம் இருக்கத்தான் வேண்டும், அது அவரைச் சார்ந்தது, இல்லையென்றால் அவர் அநீதியுள்ளவராயிருப்பார்.  38. "கர்த்தாவே, நான் ஒரு லூத்தரனாயிருந்தேன்" என்று நான் கூறுவேனென்றால் மற்றொருவன் "நல்லது, நான் ஒரு கத்தோலிக்கனா யிருந்தேன்" என்று கூறுவான். அங்கு இந்த இருவரும் ஒருவருக் கொருவர் விரோதமாயிருக்கின்றனரே! அப்படியாயின் ஏழை மனிதன் என்ன செய்யக் கூடும்? அல்லது, கத்தோலிக்க சபைதான் சரியானதென்றால்-லுத்தரன்கள் எல்லாரும் இழந்து போனவர் களாய் காணப்படுவார்களே! லூத்தரன் சபைதான் சரியான தென்றால், கத்தோலிக்கர்கள் எல்லாரும் இழந்து போனவர்களாக காணப்படுவார்களே! 39. பாருங்கள், விசுவாசமானது எங்கேயாவது ஒரு இடத்தில் தன்னுடைய இளைப்பாரும் ஸ்தலத்தை அடைய வேண்டும், நீங்கள் இதைக் குறித்து என்ன நினைக்கின்றீர்கள் என்பது எனக்கு தெரியாது. ஆனால் என்னைப் பொறுத்தமட்டில் வேதபுத்தகம் தான் ஒருக்காலும் தவறாத, அழியாத தேவனுடைய வார்த்தையாகும். தேவன் தம்முடைய வார்த்தையை கவனித்து அதில் ஒரு காரியமாகிலும் இடம் பிறழாமல் பார்த்துக்கொள்வார் என்று நான் விசுவாசிக்கிறேன். 40. ஒரு சமயம் என் மகள் ரெபேக்கா என்னிடம், "அப்பா, இந்த உலகமானது பலகோடிக்கணக்கான வருடங்கள் பழமையானது என்று எங்கள் பள்ளிக்கூடத்தில் நிரூபித்து விட்டார்கள். அது வேதத்திற்கு முரண்பட்ட கருத்தல்லவா?” என்று கேட்டாள். அதற்கு நான் "அவ்விதம் இல்லையம்மா" என்று கூறினேன். 41. மேலும் அவள் என்னிடம், “நல்லது அப்பா, கற்களும் அவைகள் உருவாக்கப்பட்ட அமைப்புகளின் பல வித்தியாசப் பட்ட ஆராய்ச்சிகள் இவ்வுலகம் மிகப் பழமையானது என்று நிரூபித்திருக்க, 24 மணி நேரத்தில் தேவன் வானத்தையும் பூமியையும் உண்டாக்கினார் என்ற தேவனின் வாக்கு மூலம் வேதத்தைப் பொய்யாக்குவது போன்றுள்ளதல்லவா?” என்று கேட்டாள். 42. அதற்கு நான், "இல்லை," என்று கூறினேன். வேதத்தைக் குறித்து மோசேயிடம் தேவன் கூறியதை நீங்கள் கவனித்தீர்க ளென்றால், "ஆதியிலே தேவன் வானத்தையும், பூமியையும் சிருஷ்டித்தார்.” இங்கு கால அளவு குறிப்பிடப் படுவதைக் கவனியுங்கள். அவ்வுலகத்தை சிருஷ்டிக்க எவ்வளவு காலமாயிற்று என்பது நமக்கு அடுத்ததல்ல. அவர் தமது காலத்தில் விதைகளை பூமியின் மேல் விதைக்க ஆரம்பித்து காரியங்களை செய்தார். ஆதியிலே என்ற பதம் ஒருவேளை பலகோடிக்கணக்கான வருடங்களைக் குறிக்கலாம். ஆனால் தேவன் ஆதியிலே வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார் என்பது ஒரு கால அளவைக் குறிக்கிறதாயிருக்கிறது! அதுவே பிரச்சனைக்கு ஒரு முடிவையுண்டாக்குகிறது. தேவன் செய்த முதல் காரியம் வானத்தையும், பூமியையும் சிருஷ்டித்ததேயாகும். தேவன் தவறு செய்பவரல்ல. பாருங்கள் ..... “நீ சத்திய வசனத்தை நிதானமாய்ப் பகுத்து போதிக்கிறவனாயும் உன்னைத் தேவனுக்கு முன்பாக உத்தமனாக நிறுத்தும்படி ஜாக்கிரதையாயிரு' என்று பவுல் என்னும் மகத்தான பிரசங்கி தீமோத்தேயுவுக்கு கூறியது போல, திறந்த மனதுடன் அதைப் படிக்கவேண்டும். நானும் அவ்விதம் செய்ய முயற்சிக்கிறேன். 43. தேவ வார்த்தையின் பேரில் அத்தகைய விசுவாசம் நான் கொள்வதினால், சில சுயத்தோற்றமான பொருளை நான் ஆதரிப்பதில்லை. ஏனெனில் வேதத்திலுள்ள எந்த தீர்க்கதரிசனமும் சுயத் தோற்றமான பொருளையுடையதாயிராது என்று வேதம் கூறுகிறது. ஆவியானவர் சற்று முன்புதான் அதை எனக்கு வெளிப்படுத்தினார். அந்த வசனம் எனக்கு தெரியும். ஆனால் அது எந்த பாகத்திலிருக்கிறது என்பதை நிச்சயமாய் அறியாதவனா யிருந்தேன். வசனத்தைக் குறித்துக் கொள்பவர்கள் அதை எழுதிக் கொள்ளுங்கள். பேதுரு என நான் நினைக்கிறேன்.  44. ஆகவே, ஒரு ஊக்குவிக்கப்பட்ட (Inspired) எழுத்தாளர் கூறினால் ... ஏதோ ஒன்றிற்கு அது தவறாயிருக்குமானால், அதன் வேறு பாகங்களும் எவ்வளவு தவறாயிருக்கும்? ஒன்று அது எல்லாம் தவறாயிருக்க வேண்டும், அல்லது எல்லாம் உண்மையாயிருக்க வேண்டும். அதினின்று வேறு எதையும் நீ ஏற்படுத்த முடியாது, நீங்கள் ஒரு சபைக்கு செல்வீர்களென்றால், அது சரியான சபையென்று கூற முடியுமா? எது உண்மையான சபை? விசுவாசமானது ஏதாகிலும் ஒன்றில் இளைப்பாற வேண்டி நீங்கள் திரும்பவும் வரவேண்டியதாயிருக்கிறது, பாருங்கள். என்னைப் பொறுத்த மட்டில் அது தேவனுடைய வார்த்தையின் பேரில் உள்ளது. மேலும் வேத புத்தகமானது, ஜனங்களுக்காக எக்காலத்திலும் தேவனுடைய வரைப்படமாகத் திகழ்கிறது என்று விசுவாசிக்கிறேன்.  45. வேதவாக்கியங்கள் எல்லாம் நிறைவேற வேண்டும் என்று இயேசு கூறினார். அதாவது, வேதத்தில் எழுதப்பட்டுள்ள? (இதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள், ஏனெனில் நான் போதகத்தின் கடைசியில் இந்தப் பொருளுக்கு திரும்பவும் வருவேன்). இப்பொழுது அது சற்று ஆழமாய் உங்களுக்குப் பதியட்டும். பாருங்கள்? வேதவசனங்கள் யாவும் நிறைவேறியே ஆகவேண்டும். தேவன் எதையாகிலும் கூறியிருப்பாராகில், அது நிச்சயமாக நிறைவேற வேண்டும்! அப்படியில்லையென்றால் அது தேவனுடைய வார்த்தையாயிருக்க முடியாது. அது அவ்விதம் தேவ வார்த்தையா யிராவிட்டால் நம்முடைய நிலைமை என்ன? தேவனைப் போன்று இருக்கும் ஏதாகிலும் ஒன்றை நாம் தெரிந்து கொள்வோம், அல்லது நம் விருப்பப்படி காரியங்களை செய்வோம் "புசித்து குடித்து சந்தோஷமாயிருப்போம், ஏனெனில் ஒரு வேளை நாம் நாளை மரித்துப் போவோம்'' என்ற விதமாய் நாமும் இருப்போம், பாருங்கள்? 46. அது தேவனுடைய வார்த்தையாயிராவிட்டால் நாம் அனைவருமே இழக்கப்பட்டவர்களாய் இருப்போம். தேவனுடைய வார்த்தையாயிருக்கும் பட்சத்தில், தேவன் அதின் மேன்மையை காக்க கடமைப்பட்டவராயிருக்கிறார்! எல்லா மேன்மைக்கும் கனத்திற்கும், ஊற்றும், ஆரம்பமும், மூலக்காரணமு மானவர், எல்லா சரித்திரத்திற்கும் காரணமானவர், தாம் கூறுகின்ற காரியத்தை நிச்சயமாக காக்க வேண்டும். அவ்விதம் அது தேவ வார்த்தையாயிராவிட்டால், பின் யார் தேவன்? அவர் எங்கே இருக்கிறார்? அல்லது தேவன் என்று ஒருவர் உண்டா ? என்பன போன்ற கேள்வி தோன்றிவிடும். 47. "ஓ, சகோ, பிரன்ஹாமே, நான் அதை உணர்கிறேன்" என்று நீ கூறலாம். ஓ, அஞ்ஞானி கூட தன்னுடைய விக்கிரக வணக்கத்தில் அவ்விதம் கூறுகிறான். பிரயாணமாய் சென்று உனக்கென்று நீ சில காரியங்களைப் பார்த்தால் பிரயோஜனமாயிருக்கும். "நான் இதைப்பார்ப்பதினால் விசுவாசிக்கிறேன்'' என்று கூறலாம். ஆம். “நான் இவ்விதம் மாறியதினால் விசுவாசிக்கிறேன்' என்று கூறலாம். 48. நான் கூட அவ்விதம் செய்கிறேன். ஆனால் ஒரு காரியத்தை ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள். அஞ்ஞானிகள் கூட அதே காரியங்களை செய்கிறார்கள். தங்களைக் கிறிஸ்தவர்களென்று கூறிக்கொள்ளும் இங்குள்ள அமெரிக்கர்களை, ஆதிவாசிகளாகிய விக்கிரக வணக்கம் செய்யும் பல ஆப்பிரிக்க ஜனங்கள் தங்களுடைய நல் ஒழுக்கத்தினாலும், சுத்தத்தினாலும் வெட்கப் படுத்துவார்கள். அவர்கள் இவ்விதம் இருப்பதினால் அவர்கள் பின்பற்றும் தெய்வம் உண்மையாயிருக்குமோ? நான் எதை குறிப்பிடுகிறேன் என்பதை கவனிக்கிறீர்களா? ஒரு காரியத்தை நீங்கள் அதன் வெளித்தோற்றத்தின்படி பார்க்கும் போது, அது இங்கே ஒரு மகத்தான பெரிய வட்டத்தினால் மூடப்பட வேண்டியதாயுள்ளது; ஆகவே நீங்கள் எங்காவது ஒரு இடத்திற்கு திரும்பி வந்து உங்கள் கைகளை அங்கு வைத்து, இதுதான் அது என்று நிச்சயப்படுத்த வேண்டும். 49. லுத்தரன்கள் உரிமைக் கொண்டாடுவதை கவனிப்போம். அவர்கள் தவறுகிறார்கள், அவ்விதமே, கத்தோலிக்கர்கள், பாப்டிஸ்டுகள், பெந்தகோஸ்தேயினர் எல்லோரும் தவறுகிறார்கள். ஆகவே அவர்களில் யாரிலாகிலும் நீங்கள் நம்பிக்கை வைக்க முடியாது. ஆனால், தேவன் யாரையாகிலும் கொண்டு வேதத்தில் எழுதப்பட்ட ஒன்றையாகிலும் அது சத்தியம் தான் என்று நிரூபிக்காமலிருந்ததில்லை. பாருங்கள்? அது உண்மை. 50. நான் அடிக்கடி உங்களிடம், "ஒரு வேளை என் விசுவாசம் ஏனோக்கு ஏறியபடி உயர ஏறாவிடினும், அவ்விதம் ஏறுபவர்களின் வழியில் நான் குறுக்கே நிற்க மாட்டேன்" என்று கூறுவதுண்டு. மகத்தான விசுவாசம்... 51. நான் ஏன் வேதத்தை விசுவாசிக்கிறேன் என்பதின் காரணங்களுக்கு இப்பின்னணியினைக் கொண்டு அங்கிருந்தே என்னுடைய பிரசங்கத்தின் பொருளையும் எடுக்கிறேன். . 52. அடுத்து, வேதம் தன்னில் தானே முரண்பட்ட தாயிருக்கிறது என்பதை நான் விசுவாசிக்கவில்லை, உலகம் முழுவதிலும் அவ்விதம் சொல்பவர்கள் யாராயிருந்தாலும் அவர்களுக்கு நான் சவால் விடுத்து அதை நிரூபிக்க அறை கூவல் விடுத்திருக்கிறேன். வேதம் தன்னிலே முரண்பட்டதல்ல; நீங்கள் தான் அதை முரண்பட்ட தாக்குகிறீர்கள். தேவன் தம்மையே முரணாக்க முடியாது, அவ்விதம் செய்வாரென்றால் அவர் தேவனாயிருக்க முடியாது. இந்த வார்த்தைதான் தேவன். இந்த வார்த்தை முரண்பட்டது என்றால், நீங்கள் தேவனை முரண்பட்டவராக்குகின்றீர்கள். பின்பு உங்கள் தேவன் எங்கே? என்ற பிரச்சனை எழும் - அது சற்று குழப்பமாய் காணப்படுகிறதல்லவா?  53. தேவன் முரண்பட்டவராயிருப்பின், அவர் உங்களையும் என்னையும் போல் ஒருவர் தான். ஏனெனில் அவர் தன்னிலே முரண் பட்டவராயிருக்கிறாரே! தேவனுடைய வார்த்தை அங்கே இருக்கிறது, ஆனால் அது ஞானிகள், கல்விமான்களின் கண்களுக்கு மறைந்திருக்கிறது. 54. ஆகவேதான். மத்தேயு 28:19ல், "நீங்கள் உலகமெங்கும் போய் சர்வசிருஷ்டிக்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கித்து, பிதா, குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்தினாலே ஞானஸ்கொடுங்கள்” என்பதும் "நீங்கள் ஒவ்வொருவரும் மனந்திரும்பி இயேசுவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளுங்கள்,'' என்பதும் அப்போஸ் தலர் 2:38ல் ஒன்றிற்கொன்று முரண்பட்டதாயிருக்கின்றது என்று பலர் கூறுகின்றனர். அது அவ்விதம் முரண்பட்டதாயில்லை. 55. நீங்கள் இயேசு கிறிஸ்துவின் நாமத்தை உபயோகித்து ஞானஸ்நானம் பெறவில்லையென்றால், பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்தினால் ஞானஸ்நானம் பெறவில்லையென்று பொருள்! பிதா குமரன் பரிசுத்த ஆவியின் நாமத்தினால் மட்டும் ஞானஸ்நானம் பெற்றிருப்பீர்களென்றால் அது, நீங்கள் ஒரு நாமத்திற்குரிய பட்டப்பெயர்களால் ஞானஸ்நானம் பெற்றிருக்கிறீர்கள் என்று பொருள். இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் ஞானஸ்நானம் பெறுவது சரியான வெளிப்பாடில்லை யென்றால், வேதமானது தவறாயிருக்க வேண்டும். ஏனெனில் வேதத்தில் ஞானஸ்நானம் பெற்ற அனைவரும் இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலேயே பெற்றிருக்கின்றனர். இயேசு கிறிஸ்து பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்தினால் ஞானஸ்நானம் கொடுக்கக் கட்டளை கொடுத்தார். ஆனால் ஒவ்வொரு அப்போஸ்தலனும் அந்த காலம் முதல் இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் கொடுத்துள்ளதால், வேதமானது தன்னிலே முழுவதும் முரண்பட்டது என்றனர். அது அவ்விதம் இல்லை. அவர் எதைக் குறிப்பாக சொன்னாரோ அதையே அவர்கள் செய்தார்கள். பட்டப்பெயர்களினால் அல்ல. ஆனால் அதற்குரிய நாமத்தினால் அவர்கள் ஞானஸ்நானம் கொடுத்தார்கள். ஆகவே, அதில் எந்தவிதமான முரண்பாடும் இல்லை.  56. ஜனங்கள், வேதம் முரண்பாடாயிருக்கிறது என்று சொல்வதான இன்னும் எத்தனை காரியங்களை நான் உங்களுக்கு எடுத்து விளக்கட்டும்? அநேக காரியங்களை நான் இங்கு எழுதி வைத்திருக்கிறேன், யாராகிலும் அத்தகைய முரண்பாடுகளை எனக்கு காண்பிக்க சொல்லி ஏறத்தாழ 30 வருடங்களாக நான் அறை கூவிக்கொண்டிருக்கிறேன். அது அவ்விதமாக இல்லை ஐயா, அது எல்லாம் சத்தியமாயிருக்கிறது. சத்தியமே தவிர அது வேறொன்றுமில்லை. நம்முடைய விசுவாசம், தேவன் எதை கூறினாரோ அதன் பேரிலே இளைப்பாறிக் கொண்டிருக்கிறது. அதை வியாக்கியானப்படுத்த முயற்சி செய்யாதீர்கள்; அது எவ்விதம் கூறுகிறதோ அவ்விதமே கூறுங்கள். உங்களுடைய சொந்த வியாக்கியானத்தை அதற்குக் கொடுக்க வேண்டாம், அதற்கு மிஞ்சினது ஒன்றுமில்லை என்று நான் விவாசிக்கிறேன்.  57. இவ்விதம் நான் கூறுவது உங்களைப்பாதிக்கும் என்று நம்பு கிறேன். ஆனால் அது என்னைப் பாதிப்பதில்லை; நான் ஏன் அவ்விதம் விசுவாசிக்கிறேன், எதற்காக விசுவாசிக்கிறேன், நான் செய்த காரியங்களிலெல்லாம் எவ்விதம் நடந்து கொண்டேன் என்பதை உங்களுக்குக் கூறவும், இது என்னுடைய தெளிவான உணர்வா யிருப்பதினால் மட்டும் இக்காரியங்களை செய்தேன் என்று உலகிற்கு என்னை காண்பிக்கவே நான் முயற்சிக்கிறேன்.  58. இந்த வேதத்துடன் எந்த வார்த்தையாவது கூட்டப்பட்டாலோ அல்லது அதைச் செய்கின்ற குற்றத்திற்குள்ளாகிறவன் யாராயிருந்தாலும், அவன் பங்கு ஜீவபுஸ்தகத்திலிருந்து எடுத்துப் போடப்படும் என்றே நான் விசுவாசிக்கிறேன். "ஒருவன் இவைகளோடே எதை யாகிலும் கூட்டினால், இந்தப் புஸ்தகத்தில் எழுதியிருக்கிற வாதைகளை தேவன் அவன் மேல் கூட்டுவார். ஒருவன் இந்தத் தீர்க்க தரிசனப் புஸ்தகத்தின் வசனங்களிலிருந்து எதையாகிலும் எடுத்துப் போட்டால், ஜீவபுஸ்தகத்தி லிருந்தும், பரிசுத்த நகரத்திலிருந்தும், இந்தப் புஸ்தகத்தில் எழுதப்பட்டவை களிலிருந்தும், அவனுடைய பங்கை தேவன் எடுத்துப் போடுவார்" (வெளி. 22: 18 -19) இவ்விதம் செய்பவருக்கு இவ்வசனத்தில் குறிப்பிட்ட விதமாய் சம்பவிக்கும் என நான் விசுவாசிக்கின்றேன். எந்தப் பிரமாணத்தையும், கோட்பாட்டையும் நான் விசுவாசிப்பதில்லை. ஆனால், எளிமையான தேவனுடைய வார்த்தை மட்டுமே தேவனு டைய திட்டம் என்பதை விசுவாசிக்கிறேன். இதற்கு மாறானவைகள் பாவமாகும்; எந்த மனிதனும், எந்த கோட்பாடும், எந்த ஸ்தாபனமும், அல்லது எதுவாயிருந்தாலும் தேவ வார்த்தை யோடு ஒன்றை கூட்டினாலும் அல்லது அதின் ஒரு நிறுத்தக் குறியீட்டை (Punctuation) எடுத்துப் போட்டாலும் அது விசாரிக்கப்படத்தக்கதும் நித்தியமாக இழக்கப்பட வேண்டியதாயு மிருக்கிறது. தேவன் ஒரு புத்தகத்தை எழுதி அதை ஒரு கூட்ட ஜனங்களின் கைகளில் கொடுத்து, அவர்களை குழப்பமடையச் செய்து, பின்பு அதே புத்தகத்தைக் கொண்டு இவ்வுலகத்தை நியாயந் தீர்க்கப்போவதற்கு, அவர் ஒன்றும் நேற்றைய கால தேவனில்லை. ஆனால் இந்த வேதத்தை எழுதிய தேவன் இன்றும் ஜீவிக்கிறார். அதுமட்டுமன்று, தம்முடைய வார்த்தையில் ஜீவித்தும் வார்த்தையை நிரூபித்தும் காண்பிக்கிறார். (இவைகளை நீங்கள் படிக்கும் போது மிகவும் உன்னிப்பாக கவனிக்க வேண்டுகிறேன்)  59. நான் ஆதியாகமத்தில் இதை தொடங்கி, வெளிப்படுத்தின விசேஷம் முடிய இது தேவனுடைய வார்த்தைதான் என்பதை இணைத்துக்காண்பித்தேன். ஒருவன் இவைகளோடே கூட்டினாலும், எடுத்துப்போட்டாலும், அவனுடைய பங்கு ஜீவபுஸ்தகத்திலிருந்து எடுத்துப் போடப்படும் என்று வெளிப்படுத்தின விசேஷம் கூறுகிறது. நான் அதற்குரிய வசனத்தை சற்று பின்பு உங்களுக்குக் குறிப்பிடுகிறேன். பாருங்கள்?  60. வெளிப்படுத்தின விசேஷம் முதல் அதிகாரம் காண்பிப்பது என்ன? வார்த்தை என்பது என்ன? அது நித்தியமாயிருக்கிறது. அது மீறப்படவோ, அல்லது கூட்டவோ, குறைக்கப்படவோ கூடாது பாருங்கள்? அது மீறப்படக்கூடாது. தேவன் அதைப் பார்த்துக்கொள்வார். அதனுடன் எந்த ஒன்றையும் கூட்டக் கூடாது. அது நித்தியமாயிருப்பதால் அதனின்று ஒன்றையும் எடுத்துப்போடக் கூடாது. பாருங்கள். இவ்விரண்டிற்கும் (ஆதியாகமம் - வெளிப்படுத்தின விசேஷம்) இடையில் கூறப்பட்டவைகள் ஒன்றோடும் கலக்காது என்ற அடிப்படையை உங்களுக்குக் காண்பித்து நான் பேச முயற்சிக்கிறேன். வெளிப்படுத்தின விசேஷம் கடைசி அதிகாரம்.  61. இங்குதான் காலையிலிருந்து மாலை 5 மணி வரையில் நடைபெறும் இக்கூட்டத்திலே, நாம் ஒரிவரிலொருவர் வித்தியாசப் படப் போகிறோம். பாருங்கள்? நாம் இங்குதான் ஒருவரிலொருவர் வித்தியாசப்படப் போகிறோம். இங்குள்ள எத்தனைபேர் இது தேவனுடைய நியாயத்தீர்ப்பு புத்தகமென்றும், இந்த தேவவார்த்தையின்படியே தேவன் நியாயந்தீர்க்கப் போகிறார் என்பதையும் ஆமோதிக்கிறீர்கள்? அதனோடு ஒன்றையும் கூட்டவும், குறைக்கவும் கூடாது. அப்படியானால் இவ்விதம் ஏன் நடந்திருக்கின்றது? நாம் இப்பொழுது அதைக் காணப்போகிறோம். ஏன் இவ்விதம் முரட்டாட்டமான விதத்தில் காரியங்கள் நடைபெற்றிருக்கின்றன? நம்முடைய நாட்களிலும், ஒவ்வொரு காலங்களினூடேயும் நடைபெற்ற, நடைபெறுகின்ற காரியங்களை ஆதியாகமத்திற்கும் வெளிப்படுத்தின விசேஷத்திற்கும் இடையில் நாம் காணப் போகிறோம். 62. நான் அதை ஒலிநாடாக்களில் மிகத்தெளிவாக்கட்டும். தேவனுடைய வார்த்தையை நான் ஏன் விசுவாசிக்கிறேன் என்றும், தேவன் அதைக் குறித்து என்ன கூறுகிறார் என்றும், எவ்விதம் அதனோடு ஒன்றையும் கூட்டவோ, குறைக்கவோ கூடாது என்று கூறின பிறகு, நான் பேச நிர்ணயித்து வைத்திருக்கும் இந்த நீண்ட பொருளின் ஆழமான பாகத்திற்கு சென்று என்ன நடந்தது என்பதை விவரித்து காண்பிக்க விரும்புகிறேன்; அப்பொழுது நீங்கள், நான் விசுவாசிக்கின்றதையும், ஏன் அதை விசுவாசிக் கின்றேன் என்பதையும் அறிந்துகொள்ள முடியும். பாருங்கள்? 63. தேவனுடைய வார்த்தை எதனோடும் கலக்கவோ அல்லது கலப்பினமாக்கவோ முடியாது. அது கலப்பினமாகாது. இன்றுள்ள உலகம் கலப்பினம் செய்வதில் சிறந்ததாய் விளங்கி, விலங்குகள், பயிர்கள், கோதுமை முதலானவைகளை கலப்பினமாக்கி, வீரிய உற்பத்தியை உண்டாக்குகிறது. ஆனால் அது நலமானதல்ல. அது ஜீவனில்லாமல் அழிந்து போகக் கூடியவையாயிருக்கிறது. தன்னில்தானே பிரதியுற்பத்தி செய்யக்கூடாதவையாயிருக்கிறது. அது மரித்ததாயிருக்கிறது. ஏனெனில் இன்று பூமியில் காணப்படும் யாவும் ஆரம்பத்தில் தேவனுடைய உரைக்கப்பட்ட வார்த்தை யினால் உண்டாக்கப் பட்டவையாகும். 64. ஒரு கோவேறு கழுதையானது, கலப்பினத்தால் பிறந்தமை யால் அது தன்னைத்தானே பிரதியுற்பத்தி செய்து கொள்ள முடி யாது, தேவன் ஒரு குதிரையையும், கழுதையையும் உண்டாக்கினார். ஆனால் மனிதன் இவையிரண்டையும் சேர்த்து கலப்பினமாக்கி அதனின்று ஒரு கோவேறு கழுதையைப் பெற்றான். அது ஒரு கலப்பினம்; ஆகவே அது திரும்பவும் தன்னை உற்பத்தி செய்து கொள்ள முடியாது. (இன்னும் சிறிது நேரத்தில் நாம் சர்ப்பத்தின் வித்தை கவனிக்கப் போகிறோம்). அதனால் தன்னை உற்பத்தி செய்துகொள்ள முடியாது.  65. "உரைக்கப்பட்ட வார்த்தையே மூல வித்து” என்பதே என்னு டைய பிரசங்கத்தின் மூலப்பொருள். அதை நான் நிரூபிக்க விரும்புகிறேன். இப்பொழுது நாம் மத்தேயு எழுதின சுவிசேஷம் 24ம் அதிகாரம் 35ம் வசனத்தை சற்று நேரம் ஆராய்வோம். (நமக்கு எவ்வளவு நேரமிருக்கிறது என்று பார்போம்) இயேசு சொன்ன வார்த்தையை வாசிக்க விரும்புகிறேன். மத்தேயு 24 மற்றும் அந்த 35 ஆம் வசனம். 24 ஆம் அதிகாரம் 35ஆம் வசனம் வார்த்தையானது எவ்வளவு நித்தியமாயிருக்கிறது என்பதை காண்பிக்கிறார். (நாம் அதைக் குறித்துதான் பேசிக்கொண்டிருக்கிறோம்).  "இவைகளெல்லாம் சம்பவிக்கு முன்னே இந்தச் சந்ததி ஒழிந்து போகாதென்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் (34ம் வசனம்) வானமும் பூமியும் ஒழிந்து போகும், என் வார்த்தைகளோ ஒழிந்து போவதில்லை (35ம் வசனம் )  66. இவ்வசனங்களுடன் நீங்கள் எதையாகிலும் கலக்கமுடியுமா? இப்பொழுது நான் வெளிப்படுத்தின் விசேஷம் 22ம் அதிகாரம் 18 19ம் வசனங்களைப் படிக்க விரும்புகிறேன். இது என்ன கூறுகின்றது என்று நாம் பார்ப்போம். நாம் 18ம் வசனத்திலிருந்து ஆரம்பிப் போம். "இந்த புஸ்தகத்திலுள்ள தீர்க்கதரிசின வசனங்களைக் கேட்கிற யாவருக்கும் நான் சாட்சியாக எச்சரிக்கிறதாவது (ஆதியாகமம் தொடங்கி அவர் பேசின வார்த்தைகள் என்பதை கவனிக்கவும்), யாவருக்கும் நான் சாட்சியாக எச்சரிகிறதாவது; (அது குருக்களுக்கும், கத்தோலிக்க பிரதான குருவுக்கும் (pope), கண்காணிக்கும், மாநில சபை தலைவருக்கும் அல்லது வேறு எவருக்கும்) ஒருவன் இவைகளோடே எதையாகிலும் கூட்டினால், இந்த புஸ்தகத்தில் எழுதியிருக்கிற வாதைகளை 'தேவன் அவன் மேல் கூட்டுவார்." 67. உங்களுடைய கோட்பாடுகளைக் குறித்த காரியம் என்ன? நீங்கள் செவிகொடுத்துக் கொண்டிருக்கிற எல்லா ஸ்தாபனங்களின் வேத வசனசார்பற்ற பிரமாணங்களைக் குறித்தக் காரியம் என்ன? இவர்களில் ஒருவரும் மன்னிக்கப்பட முடியாது! "ஒருவன் இந்தத் தீர்க்கதரிசன புஸ்தகத்தின் வசனங்களி லிருந்து எதையாகிலும் எடுத்துப் போட்டால், (அது அவ்விதம் இல்லை என்று அவர்கள் கூறுகிறார்கள்; உங்களுக்குத் தெரியுமா?) ஜீவபுஸ்தகத்திலிருந்தும், பரிசுத்த நகரத்திலிருந்தும், இந்தப் புஸ்தகத்தில் எழுதப்பட்ட வைகளிலிருந்தும், அவனுடைய பங்கைத் தேவன் எடுத்துப் போடுவார்." 68. ஒரு பிரசங்கியாயிருந்தாலும், தன்னுடைய ஜீவியகால மெல்லாம் சபையின் அங்கத்தினனாக இருந்தாலும், ஒரு கண் காணியோ அல்லது கத்தோலிக்க மதகுருவாயிருந்தாலும், யாரேனு மொருவன் இதிலிருந்து ஒரு வார்த்தையை எடுத்துப் போட்டால் - ஒரே ஒருவார்த்தை! ஏவாள் ஒரு வர்த்தையை அவிசுவாசித்ததே இவ்வளவு உபத்திரவத்திற்கும் காரணமாயிற்று என்பதை நீங்கள் உணருகிறீர்களா? ஒரு உரைக்கப்பட்ட தேவனுடைய வார்த்தை யாகிய சத்தியத்தை ஏவாள் சந்தேகித்ததினால், ஒவ்வொரு வியாதிக்கும், உபத்திரவப்படும் குழந்தைக்கும், மருத்துவமனைகள் கட்டப்படுவதற்கும், அறுவை சிகிச்சை செய்யப்படுவதற்கும், எல்லா மரணத்திற்கும் காரணமாயிற்று. அதுதான் காரியம். 69. ஏவாள் எதைச் செய்ய முயற்சித்தாள்? அவள் தேவனுடைய வார்த்தையை ஏதோ ஒன்றினுடன் கலப்பினமாக்கிவிட்டாள். தேவன் கூறின விதமாக நீங்கள் அதை எடுத்துக்கொள்ள வேண்டும்! அதை எதனோடும் கலக்கமுடியாது. இல்லை, ஐயா. ஒரு சமயம் இயேசு, "கடுகு விதையளவு விசுவாசம் உங்களுக்கிருந்தால் .......'' என்று கூறினார். இந்த கடுகு விதையை எதனோடும் கலப்பினமாக்க முடியாது என்று என்னிடம் கூறினார்கள். உங்களால் அதை கலப்பினமாக்க முடியாது. மற்ற எல்லா விதைகளையும் நீங்கள் கலப்பினமாக்கலாம். ஆனால் கடுகு விதையை மட்டும் கலப்பின மாக்க முடியாது. பாருங்கள், ஏனெனில் அது எதனோடும் கலக்காது. அந்த விதமான விசுவாசம் உங்களுக்கிருந்தால் நலமாயிருக்கும். இங்குதான் சுவிசேஷகர்கள் தவறுகிறார்கள். (இதைக் குறித்து பின்னால் பார்ப்போம்) "ஓ, நாங்கள் இதை விசுவாசிக்கிறோம்" என்கிறார்கள். அவர்கள் அந்த ஒரு வார்த்தையை எடுத்துக்கொண்டு விசுவாசித்து அதை கிரியை செய்யவும் வைப்பார்கள். ஆனால் அதை தொடர்ந்து உள்ள வார்த்தையைப் பற்றியென்ன? "ஜீவ விருட்சத் தின்மேல் அதிகாரமுள்ளவர்களாவதற்கும், வாசல்கள் வழியாய் நகரத்திற்குள் பிரவேசிப்பதற்கும் அவருடைய கற்பனைகளின்படி செய்கிறவர்கள் பாக்கியவான்கள். நாய்களும், சூனியக்காரரும், விபச்சாரக்காரரும், கொலைபாதகரும், விக்கிரகாராதனைக்காரரும், பொய்யை விரும்பி அதின்படி செய்கிறயாவரும் புறம்பே இருப்பார்கள்" என்று வேதம் கூறுகிறது. 70. இங்கு பல ஜனங்களும் கலந்துள்ளார்கள், ஆனாலும் நான் சொல்லவேண்டிய பல வெளியரங்கமான மூலக்காரியங்கள் என்னிடம் உண்டு. ஆகவே சகோதரிகள் அதை மிக நிச்சயமாக புரிந்துகொள்ளவேண்டும் என்று நான் விரும்புகிறேன். பாருங்கள்? 71. தேவனுடைய உரைக்கப்பட்ட வார்த்தையே ஆரம்பமான தாகும். அது தேவனுடைய வார்த்தையாயிருப்பதினால் நாம் அதை விசுவாசிக்கிறோம். தேவன் உண்டாக்கின (நிலைகொள்ளும்படி உரைக்கப்பட்ட) ஒவ்வொரு காரியமும் ஆரம்பம், அல்லது மூலமாகும். அவருடைய சில சிருஷ்டிப்பை நீங்கள் இரண்டாந் தரமாக கலப்பினமாக்க முடியும். ஆகவே ஏவாள் தேவனுடைய ஆரம்ப சிருஷ்டிப்பில் காணப்படாமல் ஆதாமின் ஒரு உபசிருஷ்டி யாயிருந்ததால், அவள் தன்னுடைய சொந்த வித்தினால் அதை செய்ய முடிந்தது. தேவன் எல்லாவற்றையும் சிருஷ்டித்துவிட்டு, பின்பு தாம் உண்டாக்கின சிருஷ்டியிலிருந்து ஒரு பாகத்தை எடுத்து அதினின்று ஒரு துணையை ஆதாமிற்கு உண்டாக்கினார்.  72. நீங்கள் ஒரு கழுதையையும், குதிரையையும் கலப்பினமாக்க முடியும், ஆனால் அது நீடிக்கமுடியாது! அது மரணம்! ஆனால் மூலவித்தோ ஜீவனுள்ளதாயிருக்கிறது. அது திரும்பவும் தன்னை உற்பத்தி செய்கிறது! நீங்கள் புரிந்துகொள்கிறீர்கள் என நம்புகிறேன். மூலவித்து ஜீவனுள்ளதாயிருக்கிறது. இக்காரணத் தினால்தான் எந்த மத நம்பிக்கையும் ஸ்தாபனங்களும், கூட்டமைப் புகளும் மரிக்கின்றன என நான் நினைக்கின்றேன். அவை ஒவ்வொன்றும் மரித்தன என்று சரித்திரமானது நிரூபிக்கும். அவைகள் ஒருபோதும் திரும்ப எழுந்திருப்பதில்லை, அவைகளால் முடியாது. அவர்கள் கருவில்லாதவர்களாயிருப்பதினால் திரும்பவும் தங்களை உற்பத்தி செய்யமுடியாது. ஆகவேதான் ஏவாளின் பிள்ளைகள் மரிக்கின்றனர். 73. நீங்கள் கற்றுக்கொள்ளத்தக்கதாக நான் நிதானமாக போதிக்க விரும்புகிறேன். இதற்கு பின்பு என்ன சம்பவிக்கும் என்பதை நான் அறியாதவனாயிருப்பதினால், இவைகள் ஜனங்களிடத்தில் செல்லவேண்டுமென்று நான் விரும்புகிறேன். என்றோ ஒருநாள், நான் அவருடைய வருகையைக் காணத்தரித்திராமல் இவ்வுலகை விட்டு எடுத்துக் கொள்ளப்பட்டாலும், இச்செய்தி தொடர்ந்து ஜீவிக்கும். அது உண்மை . வார்த்தையில் நிலைத்திருங்கள். 74. தேவன் உரைத்த ஒவ்வொரு வார்த்தையும் மூலவித்தாகும் என்பதை நினைவு கூறுங்கள். தேவன் ஒவ்வொன்றையும் தமது வார்த்தையினால் நாட்டினார், நீங்கள் அவருடைய மூலவித்தில் நிலைத்திருக்கும் வரை, அது தன்னில் தானே பிரதியுற்பத்தி செய்யும். கலப்பினமாக்கினால் அது மரிக்கும்! எப்பொழுதாவது ஒரு பெண் கலப்பினமாக்கப்பட்டாளென்றால் அது ஏவாள்தான். 75. நான் சிறிது நேரத்திற்குப்பின் அது ஏன் என்று உங்களுக்குக் காண்பித்து நிரூபிக்கும் முன்பாக உங்களில் சிலர் உங்கள் ஒலி நாடாக்களை நிறுத்தமாட்டீர்கள் என்றே நான் நம்புகிறேன்.  76. அவள் ஒரு மணவாட்டி, அவள் கலப்பினமாக்குகிறவளா யிருந்தாள். அவள் அதன் மூலமாக தேவனுடைய வார்த்தையோடு ஞானத்தைக் கலந்து மரணத்தை கொண்டு வந்தாள், என்று கவனியுங்கள். நீங்கள் அவ்விதம் செய்யக்கூடாது. உங்களுக்கு அதை விளக்கக்கூடிய ஞானம் இருந்தாலும், "தேவன் கூறினார்" அதுவே அதற்கு முடிவு'' என்று கூறுங்கள். உங்களால் விளக்க முடியவில்லையென்றால் அதை அவ்விதமே விட்டுவிடுங்கள், தேவன் கூறினார், ஆகவே அது அவ்விதமாயுள்ளது என்று மட்டும் கூறுங்கள்.  77. இப்பொழுது கவனியுங்கள். அது எதனுடனும் கலக்காது. அது மீறப்படக் கூடாது. அது தேவனுடைய வார்த்தையாக மட்டும் இருப்பதால் அது எதனோடும் கலக்காது. அதை தாறுமாறாக்கு கிறவனை தேவன் தண்டிப்பார். அது தேவனுடைய வார்த்தையே தேவன் தம்முடைய வார்த்தை யோடு உன்னுடைய வார்த்தையை சேர்க்க அவசியமில்லை. நாம் நம்முடைய சொந்த வார்த்தையைப் பிரசங்கிக்கக்கூடாது, அவருடைய வார்த்தையையே பிரசங்கிக்க வேண்டும்.  78. உண்மையான ஜீவன், அதன் ஆரம்ப இனவிருத்தியினால் மட்டுமே தன்னை பிரதியுற்பத்தி செய்யமுடியும். பாருங்கள்... ஜீவன்... இப்பொழுது, ..... இப்பொழுது அதைப் படியுங்கள்... நீங்கள் ஒலி நாடாக்களை ஆராய்ந்து பார்க்கையில், அதைப் படியுங்கள். ஜீவன் - ஜீ-வ-ன் மூலத்தன்மையினாலேயே தன்னை விருத்தி செய்துகொள்ளும், ஆரம்பத்தில் அது எவ்வாறு தன்னை விருத்தி செய்ததோ அவ்விதமே தன்னை திரும்ப உற்பத்தி செய்கிறது பாருங்கள்? அது கலப்பினமானால் மரிக்கிறது. முதல் சந்ததியில் அது மரித்துவிடுகிறது. சிலர் அவ்விதம் மரித்தனர். அது சரியான ஜீவனைக் கொண்டுவரமுடியாது. ஏனெனில் அது கலப்பின மாயிருக்கிறது.  79. வேதம் தேவன் ஆதியாகமம் 1:11-ல் "பூமியின் மேல் தங்களில் தங்கள் விதையையுடைய கனிகளைத் தங்கள் தங்கள் ஜாதியின் படியே கொடுக்கும் கனிவிருட்சங்களையும் முளைப்பிக்கக் கடவது என்றார்” என்று கூறுகிறது. தேவன் அதை கூறினாரென்றால் அதுவே அதற்கு எப்பொழுதும் முடிவாயிருக்கிறது. "தங்கள் தங்கள் ஜாதியின் படியே கொடுக்கும் கனிவிருட்சங்களை முளைப்பிக்கக் கடவது." கலப்பாக்கும் போது வீரியமுள்ள பயிர் உண்டாகிறது. வீரியப்பயிர் என்றால் என்ன? கவனியுங்கள். கலப்பினமாக்கும் போது அது வீரியமுள்ள பயிரைக் கொண்டு வருகிறதென்பது நிரூபிக்கப்பட்டுவிட்டது. ஆனால் அது எத்தகைய பயிர்? அது மரணத்தை விளைவிக்கும் பொய்யான பயிர்.  80. உங்கள் தானியத்தைக் கலப்பினமாக்கிப் பாருங்கள். அது ஒரு மிகுதியான விளைச்சலைக் கொடுக்கும்; நல்ல விளைச்சலை, மிகச்சிறந்த விளைச்சலைக் கொடுக்கும்; ஆனால் அது மரித்ததாயிருக்கிறது. அதை விதைத்தால் அது தன்னைப் பிரதியுற்பத்தி செய்ய முடியாது. அது ஏவாளைப் போல மரித்துப்போன ஒன்று. பாருங்கள்? இன்று நம்மைப் பாருங்கள். அவள் ஒரு கலப்பின விளைச்சலைக் கொண்டிருந்தாள். நீங்கள் உங்களைச் சுற்றியுள்ளவைகளைப் பார்த்து அது உண்மையென்று கண்டு கொள்ள முடியும். நிச்சயமாக அவ்வாறே நிகழ்ந்தது. அது தேவனுடைய நோக்கம் அல்ல. இல்லை ஐயா. நான் சிந்தித்துக்கொண்டிருப்பதைக் குறித்து சிறிது...  81. மற்றவைகளுடன் கலப்பதின்மூலம் கலப்பினம் உருவாகிறது; பிரதியுற்பத்தியின் பிரமாணத்தின்படி கலப்பின விளைச்சலானது மரித்துப்போன ஒன்றாக உள்ளது. அது தன்னைத்தானே பிரதியுற்பத்தி செய்துகொள்ள முடியாது; அது முடியாத ஒன்று. ஏனெனில் தேவன் அவ்வாறு கூறியிருக்கிறார். அது தன்னுடைய ஜாதியை உற்பத்தி செய்யவேண்டியதாயிருந்தது; நீங்கள் அதை மற்றவற்றுடன் கலந்து விட்டீர்கள். இப்பொழுதே சபையானது சரியாக எங்கே முடிவடையப் போகிறது என்று நீங்கள் காணமுடியும்.  82. அது தன்னுடைய ஜாதியைக் கொண்டுவர முடியாத படியினால் அது அங்கேயே மரிக்கிறது. ஏனெனில் அது கலப்பினமாகிவிட்டது! அதனுடன் நீங்கள் ஒன்றும் செய்ய முடியாது. அது மரித்துவிட்டது; அது முடிவடைந்துவிட்டது. அது சரி. எனவே தான் ஒவ்வொரு சந்ததியும் தேவனுடைய வார்தையைப் பிரசங்கிப்பதற்கான தருணத்தையுடைய அதன் எழுப்புதலைப் பெற்றுக் கொள்கிறது. ஓ, சகல அதிகாரமுடைய தேவன் நியாந்தீர்க்க நிற்கிறார் ...... ஜான் வெஸ்லியின் கூட்டத்தார் எழும்பிக் குற்றப்படுத்துவார்கள். இன்றைய மெத்தோடிஸ்ட்டுகள் அதற்கு பதிலளிக்கவேண்டும்! லூத்தர் எழும்பி நின்று கத்தோலிக்கர்களைக் குற்றஞ்சாட்டுவார். அவருக்குப் பதில் கூற கத்தோலிக்கர்கள் அங்கு நின்றாக வேண்டும். முற்காலத்திய ஐரேனியஸ், மார்ட்டின், பாலிகார்ப் ஆகியோர் எழும்பி நின்று தேவனுடைய வார்த்தையைக் கோட்பாடுகளாகக் கலப்பின மாக்கினவர்களைக் குற்றஞ்சாட்டுவார்கள். லூத்தரின் எழுப்புதல் மறைந்த பிறகு தோன்றிய லூத்தரன்கள் அவர்களின் மீதான குற்றச்சாட்டுக்குப் பதிலளிக்கவேண்டும். ஜான் ஸ்மித்தின் ஏழுப்புதலுக்குப் பிறகு தோன்றிய பாப்டிஸ்ட்டுகள் தங்கள் மீதான ஜான் ஸ்மித்தின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்தாக வேண்டும். அலெக்ஸாண்டர் காம்ப்பெல்லின் எழுப்புதலுக்குப் பின் தோன்றியவர்களும் தங்கள் மீதான குற்றச்சாட்டுக்குப் பதிலளித்தாகவேண்டும். பெந்தேகொஸ்தே ஜனங்களும் தங்கள் மீதான குற்றச்சாட்டுக்குப் பதிலளித்தாகவேண்டும். அந்த உண்மையான எழுப்புதல் தோன்றி, பரிசுத்த ஆவி அவர்கள் மேல் வந்தபோது தேவன் ஒரு கூட்டம் ஜனங்களை வெளியே கொணர்ந்து தம் வார்த்தையை அவர்களுக்குள் அனுப்ப முயற்சித்தார். அவர்களோ தங்களை ஸ்தாபனமாக்கிக் கொண்டு அங்கேயே மரித்துப் போனார்கள்! ஆனால் அவர்கள் என்ன செய்கிறார்கள் என்று பாருங்கள்! என்று கூறலாம்.  83. அதைக் குறித்து இன்று சிறிது நேரம் கழித்துப் பார்ப்போம். அவைகள் அனைத்தையும் குறித்து நாம் பார்ப்போம். அவைகளின் ஆரம்பத்தை நான் குறிப்பிட்டேன். என்ன சம்பவித்தது என்று சிறிது நேரத்திற்குப்பிறகு நான் உங்களுக்குக் காண்பிக்கப் போகிறேன். 84. இப்பொழுது..... எனவே தான் ஒவ்வொரு எழுப்புதலும் ....... ஒவ்வொரு சந்ததியும் தன் காலத்தின் எழுப்புதலைப் பெற்றுக் கொண்டது. தேவன் ஒரு மனிதனை எழுப்பி தம்முடைய வார்த்தையுடன் நிலைநிற்கச் செய்து, அந்தக் காலத்தின் செய்தியுடன் அவனை அனுப்புகிறார். அந்த மனிதன் காட்சி யிலிருந்து மறைந்தவுடனேயே வேறொருவன் அந்த ஸ்தானத்தை எடுத்துக்கொண்டு அவைகளைக் கலப்பினமாக்கிடவே அவர்கள் மீண்டும் மரணத்தில் விழுந்தனர். ஒவ்வொன்றும் கலப்பினமாக்கப் பட்ட து. 85. நான் இங்கு ஒரு நிமிடம் நிறுத்துகிறேன். நமக்கு அவசரமில்லை. பாருங்கள்? காலத்தை சற்றுத் திரும்பிப் பாருங்கள்; அது சரியாக ஆதியாகமத்தில் தொடங்கப்பட்ட விதமாகவே இருக்கிறது. தேவன் மனித இனமாகிய விளைச்சலைத் தோற்று வித்தார். ஏவாள் அதைக் கலப்பினமாக்கிறாள். என்ன சம்பவித்த தென்று பாருங்கள்? அதனால் ஏவாளுக்கு நியாயத்தீர்ப்பு வந்தது. 86. லூத்தர் தன் சபையைத் தோற்றுவித்தார். மற்றவர்களும் தங்கள் தங்கள் காலங்களில் தங்கள் சபைகளைத் தோற்றுவித்தனர் - கிறிஸ்து தம் சபையைத் தோற்றுவித்தார். அப்போஸ்தலர்கள் சபையைத் தோற்றுவித்தனர். தீர்க்கதரிசிகள் தோற்றுவித்தனர் - கலப்பு மார்க்கத்தார் அவர்களை எதிர்த்தனர். தேவன் அனுப்பிய தீர்க்கதரிசிகளில் யாரை உங்கள் பிதாக்கள் துன்பப்படுத்தாமலிருந் தார்கள் என்று இயேசுவானவர் கேட்கவில்லையா?  87. ஒரு ராஜா திராட்சத் தோட்டத்தின் பலனைப் பெற்று வரும்படி முதலில் ஒரு ஊழியக்காரனையும், அதன்பின் மற்ற ஊழியக்காரர்களையும் ஒவ்வொருவராக அனுப்பி, அதன்பின் தன் குமாரனை அனுப்பியதை இயேசு கூறவில்லையா? பாருங்கள். ஒவ்வொரு சந்ததியும் தன் காலத்தின் எழுப்புதலைப் பெற்றும் ஆதாமும் ஏவாளும் ஏதேன் தோட்டத்தில் செய்த கலப்பினத்தின் காரியங்களையே திரும்பவும் செய்தனர். அவர்களில் புத்தியுள்ள கன்னிகைளும், புத்தியில்லாத கன்னிகைகளும் இருந்தனர். அவர்களில் பாதிப்பேர் இழக்கப்பட்டார்கள். இருவரில் ஒருவர் தேவனுடைய வார்த்தையைக் கைக்கொண்டனர்; மற்றவர் அதைக் கலப்பினம் செய்தனர். ஒவ்வொரு காலத்திலும் அவர்கள் எவ்வளவு கடினமாக முடியுமோ அவ்வளவாக அவர்கள் திரும்பிச்சென்று கலப்பினமாகினர். நாம் அதை தேவனுடைய வார்த்தையின் மூலமும் சரித்திரத்தின் மூலமும் நிரூபிப்போம். அது சரி. கலப்பின மாக்குதல். 88. ஆதியாகமத்தில் ஏதேனில் முதன் முதல் கலப்பினமானது தொடங்கப்பட்டு, பின் அது இங்கே வெளிப்படுத்தின விசேஷத்தில் முடிவடைகிறது. வெளிப்படுத்தின விசேஷம் கிறிஸ்துவின் இரண்டாம் வருகையாயிருக்கிறது. சரியாக நினைவு கூறுங்கள். ஆகவேதான் ஒவ்வொரு சந்ததியிலும் அதற்கென்று எழுப்புதலும், வார்த்தையில் ஒருதருணமும் கொடுக்கப்பட்டது. வார்த்தையை எடுத்துக்கொண்டு தொடர்ந்து செல்வதற்கு பதிலாக அவர்கள் அதை கலப்பினமாக்கி எங்கோ சென்று விட்டார்கள். 89. என்னுடைய ஊழியம்: எதற்காக தேவன் என்னை அழைத்தார் என்பதைக் குறித்ததான தனிப்பட்ட காரியத்தை உங்களுக்கும் உலகத்திற்கும் கூறுவேன் என்று நான் உங்களுக்கு சொல்லி யிருந்தேன். பாருங்கள்? இந்த பூமியின் மேல் எனது ஊழியம் என்ன? அது வார்த்தையாகிய அவருக்கு முன்னோடியாயிருப்பதே, வரப்போகிற வார்த்தை கிறிஸ்துவேயன்றி வேறல்ல. கிறிஸ்து அவரிலிருப்பதே ஆயிரவருட அரசாட்சி. மேலும் எல்லாம் அங்கு இருக்கிறது. ஏனெனில் அவரே அந்த வார்த்தை , பாருங்கள்.  90. சரி இயேசு, யோவான் 3:3-5ல் கூறியிருப்பதை இப்பொழுது படிப்போம்.  நீங்கள் அதைக் குறித்தக்கொள்ள விரும்பினால் அது யோவான் 3:5. நாம் அனைவரும் அதை அறிந்துள்ளோம் அல்லது நான் அந்த பகுதிக்குத் திருப்புகிறேன்; ஏனெனில் ஒலிநாடாக்களைக் கேட்பவரில் சிலர் அதைத் திருப்பி படிக்க முடியாமலிருக்கலாம். நாம் யோவான் 3:5க்கு வேதத்தை திருப்பி, நாம் அதற்கு சற்று முன்னுள்ள வசனத்திலிருந்து துவங்குவோம்.  'இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக ஒருவன் மறுபடியும் பிறவாவிட்டால் தேவனுடைய ராஜ்யத்தைக் காண மாட்டான் என்று மெய்யாகவே மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார்.  அதற்கு நிக்கொதேமு: ஒரு மனுஷன் முதிர்வயதாயிருக்கை யில் எப்படிப் பிறப்பான்? அவன் தன் தாயின் கர்ப்பத்தில் இரண்டாம்தரம் பிரவேசித்துப் பிறக்க கூடுமோ என்றான். இயேசு பிரதியுத்தரமாக: ஒருவன் ஜலத்தினாலும் ஆவியினா லும் பிறவாவிட்டால் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்க மாட்டான் என்று மெய்யாகவே மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார்.” 91. இது ஒரு விதையா? ஒவ்வொரு உரைக்கப்பட்ட தேவவார்த்தையும் ஒரு வித்தாயிருக்கிறது. அது உண்மை . இயேசு அதைக் குறித்து எங்கே கூறியுள்ளார் என்பதை நான் இன்னும் சிறிது நேரத்தில் அதை நிரூபிக்கப் போகிறேன். தேவனால் உரைக்கப்பட்ட ஒவ்வொரு வார்த்தையும் ஒரு வித்தியாயிருக்கிறது. ஒரு மனிதன் மறுபடியும் பிறவாவிட்டால்... ஏன் அவன் மறுபடியும் பிறக்க வேண்டும்? அவன் கலப்பினமாகி விட்டதால், தான் இருக்கிறதான சரீரத்திலேயே அவன் மரித்திருக்கிறான். அவன் மறுபடியும் பிறந்தாக வேண்டும். ஏன்? ஏவாளின் பாவத்தினால் அவன் பாவத்திலே பிறந்து, அக்கிரமத்திலே உருவாக்கப்பட்டு, இவ்வுலகத்திற்கு வந்து பொய்களை பேசுகிறான். அவன் ஆரம்பத்திலே பொய்யனாய் இருக்கிறான். அவன் எவ்வளவு தான் படித்தவனாயிருப்பினும், சாதுரியவானாயிருப்பினும், எவ்வளவு பரிசுத்தமானவர்களாய் அவன் பெற்றோர் இருப்பினும், அவன் ஒரு பொய்யனாயிருக்கிறான் என்று வேதம் கூறுகிறது. சத்தியம் என்ன என்பதை கூற வேண்டுமானால் அதை அவன் தன் சொந்த உதடுகளின் வழியாக மட்டுமே சொல்ல முடியும். அந்த ஒரு வழியாகத் தான் சத்தியம் வர முடியும். ஆனால் வார்த்தைக்கு முரணாக வருமானால் இன்னுமாக பொய்யனாயிருக்கிறான்.  92. அது மிகவும் வெளிப்படையாயிருக்குகிறது. ஏனெனில், தேவன் "எந்த மனிதனும் பொய்யன், தேவன் ஒருவரே சத்தியபரர்" என்று கூறியிருக்கிறார், பாருங்கள்? ஒரு மனிதனின் உதட்டின் வழியாக வருவது வேதத்திற்கு முரண்பட்டாதாயும், இந்த தேவ வார்த்தையை மறுதலிக்கிறதாயும் அல்லது வேறொரு காலத்திற் கோ, சந்ததிக்கோ அது சேர்ந்தது என்று கூறி அதற்கு சம்பந்தப் படுத்துவதாயுமிருந்தால் அவன் ஒரு பொய்யனாயிருக்கிறான். அது முற்றிலும் உண்மை . அவன் மனந்திரும்ப வேண்டியதாயுள்ளது, அப்பொழுதுதான் அவனால் எல்லா தேவவார்த்தைகளையும் புரிந்து கொள்ள முடியும். தேவனுடைய ஜீவனை அவன் திரும்பவும் உற்பத்தி செய்ய வேண்டுமாயின் அதற்கு ஒரே வழி, மனந்திரும்புதலேயாகும் - ஜீவன்.  93. ஒருவிதை முளைப்பதற்கு தண்ணீர் அவசியமானது. நீங்கள் ஒரு விதையை பூமியில் போடுவீர்களென்றால் நிலத்தில் ஈரப்பசையில்லாவிடில் அச்செடி வளராது. அச்செடி வளர்வதற்கு சிறிது சதவிகிதமாவது ஈரப்பசை தேவையாயிருக்கிறது. அல்ல வென்றால் அது வளராது. அது சரிதானா? " எழுத்து கொல்லுகிறது. ஆவியோ உயிர்ப்பிக்கிறது” பாருங்கள். அது வளர்வதற்கு ஈரப்பசை தேவையாயிருக்கிறது.  94. அவருடைய வார்த்தை விதையாயிருக்கிறது. இதை நிரூபிப் பதற்கென நாம் லூக்கா 8ம் அதிகாரம் 11ம் வசனத்தைப் படிப் போம். அவருடைய வசனம் விதை என்று சொல்லப்பட்டது உண்மையா அல்லது தவறா என்பதை பார்ப்போம், அதைக் குறித்து தேவன் என்ன கூறினார் என்று நாம் பார்ப்போம்: லூக்கா 8ம் அதிகாரம் 10ம் வசனம். இயேசு ஜனங்களுக்கு போதிக்கத் தொடங்கினார் என்று பார்க்கிறோம், இதைக் குறித்து அநேக காரியங்களை நான் கூற வேண்டியுள்ளது. நாம் 8ம் அதிகாரம் 4ம் வசனத்திலிருந்து படிப்போம். "சகல பட்டணங்களிலுமிருந்து திரளான ஜனங்கள் அவரிடத்தில் வந்து கூடின போது, அவர் உவமையாகச் சொன்னது:  விதைக்கிறவன் ஒருவன் தன்னுடைய விதையை - தன்னு டைய விதையை (ஆங்கில வேதாகமத்திலுள்ளபடி) விதையை விதைக்கப் புறப்பட்டான்; அவன் விதைக்கையில் சில விதை வழியருகே விழுந்து மிதியுண்டது, ஆகாயத்துப் பறவைகள் வந்து அதைப் பட்சித்துப் போட்டது.  சிலவிதை கற்பாறையின் மேல் விழுந்தது; அது முளைத்தப்பின் அதற்கு ஈரமில்லாததினால் உலர்ந்து போயிற்று" 95. ஈரப்பசை :- பாப்டிஸ்டுகள், பிரஸ்பிடேரியன்கள், லூத்தரன்கள் தண்ணீரில்லாமல் காணப்பட்டார்கள். ஒரு மனிதன் குணப்படும் போது, அவன் நேரே கிறிஸ்துவை நோக்கி விசுவாசிக்கிறான். பின் நடப்பதென்னவென்று உங்களுக்குத் தெரியுமா? ஸ்தாபனமானது அவனை ஒரு இடத்தில் கட்டிவைத்து விடுகிறது. பின்பு ஈரப்பசையான ஆவியானது அவனை விட்டு சென்று விடுகின்றது. அவன் ஒரு ஸ்தாபனத்தைச் சேர்ந்தவனாகி மரித்து விடுகிறான். பாப்டிஸ்டுகள் மட்டுமல்ல, பெந்தேகோஸ் தேயினரும் கூட அவ்விதம்தான்! உங்களில் அநேகர் அவ்விதம் இல்லை என்று நான் விசுவாசிக்கிறேன். ஆனால் நீங்கள் சற்று காத்திருங்கள். வேதம் அதை நிலைப்படுத்துகிறதா, இல்லையா என்று நாம் பார்ப்போம். 96. எல்லாம் சரி. ஈரப்பசை குறைவினாலே (தமிழ் வேதாகமத்தில்) 6ஆம் வசனத்தின் கடைசி வார்த்தை "சிலவிதை முள்ளுள்ள இடங்களில் விழுந்தது; முள் கூட வளர்ந்து அதை நெருக்கிப் போட்டது” (7ம் வசனம்)  97. அது என்ன என்பதை கவனித்தீர்களா? “வசனத்தைக் கேட்டவுடன் போய் இப்பிரபஞ்சத்திற்குரிய கவலைகளினா லும் ஐசுவரியத்தினாலும் சிற்றின் பங்களினாலும் நெருக்கப் பட்டு, பலன் கொடாதிருக்கிறார்கள்” (14ம் வசனம்) இல்லாத ஒன்றைக் குறித்து நான் இன்று குற்றம் சாட்டப் போவதில்லை .... இந்த கிறிஸ்தவ வியாபாரிகளும், பெந்தகொஸ்தெ யினரும் மற்ற ஸ்தாபனக்காரர்களும் பல கோடி பணம் செல வழித்து கட்டிடங்களைக் கட்டுகிறார்கள், உலகத்தின் ஐசுவரியம் அவர்களை நெருக்குவதினால் தேவனுடைய மகிமையையும், ஆவியையும் அது எடுத்துப் போடுகிறது. அது நெருக்கப்படுவதினால் மரித்துப் போகிறது. இந்த பிரபஞ்சத்தின் கவலை அவர்களை நெருக்கப்போடுகின்றது. 98. பெண்கள் தங்கள் தலைமயிரைக் கத்தரித்துக் கொண்டும் குறைவான ஆடைகளை உடுத்திக் கொண்டும், உலகத்தாரான மற்றவரைப் போல் கிரியை செய்ய விருப்பங் கொள்கிறார்கள். பிரசங்கிமார்களும் பீடத்தில் நின்று கொண்டு தங்கள் வழக்கமான "ஆமென்” களை சொல்லிக் கொண்டு, ஆகாரம் கிடைக்காது என்ற காரணத்தினால் தேவ வார்த்தையை பிரசங்கிக்க பயப்படுகிறார்கள். அவர்கள் உயர்ந்தரக வாகனமான 'கெடிலாக்" என்ற வாகனத்தில் சவாரி செய்யாமலிருந்தாலோ, உயர்ந்தரக ஆடைகள் அணியா மலிருந்தாலோ, ஜனங்கள் அவர்களை ஆவிக்குரியவர்கள் என்று எண்ணுகிறதில்லை. அது சரி. "அவர்கள் பின்வாங்கி போனவர்கள்” அல்லது "அவர்கள் பைத்தியம் பிடித்தவர்கள்'' என்றெல்லாம் கூறுகின்றனர்.  99. வயதான சகோ. கிட் இன்று காலை என்னிடம் கூறினார், அவருடைய சபையின் ஜனங்கள், அவர் வயது சென்றவராயிருப்ப தினாலும், வார்த்தையை மட்டும் பிரசங்கிப்பதினாலும் இனி அவர் தங்கள் மத்தியில் தேவையில்லையென்று கூறினார்களாம். இதன் காரியம் என்ன? அவர்களுக்கு ஈரம் போதவில்லை. நான் கூறுவது சரி. "சில விதை நல்ல நிலத்தில் விழுந்தது, அது முளைத்து, ஒன்று நூறாகப் பலன் கொடுத்தது என்றார், இவைகளைச் சொல்லி, கேட்கிறதற்குக் காதுள்ளவன் கேட்கக் கடவன் என்று சத்த மிட்டுக் கூறினார்.” (8ம் வசனம்). 100. ஓ! என்னே உவமை! நான் இந்தப் பொருளின்மேல் ஒரு பிரசங்கத்தையே செய்யலாம். அவர் இந்த காரியங்ளைக் கூறினபொழுது... 8ம் அதிகாரம் 8ம் வசனம். "சத்தமிட்டு கூறினார்" (சத்தமிட்டார் என்பது 'நூறாக பலன் கொண்டுவா" என்று கூறினதைப் போன்றிருக்கிறது, கேட்கிறதற்குக் காதுள்ளவன் கேட்கக் கடவன். வேறு விதமாகக் கூறுவோமானால், உங்களுடைய காதுகள் தேவனோடு இசைந்திருந்தால், கேட்கக் கடவீர்கள் என்று பொருள்படும்) பாருங்கள்? "அப்பொழுது அவருடைய சீஷர்கள் இந்த உவமையின் கருத்து என்னவென்று அவரிடத்தில் கேட்டார்கள். அதற்கு அவர் தேவனுடைய ராஜ்யத்தின் இரகசியங்களை அறியும்படி உங்களுக்கு அருளப்பட்டது ..... இரகசியங்கள் (ராஜ்யத்தின் இரகசியம் என்ன? இப்பொழுது, கவனியுங்கள் அவர் எதைக் குறித்து இங்கு கூறுகிறார்? சற்று கவனியுங்கள்) மற்றவர்களுக்கோ அவர்கள் கண்டும் காணாதவர்களா கவும், கேட்டும் உணராதவர்களாகவும் (தேவனுடைய வார்த்தை நியாயந்தீர்க்க அவர்களிடம் வருகிறது, பாருங்கள். ஏனெனில் அது அங்கே இருப்பதினால் அதை அவர்கள் பார்க்கிறார்கள்). இருக்கத்தக்கதாக, அவைகள் உவமை களாகச் சொல்லப்படுகிறது, "அந்த உவமையின் கருத் தாவது: விதை தேவனுடைய வசனம்” (9-11 வசனங்கள்)  101. ஜீவனின் வித்து எது? - தேவனுடைய வார்த்தையே! ஆகவே, கோட்பாட்டின் மூலமாகவோ, ஒரு ஸ்தாபனத்தின் மூலமாகவோ நீங்கள் ஜீவனைப் பெற்று கொள்ள முடியாது, நீங்கள் வார்த்தையி னிடத்திற்குத் திரும்பி வரவேண்டும். இப்பொழுது:- ஜீவனின் வித்து. 102. சரி, அவருடைய வார்த்தையே அவரின் வித்து, அவருடைய ஆவிதான் தண்ணீர். இதை யோவான் 3:14ல் நாம் காண்கிறோம். நீங்கள் பாருங்கள்? பாருங்கள்? ஆவி... அதுதான் தண்ணீ ர். அதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டுமென்றால் அவ்வசனத்தை சற்று படிப்போம். "சர்ப்பமானது மோசேயினால் வனாந்தரத்திலே உயர்த்தப் பட்டது போல, மனுஷ குமாரனும் தன்னை விசுவாசிக் கிறவன் எவனோ அவன் கெட்டுப் போகாமல் நித்திய ஜீவனை அடையும்படிக்கு உயர்த்தப்பட வேண்டும்” என்றார். 103. பாருங்கள்? மோசே வெண்கல சர்ப்பத்தை உயர்த்தியிருப்பா னென்றால் அதைப் போலவே கிறிஸ்துவும் உயர்த்தப்பட வேண்டும், அது என்ன? அழிந்து கொண்டிருக்கும் ஜனங்கள் ஜீவனு க்காக தண்ணீரைப் பெற்று கொள்ள மோசே வெண்கல சர்ப்பத்தை உயர்த்தினான். இங்கே இயேசுவைப் பாருங்கள் (ஓ தேவனே!) இயேசு தேவனுடைய வார்த்தையாயிருக்கிறார். அதைக் குறித்து நாம் இப்பொழுது பேசி நிரூபிக்கப் போகிறோம்.  104. இயேசு தேவனுடைய வார்த்தையாயிருக்கிறார். ஜீவன் வித்தினுள் இருக்கிறபடியால் அவர் வித்தை வெடித்து, ஆவியாகிய ஜீவனை (தண்ணீர் வழிந்து ஓடுவது போல) வித்தின் மேல் பொழிந்து வித்தின் ஜீவனைக் கொண்டு வருகிறார். அது வேறு எதையாகிலும் கொண்டுவந்தால், அதனுடைய இனம் வேறு என்று கூறலாம். ஆமென். நீங்கள் புரிந்து கொள்கிறீர்களா? 105. தேவனுடைய ஆவி வித்திற்கு நீர்பாய்ச்ச வருமானால், அது அந்த வித்திற்கு நீர் பாயச்சுகிறதென்றால், அது அந்த வித்தினுடைய ஜீவனைப் பிறப்பிக்கும். விளக்கமாயிருக்கிறதா? தண்ணீர் பாய்ச்சப் படுவது எதற்கென்றால் வித்தினுடைய ஜீவன் உற்பத்தி செய்யப் படுவதற்கே . 106. வேதம் வார்த்தையென்றும், அதில் எல்லாம் சாத்தியம் என்றும், இயேசு தேவனுடைய வெளிப்பாடென்றும் நான் விசுவாசிக்கின்றேன்; அவரும் அவருடைய வார்த்தையும் ஒன்றே, அவர் யார்? அவரே அந்த வித்தாயிருக்கிறார் என்பதை கவனியுங்கள். 107. ஏவாள் உற்பத்தி செய்திருக்க வேண்டிய வித்து அவரே, இதை அறிந்து கொண்டீர்களா? ஏவாள் உற்பத்தி செய்திருக்க வேண்டிய வித்து அவரே,ஆனால் அவள் தேவனுடைய வார்த்தையை விசுவாசியாமற் போனதால் அதை கலப்பினமாக்கி விட்டாள். அவரே வித்தாயிருக்கிறார், பிரதியுற்பத்தியின் மூலம் அந்த வித்து ஜீவனைக் கொண்டுவர வேண்டுமானால், அது மரித்து தன் ஜீவனைப் பரப்ப வேண்டும்! உங்களால் அதைக் காணமுடிகின்றதா? ஆகவே. தான் வித்திற்கு நீர் பாய்ச்ச தண்ணீரானது கொடுக்கப் பட்டிருக்கிறது.  108. ஏதேன் தோட்டத்தில் வித்திற்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக பரிசுத்த ஆவியானவர் அங்கு இருந்தார். மனிதன் மரிப்பதற்காக அல்ல, ஜீவிப்பதற்காகவே சிருஷ்டிக்கப்பட்டான். ஆனால் அவன் கலப்பினமானதினால் மரணத்தைக் கொண்டு வந்தான். ஏவாள் கலப்பினமாக்கினாள். இங்கு சர்ப்பத்தின் வித்தை நீங்கள் மறு தலித்தால் நான் உங்களை ஒன்று கேட்கிறேன். இன்று சம்பவித்துக் கொண்டிருக்கிறதான அடக்க ஆராதனைகளைப் பற்றி என்ன? ஆனால் அவள் கலப்பினமாக்கினாள். நாம் எல்லாரும் ஆரம்பத்திலிருந்தே கலப்பினமாயிருப்பதினால் தொடர்ந்து மரித்துக் கொண்டிருக் கிறோம். ஆனால் ஜீவனானது உண்மையான வித்திலிருந்து வருகிறதாயிருக்கிறது. அந்த வித்து அவரே என்பதை நிரூபிப்பதற்காக அவர் உயிரோடு எழுந்தார் ! பாருங்கள்? மூலவித்திலுள்ள ஜீவன் ஏவாளுக்கு கொடுக்கப்பட்டது போல திரும்பவும் அவருடைய உண்மையான சபைக்கு, அவருடைய மணவாட்டியின் கருப்பையின் மூலம் ஜீவனைக் கொண்டு வருகிறதாயிருக்கிறது.  109. ஓ, இது ஆழமானதும் மகிமை நிறந்ததுமாயிருக்கிறது. அது உங்களில் இன்னும் ஆழமாகப் பதிய வேண்டுமென்று நான் அதிக நேரம் எடுத்து படித்தேன். 110. அவரே அந்த வித்தாயிருக்கிறார். தேவனுடைய வார்த்தை யைக்கொண்டு உருவாக்கப்பட்ட அவரே அந்த வித்து. இயேசு "உம்முடைய சித்தத்தின் படியே ஆகக்கடவது" என்று கூறினார், வித்து அங்கு தேவ வார்த்தையை சார்ந்து கொள்வதைப்பாருங்கள்? பாருங்கள்?  111. இயேசுவே வார்த்தையின் வெளிப்பாடாயிருக்கிறார். அவரும் வார்த்தையும் ஒருமைப்பட்டிருப்பதினால், தேவனுடைய வார்த்தை யானது பரிபூரணமாக இயேசுவில் வெளிப்படுத்தப்பட்டது. அதனால் தான் தேவன் இயேசுவில் பரிபூரணமாய் வெளிப்பட்டார். ஏனெனில் அவரே வார்த்தை வித்தாயிருக்கிறார், (வித்தினுள் ஜீவன் இருக்கிறது) புரிகிறதா? இயேசு தேவனின் வார்த்தை வித்தாயிருந்தார். வித்து ஆவியாயும், தண்ணீராயுமிருக்கிறது, ஆகவே இயேசு வித்தை உடைத்து, அதனின்று ஜீவத் தண்ணீர் புறப்பட்டு, முளைக்கக்காத்திருக்கிறதான மற்ற வித்துக்களுக்கும் பாய்ச்ச வேண்டியதாயிருந்தது. இதை உங்களால் பார்க்க முடிகிறதா? மேலும் இயேசு, “இந்த தொழுவத்திலுள்ள வைகளல்லாமல் வேறே ஆடுகளும் எனக்கு உண்டு. மற்ற ஆடுகளும் இதைப் பார்க்க வேண்டுமே, அவர்கள் வார்த்தையைப் பெற்று அதிலே நிலைத்திருப்பார்கள், நான் ஆவியை நீர்ப்பாய்ச்ச அனு ப்புகிறேன், அவர்கள் சரியானபடி பிரதியுற்பத்தி செய்வார்கள்" என்றார்.  112. மற்ற ஆடுகள் உறவின் முறையான வித்தின் வித்தாயிருப் பதினால், அது அற்புதங்களையும், தேவனுடைய வல்லமையையும் உற்பத்தி செய்து, தேவனுடைய வார்த்தை ஒன்றையும் மறுதலிக்காது. களையைப் பார்த்து, "என்னோடு வந்து வாழ்க்கை நடத்து” என்று கூறாது. இல்லை ஐயா, இல்லை. அதை ஒரு போதும் செய்யாது. அதற்கு அது தேவையில்லை, ஏனெனில் அது எதினோடும் கலக்காது. நீங்கள் ஜீவனோடு மரணத்தை கலக்க முடியாது, ஒரே சமயத்தில் நீங்கள் ஜீவனைப் பெற்றும், மரித்தும் இருக்க சாத்தியமில்லை. ஹூம்... ஹூம்.  113. நான் எதை குறிப்பிடுகிறேன் என்பதை காண்கிறீர்களா? அந்த வித்திலிருந்து வெளிப்பட வேண்டியவர் அவரே. இயேசுவே வார்த்தையின் பரிபூரண வெளிப்பாடாயிருக்கிறார். அதன் காரணத்தினால் தான் அவருக்குள் இருந்தது என்ன? முதல் ஆதாமின் மூலம் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட குமாரனே மனித வர்க்கத்தை தொடர்ந்திருக்க வேண்டும். ஏவாள் சர்ப்பத்தின் கலப்பினமாக்கி ஜீவனில்லாமல், மரணத்திற்கு பிறந்த தவறான பிள்ளைகளை இவ்வுலகிற்கு கொண்டு வந்தாள். ஆனால் இயேசு வந்து, அவரே அவ்வித்து என்பதை நிரூபித்தார். ஆதாம் இழந்த எல்லாவற்றையும் இயேசு மீட்டு கொண்டார். புரிந்து கொண்டீர்களா? ஏவாள் அக்குழந்தையைக் கடைசியிலே கொண்டுவந்திருப்பாள். ஆனால் அவள் அதைக் கலப்பினமாக்கி சர்ப்பத்தின் ஞானத்திற்கும் அறிவிற்கும் செவி கொடுத்ததினால் அந்த வித்தைக் கொண்டுவர தவறினாள்.  114. நாம் மணவாட்டியோடு இதை சேர்க்கும் வரை சற்று காத்திருங்கள். ஆகவேதான் நான் எதை விசுவாசிக்கிறேனோ அதில் சார்ந்திருக்கிறேன். அது இந்த தேவ வார்த்தைக்கு திரும்பி வரவேண்டியதாயுள்ளது. யாராகிலும் என்னிடம் விவாதிக்க விரும்பினால் இந்த தேவவார்த்தையைக் குறித்தே விவாதியுங்கள், "வாருங்கள்”, என்று நான் அழைப்பு கொடுக்கிறேன். அது சரி அவ்விதம் எல்லா சமயங்களிலும் நான் அழைப்பு கொடுத் துள்ளேன். இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் ஞானஸ்நானம் கொடுப்பது சரியில்லையென்று நினைப்பீர்கள் என்றால், நீங்கள் வந்து என்னிடம் விவாதியுங்கள். ஹூம்... ஹூம்... சர்ப்பத்தின் வித்து என்று ஒன்று இல்லையென்று நினைப்பீர்களென்றால், நீங்கள் வந்து என்னைப் பாருங்கள். நாம் வார்த்தையை எடுத்து விவாதிப்போம். பெண்களுக்கு நீட்டமான தலைமயிர் இருக்க வேண்டுமென்றும் அதுவே அவர்களுக்கு முக்காடாக கொடுக்கப்பட்டிருக்கிறது என்று நீங்கள் விசுவாசியாவிட்டால், நீங்கள் என்னிடம் வந்த வார்த்தையை யெடுத்து என்னிடம் அதைக் குறித்துப் பேசுங்கள். மேலும் எல்லாவற்றிற்கும் முடிவு சமீபமாயிற்று என்று நீங்கள் விசுவாசியா விட்டால், நான் பேசிக் கொண்டிருக்கும் இவ்வெல்லா காரியங்களைக் குறித்தும் நீங்கள் என்னிடம் வாருங்கள்; பாருங்கள்? சகோதர வித்துக்களே வாருங்கள். வந்து விவாதியுங்கள். அது சரி.  115. நீங்கள் வித்தாயிருந்து தேவவார்த்தையோடு ஒவ்வாமலிருக்க முடியாது. ஏனெனில் வார்த்தையே வித்தாயிருக்கிறது. நீங்கள் வித்தாயிருக்கும் பட்சத்தில், எவ்வாறு அதினோடு ஒவ்வாமலிருக்க முடியும்? நீங்கள் உங்களை ஒவ்வாமலிருந்து உங்கள் நோக்கத்தை அழித்துக் கொள்வீர்கள். சிலர் என்னிடம், "நீங்கள் ஏன் அந்த ஜனங்ளோடு எப்பொழுதும் அவ்விதம் இருக்கிறீர்கள்?” என்று கூறுகிறார்கள். நான் அவ்விதம் செய்யாமலிருந்தால் என்ன நோக்கத்திற்காக நான் அனுப்பப்பட்டேனோ அந்த நோக்கத்தையே நான் அழிக்கிறவனாயிருப்பேன். ஒரு வெளிச்சமானது உண்டாக வேண்டியதாயிருக்கிறது.  116. நாம் இன்னும் சற்று ஆழமாக போகும் போது, அநேகக் காரியங்களை குறித்து, அவை எவ்விதம் தேவனுடைய வார்த்தை யோடு பரிபூரணமான ஒழுங்கில் அமைந்திருக்கின்றன என்பதை உங்களுக்குக் காண்பிப்பேன்.  117. இப்பொழுது, ஆம், ஐயா, அவர்... தேவன் இயேசுவின் மூலம் பரிபூரணமாக கிரியை செய்ய முடிந்தது. அவர் பூமியிலிருந்த போது என்ன கூறினார்? "மெய்யாகவே மெய்யாவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், பிதாவானவர் செய்யக் குமாரன் காண்கிற தெதுவோ, அதையேயன்றி, வேறொன்றையும் தாமாய்ச் செய்ய மாட்டார், அவர் எவைகளைச் செய்கிறாரோ, அவைகளைக் குமாரனும் அந்தப் படியே செய்கிறார்” என்றார். அவர் செய்த எந்த காரியமும், எப்பொழுதும் வேத வசனத்தினால் உறுதிப் படுத்தப்பட்ட தாயிருந்தது, "வேத வாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள், என்னைக் குறித்துச் சாட்சி கொடுக்கிறவைகளும் அவைகளே, என் பிதாவின் கிரியைகளை நான் செய்யாதிருந்தால், நான் அந்த ஆரம்ப வித்தல்ல, செய்தேனேயானால் நீங்கள் ஏன் என்னை விசுவாசிக்கிறதில்லை? (அது உண்மை ) நான் நிற்கும் வழியை நீங்கள் விசுவாசியாவிட்டாலும், நான் செய்கிற கிரியைகளை யாகிலும் விசுவாசியுங்கள், ஏனெனில் என் வித்து என்னைத் தான் சுமந்து கொண்டுவரும்.'' 118. ஒரு களை எப்போதும் களையாகவேயிருக்கும். நீங்கள் அதை எதினோடும் கலப்பினமாக்கலாம், ஆனாலும் அது களையாகவே யிருக்கும். அது உண்மை . அது தன்னை கலப்பினமாக்க ஒப்புக் கொள்ளும். 119. ஆகவே இருமனமுள்ளது கலப்பினமும், மாய்மாலமுமா யிருக்கிறது. ஒரு மனிதன் தன்னை தேவனுடைய மனிதன் என்று கூறிக்கொண்டு தேவனுடைய வார்த்தையை மறுதலிப்பானானால், அவன் ஒரு மாய்மாலக்காரன். ஒரு கோவேறு கழுதை தன்னை குதிரையென்றோ கழுதையென்றோ கூறிக்கொள்ள முடியாது. ஏனெனில் அது இரண்டுமல்ல, மாறாக அது வேசிக்குப் பிறந்த ஒரு கலப்பினமாயிருக்கிறது. அது மிகவும் அப்பட்டமான வார்த்தை தான். ஆனால் அது அவ்விதம்தான். அவ்விதமாயிருப்பதென்பது அதன் குறிக்கோள் அல்ல. மனிதன் தன் ஞானத்தினால் அவ்விதம் அதை உண்டாக்கிவிட்டான். வேசித்தனத்தினால் பிறக்கும் அளவிற்கு அங்குதான் மனிதர் எல்லோருடைய ஞானமும் முடிவடைகிறது.  120. தேவன் இயேசுவில் பரிபூரணமாக வெளிப்பட்டார். ஏனென்றால் அவரே வார்த்தையாயிருந்தார். அவர் தேவனுடைய வார்த்தையாயிருந்தார். எனவே தான் அவர் சரியாக தேவனைத் தவிர வேறொன்றையும் வெளிப்படுத்தவில்லை. அவ்வாறே தேவன் உன்னில் இருப்பாரென்றால் நீ யாராய் இருப்பாய்? 121. தேவனுடைய வார்த்தை தீர்க்கதரிசிகளுக்கு வந்ததைக் குறித்து இயேசு கூறவில்லையா ....... யாருக்கு தேவனுடைய வார்த்தை வந்தது? - தீர்க்கதரிசிகளுக்கு. "தேவவசனத்தைப் பெற்று கொண்டவர்களைத் தேவர்கள்” என்று இயேசு கூறவில்லையா? தேவன் அவர்களில் வெளிப்பட்டார். அது என்ன? - அது உரைக்கப்பட்ட வார்த்தை வெளிப்பட்டதே யாகும். பாருங்கள்? அதுவேதான். “உங்களுக்கு ஞானமிருந்தால் நீங்கள் புரிந்து கொள்வீர்கள்” என்றார். "தேவவசனத்தைப் பெற்று கொண்டவர் களைத் தேவர்கள் என்று அவர் சொல்லியிருக்க, வேதவாக்கியமும் தவறாததாயிருக்க, பிதாவினால் பரிசுத்தமாக்கப்பட்டும் உலகத்தில் அனுப்பப்பட்டும் இருக்கிற நான் என்னைத் தேவனுடைய குமாரன் என்று சொன்னதினாலே தேவதூஷணஞ் சொன்னாய் என்று நீங்கள் சொல்லலாமா? தீர்க்கதரிகளை விசுவாசிக்கிறோம் என்று சொல்லியும் தேவகுமாரனாகிய என்னை எப்படி உங்களால் மறுதலிக்க முடியும்?” அவர்களால் அன்று ஏன் அதை பார்க்க முடியவில்லை?  122. இன்றைக்கும் அதே நிலைமைதான், “வருகிறதாக சொல்லப்பட்ட வித்து நான்தான் (ஸ்திரீயின் வித்து”). "உனக்கு ஒரு வித்தை தருவேன்” என்று தேவன் ஸ்திரீயினிடம் கூறினார். சர்ப்பம் ஏற்கனவே அவளைக் கெடுத்து விட்டிருந்தான். “நான் உனக்கு கொடுக்கும் வித்தானவர் அவன் தலையை நசுக்குவார்” என்றார். அதே காரியத்தை அவர் திரும்பவும் கொண்டு வருவார்! ஆமென்! நீங்கள் எல்லோரும் அதை காணவேண்டும் என்று நான் விரும்புகிறேன். "தவறாய் செய்து விட்டவைகளை திருத்தவும், ஏவாள் ஜெயங் கொள்ளவுமே நான் வந்தேன். அந்த காரியத்தை நான் செய்யத்தக்கதான ஒரே வழி, வித்தை விசுவாசித்த ஒரு ஸ்திரீயின் மூலம் பிறப்பதேயாகும். ஆனால் ஒரு ஸ்திரீ ஏற்கனவே அந்த வித்தை விசுவாசியாமல் போனாள். ஒரு ஸ்திரீ விசுவாசித்தாள், மற்றவளோ அதை விசுவாசிக்கவில்லை. “நான் ஜெயங்கொள்ளு கிறவர். அவள் செய்த தவறுக்கு பிராயச்சித்தம் செய்யவே என் மரணத்தின் மூலம், ஜீவனைக் கொடுக்கவும், நீங்கள் தேவனுடைய குமாரரும், குமாரத்திகளுமாக ஆவதற்காக அந்த ஜீவனை உங்கள் மேல் வழிந்தோட செய்வதற்கும் நான் வந்தேன்.” (பாருங்கள் ) வித்தானது அங்கு இருக்கும் பட்சத்தில் இவை சம்பவிக்கும்.  123. நீங்கள் அதை கலப்பாக்கினால் வார்த்தையை மறுதலித்தால் ஸ்தாபனமாகிய வேசியின் பிள்ளையைத் தவிர வேறொன்றையும் நீங்கள் பெற முடியாது. மன்னிக்கவும் சகோதரிகளே, அது இருக்கிற விதமாகவே நான் சொல்ல வேண்டியதாயுள்ளது. பாருங்கள்? அது அவ்விதத்தில் இருக்கின்றது. 124. யோவான் 3ம் அதிகாரத்தில் கூறப்பட்ட வண்ணம் ஜலத்தினாலும் ஆவியினாலும் பிறக்கும் பொழுது, அது நம்மை திரும்பவும் உரைக்கப்பட்ட வித்திற்கு கொண்டு வருகிறது. ஆம். ஐயா. எல்லா தேவனுடைய குமாரர்களும் அவ்விதம்தான் வரவேண்டும். ஜலத்தினாலும் ஆவியினாலும் பிறக்கும் அனுபவம் உங்களை, நீங்கள் ஆரம்பத்தில் எந்த இடத்தில் இருந்திருக்க வேண்டுமோ அந்த இடத்திற்கு கொண்டு செல்கிறது. பாருங்கள்? ஆகவே தான் கிறிஸ்துவின் மரணம் நம்மை தேவனுடைய குமாரர்கள் என்ற ஸ்தானத்திற்கு கொண்டு வருகிறது.  125. ஏவாள் அக்குழந்தையை உற்பத்தி செய்திருப்பாளென்றால்..... அதை அவள் செய்திருக்கக் கூடும். "பலுகிப் பெருகிப் பூமியை நிரப்புங்கள்'' என்று தேவன் அவர்களோடு சொல்லியிருக்க வில்லையா? ஆனால் அவளோ அங்கு நடந்து சென்று ஒரு விபச்சாரியின் பாகத்தை ஏற்று நடித்து விட்டாள்.  126. "சகோ. பிரன்ஹாமே, அது விபரீதமாயிருக்கிறது” என்று நீங்கள் சொல்லலாம். "அப்படி நடந்திருக்க முடியாது" என்றும் நீங்கள் சொல்லலாம். சற்று பொறுங்கள், தேவனுடைய வார்த்தை அதைக் குறித்து சொல்வது சரியா தவறா என்று பார்ப்போம். பாருங்கள், பாருங்கள்? இவைகள் மறைந்திருக்கவில்லை ஐயா, அப்படி மறைந்திருக்குமானால், அது இழந்து போனவர்களுக்குத் தான். அது தான் உண்மை . பாருங்கள்? 127. உரைக்கப்பட்ட வார்தைக்கு நம்மைத் திரும்பவும் கொண்டு வரும்போதுதான் நாம் தேவனுடைய வார்த்தையின் வெளிப் பாடாயிருக்கிறோம். பாருங்கள்? இயேசுவும் இதைக் குறித்து தான், "என்னை விசுவாசிக்கிறவன் நான் (நான் யாரென்றும், எதற்காக வந்தேன் என்றும் தேவனுடைய வார்த்தைக்கு மட்டும் மனிதனை திருப்ப வந்தேனென்றும்-) செய்கிற அதே கிரியைகளை தானும் செய்வான்” என்று கூறினார். 128. ஏன் அக்கிரியைகள் இன்று செய்யப்படுகிறதில்லை? அது கலப்பினமாய் பிறந்த தவறான குழந்தைகள் - கோவேறு கழுதைகள். கோவேறு கழுதைக்கு, தான் விசுவாசிக்கிறது இன்னதென்று தெரியாது. ஒரு கோவேறு கழுதைக்கு தன் தாயும் தகப்பனும் யாரென்று தெரியாது. அதற்கு வம்சவிருத்தி கிடையாது. அது முறை தவறி வந்த ஒன்று. 129. ஆகவேதான், ஒருவன் தேவனை விசுவாசிக்கிறேன் என்று கூறியும் அவருடைய வார்த்தைகளை விசுவாசிக்கவில்லையென்றால், ஒரு ஸ்தாபனக் கோட்பாடோடு தேவனுடைய வார்த்தை கர்ப்பங்கொள்ளச் செய்கிறவனாயிருப்பான். அவ்விதம் நீங்கள் இருப்பீர்களென்றால், நீங்கள் தேவனுடையவர்களாயிராமல் மரித்தவர்களாயிருப்பீர்கள். நீங்கள் ஒரே நேரத்தில் மரித்த வர்களாகவும் ஜீவனுள்ளவர்களாகவும் இருக்கமுடியாது. ஆகவே தேவனுடைய வார்த்தை அங்கு வளர முடியாது. மாறாக நீங்கள் அப்பாகத்தை மாய்மாலமாக நடிப்பீர்கள். இச்செய்தி கண் காணிகளுக்கும், குருக்களுக்கும், அத்தியட்சகர்களுக்கும் அல்லது யாருக்காகிலும் செல்லட்டும். அது உண்மை. அது வார்த்தை யாயிருக்க வேண்டும். இல்லையென்றால் நீங்கள் மரணத்திற்குரிய தவறான பிள்ளைகளாயிருப்பீர்கள், ஒருவேளை நீங்கள், ஒரே நிலப்பரப்பில் வளர்கிறவர்களாயிருந்தாலும் ஒரே மந்தையைச் சேர்ந்தவர்களாயிருக்கமாட்டீர்கள். தேவனுடைய பாகம் .... அங்கே அது வளர முடியாது. 130. சரி, சரி... இப்பொழுது அதை கவனிக்கிறோம். பாருங்கள், உரைக்கப்பட்ட வார்த்தை ..... நாம் தேவனுடைய வார்த்தையின் வெளிப்பாடாயிருக்கிறோம். தேவனுடைய சபையானது உரைக்கப்பட்ட வார்த்தைக்கு வந்து தன்னை வெளிப்படுத்த வேண்டும் என்று அவர் விரும்புகிறார். ஒரு மனிதனில் அவருடைய சொந்த வித்து இல்லாதிருக்கும் பட்சத்தில், பின் எப்படி அவர் தம்மை அவனில் வெளிப்படுத்த முடியும்? "என்னுடைய போதகர் இந்த கோட்பாடுகளை போதிக்கிறாரென்றும், அற்புத அடையாளங் கள் இக்காலத்திற் குரியதல்லவென்றும் , " கூறி உங்கள் சொந்த விசுவாசத்தில் நீங்கள் இருந்துகொண்டு, பின்பு எவ்விதம் உங்களை தேவனுடைய புத்திரர்களாக வெளிப்படுத்த முடியும்? நீங்கள் எவ்விதமாக அதைச் செய்ய முடியும்? காரியம் அவ்விதம் இருப்பின், இயேசுவின் மரணத்தினால் உங்களுக்கு ஒரு பிரயோஜனமும் இல்லை "ஓ, நான் அவரை என் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொள்ளுகிறேன்!' என்கிறாய். நிச்சயமாக நீ ஏற்றுக்கொள்ள வில்லை! அவ்விதம் சொல்லுகிறாயேயன்றி அவ்விதம் செய்யவில்லை. ஏனெனில் உன் கிரியைகள் நீ யாரென்று உன்னை நிரூபிக்கிறது. இயேசுவும் அதே காரியத்தைத்தான் கூறினார். “நான் முறைதவறி பிறந்தவன் என்ற நீங்கள் நினைத்தால்... "பரிசேயர், "நாங்கள் ஆபிரகாமின் சந்ததியாயிருக்கிறோம், ஒருவனும் எங்களுக்கு போதிக்க வேண்டியதில்லை" என்றார்கள்.  131. அதற்கு இயேசு, “நீங்கள் ஆபிரகாமின் பிள்ளைகளாயிருந்தால், என்னை அறிந்திருப்பீர்கள், என்னிடத்தில் பாவம் (அவிசுவாசம் ) உண்டென்று உங்களில் யார் என்னைக் குற்றப்படுத்தக் கூடும்? தேவன் என்னைக் குறித்து செய்த வாக்குத்தத்தங்களில் எது ஒன்று நிறைவேறாமல் போயிற்று என்று எனக்கு காண்பியுங்கள். தேவன் வாக்கு செய்ததில் நான் எது ஒன்றை நிறைவேற்றவில்லை என்பதை நீங்கள் எனக்குக் காண்பியுங்கள். பாவம் என்பது அவிசுவாசமா யிருக்கிறது. நீங்கள் என் கிரியைகளை உற்பத்தி செய்யுங்களேன் பார்க்கலாம்" என்றார். அது அவர்களை மிகவும் கேவலப்படுத்தி விட்டது. பாருங்கள்? நிச்சயமாக. இயேசு "என்னை குற்றப்படுத்தக் கூடியவர் யார்? என்னில் பாவம் உண்டென்று உங்களில் யார் என்னைக் குற்றப்படுத்தக் கூடும்? நான் விசுவாசிக்காவிடில், பிதாவானவர் வாக்குத்தத்தம் செய்த ஒவ்வொரு வார்த்தையையும் ஏன் என் மூலமாக செய்து கொண்டிருக்கிறார்? நீங்கள் உங்களுடையதை எங்கிருந்து பெற்றுக்கொண்டீர்கள் என்று நான் காணட்டும்," என்றார். 132. யார் சட்டத்திற்கு புறம்பாக பிறந்தவர்கள்? --- ஸ்தாபனத்தார்கள் தாம் ! தங்களைத் தேவனுடைய பிள்ளைகள் என்று கூறிக்கொள்கிறார்கள்; ஆனால் சட்டத்திற்கு புறம்பாக பிறந்தவர்களாயிருக்கிறார்கள். இயேசு, "நீங்கள் உங்கள் பிதாவாகிய பிசாசானவனால் உண்டானவர்கள்; உங்கள் பிதாவினுடைய இச்சைகளின்படி செய்ய மனதாயிருக்கிறீர்கள்” என்று கூறினார். எத்தகைய கிரியைகளை பிசாசு செய்வான்? - ஏவாளின் மூலம் தேவனுடைய வார்த்தையை கலப்பினமாக்கினது போன்ற கிரியைகளைத்தான் அவன் செய்ய முயற்சிப்பான்.  133. அதையேதான் இன்றுள்ள ஸ்தாபனங்கள் செய்து கொண்டிருக்கின்றன. அவர்கள் பிதாவாகிய பிசாசின் கிரியைகளை அவர்களும் செய்கிறார்கள். ஒரு கோட்பாட்டை எடுத்து அதை தேவனுடைய வார்த்தையோடு கலப்பினமாக்க முயற்சிக்கிறார்கள் ! இதைத் தான் அவர்கள் தகப்பனாகிய பிசாசானவன் ஆதியிலே செய்தான். 134. சகோதரர்களே, அதினின்று வெளியே வாருங்கள். அப்பொழுது கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்! இயேசு அவ்விதம் கூறினார். தேவனுடைய சிறு அம்சமாவது உங்களிடம் இருக்குமானால் நீங்கள் அதை கவனித்து விடுவீர்கள். கலப்பினம். ஓ, என்னே. 135. தேவனுடைய மூலவித்தாகிய இயேசு , தமது மரணத்தின் மூலமாக உங்களை மூலவித்தினிடத்திற்கு கொண்டு வந்திருக்கிறார். இந்த தேவனுடைய வித்து உங்களுக்குள் இருக்குமானால், அவருக்குள் இருக்கும் பரிசுத்த ஆவி, வித்திற்கு தண்ணீர் பாய்ச்சி, அவர் செய்த அதே கிரியைகளை உங்களிலும் வெளிப்படுத்துவார். அதை நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? சரி. யோவான் 14ம் அதிகாரம் 12ம் வசனத்தைப் பார்ப்போம்.  136. நீங்கள், "சகோ, பிரன்ஹாமே, நான் நிச்சயமாக ஒரு விசுவாசி” என்று கூறலாம். அது சரிதான். தேவனுடைய வார்த்தை யாகிய இயேசு அவ்விதம் உங்களை அழைக்கிறாரா என்று பார்ப்போம்.  “மெய்யாகவே, மெய்யாகவே, (முற்றிலுமாக, முற்றிலுமாக) நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; நான் என் பிதாவினிடத்திற்குப் போகிற படியினால் என்னை விசுவாசிக்கிறவன் நான் செய்கிற கிரியைகளைத் தானும் செய்வான். இவைகளைப் பார்க்கிலும் பெரிய கிரியைகளையும் செய்வான்" என்று இயேசு கூறினார்'  137. அது என்ன? --- அதே வித்து. இங்கே கொஞ்சம் கோதுமையை விதைத்துவிட்டு, “நான் இங்கே வெள்ளரிப்பழங்களையும் அங்கே கோதுமையையும் பெறப்போகிறேன்.” என்று கூறுவீர்களா? நீங்கள் அவ்விதம் செய்ய முடியாது. வெள்ளரிப்பழங்களை பெறுவதற்கு ஒரே ஒரு வழி, வெள்ளரி விதைகளை விதைப்பதேயாகும். ஆனால் அதை கலப்பின மாக்குவீர்களானால், அது வெள்ளரிப்பழமாயிருக்க முடியாது. அது ஒரு மாய்மாலமாயிருக்கும். அது சரிதானா? நண்பர்களே, அது கோதுமையும் அல்ல, வெள்ளரிப்பழமும் அல்ல. அது ஒரு கலப்பினம் - மாய்மாலம், கெட்ட உற்பத்தி, தன்னில் தானே அது மரித்ததாயிருக்கிறது, தன்னை பிரதியுற்பத்தி செய்ய முடியாததா யிருக்கிறது. அதுதான் அதின் முடிவு நண்பர்களே.  138. உங்களுக்கு வெள்ளரிப்பழம் வேண்டுமாயில் வெள்ளரியில் ஆரம்பியுங்கள். ஒரு சபையை நீங்கள் விரும்புவீர்களானால், தேவனு டைய வார்த்தையைக் கொண்டு அதை ஆரம்பியுங்கள். தேவனுடைய ஜீவனை நீங்கள் விரும்புவீர்களானால், தேவனுடைய வார்த்தையைக் கொண்டு ஆரம்பியுங்கள். தேவனுடைய வார்த்தையை அதின் பரிபூரணத்திலும், அதில் ஒவ்வொரு அணுவையும் ஏற்று கொள்ளுங்கள். அத்தகைய தேவனின் பரிபூரணம் உங்களில் இருக்குமானால், அதின் மேல் பொழியும் மழையானது உங்கள் தோட்டத்தில் உள்ளது எதுவோ அதை சரியாக உற்பத்தி செய்யும். பின்பு, பின்மாரி அதின் மேல் பொழிவதெங்கே? சிறிது காலம் சென்ற பின் அது எங்கே போகிறது என்று உங்களுக்குத் தெரியுமா? பேய்க் கொம்மட்டிக் காய்களை மடி நிறைய அறுத்து கூழ்பானையில் போட்ட அந்த தீர்க்கதரிசிகளின் புத்திரரின் ஸ்தாபனத்திற்கு எலிசா சென்றது போன்றது. அவர்கள் பேய்க்கொம்மட்டிக் காய்களைச் சேகரித்து அவைகளைப் பட்டாணி என்று நினைத்துக் கொண்டார்கள். ஓ, நல்லது. 139. அது தேவனுடைய வார்த்தை விதையாயிருப்பதினால் அவரில் அதே கிரியைகளை வெளிப்படுத்தும். தேவகுமாரனாகிய அவர், தேவனுடைய மாதிரி வித்தாயிருந்தார். பரிசுத்த ஆவியின் அபிஷேகம் என்ற ஞானஸ்நானம் இயேசுவின் மேல் வந்தபொழுது, அவருடைய ஜீவன் எத்தகையதாயிருந்தது? அவர் உற்பத்தி செய்த அந்த ஜீவன் (பரிசுத்த ஆவியின் அதே நீர் பாய்ச்சுதல்) தேவன் செய்த அதே கிரியைகளை திரும்பவும் செய்தது, தேவகுமாரனாகிய வித்து தேவகுமாரன் என்ற வித்தைப் பிறப்பிக்கும்.  140. தலைமயிர் கத்தரிக்கப்பட்ட பெண்களே, உங்களுக்கு அவமானம். சத்தியத்தை மறுதலிக்கும் பிரசங்கிகளே, உங்களுக்கு அவமானம். "தலை மயிரைப்பற்றி ஒன்றுமில்லை, அப்படி செய்தால் பரவாயில்லை" என்று கூறுகிறார்கள். ஆனால் தேவன் அது தவறு என்று கூறுகிறார். 141. அது எவ்விதமாயுள்ளது என்று பாருங்கள்? ஆகவேதான் நான் வார்த்தையை விசுவாசிக்கிறேன். அது ஒரு விதையாயிருக்கிறது. மழையானது அவ்விதையின் மேல் பொழியுமானால், அது தன்னு டைய இனத்தைப் பிறப்பிக்கிறதாயிருக்கிறது. அப்படியானால் இந்த அநேக அற்புதங்களைக் குறித்தென்ன? இதைக்குறித்து நீங்கள் என்ன செய்வீர்கள்? நாற்பத்து நான் கோடு பலகோடிகளை சேர்ப்பதைப் போன்றுள்ளது; பாப்டிஸ்டுகள், பிரஸ்பிடேரியன்கள், பெந்த கோஸ்தேயினர், இன்னும் பலவாக ஒன்றின் மேல் ஒன்றாக ஸ்தாபனங்கள் அடுக்கிக் கொண்டே போகிறது. ஆனால் இயேசு கிறிஸ்துவின் கிரியைகளின் வெளிப்படுத்தல் எங்கே? "பிதாவானவர் செய்யக் குமாரன் காண்கிறதெதுவோ, அதையேயன்றி, வேறொன்றையும் தாமாய்ச் செய்யமாட்டார்'' (யோ: 5:19) என்று இயேசு கூறினார். அத்தகைய வித்து எங்கிருந்து வருகிறது?  142. பரிசுத்த ஆவியானவர் நீர்பாய்ச்சி அவ்வித்தைக் கொண்டு வருவார். அது விதைக்கு நீராயிருக்கின்றது. ஒருவிதை விதைக்கப்படுமானால் அதை விளையச் செய்வதற்கே நீரானது பாய்ச்சப்படுகிறது. தண்ணீரானது உங்கள் மேல் பொழியுமானால், “கர்த்தருக்கு ஸ்தோத்திரம். பிரசங்கியாரே, நான் இன்னாரைச் சேர்ந்தவன், அத்தகைய காரியத்தை நான் விசுவாசிக்கிறதில்லை" என்று கூறுவீர்களானால், நீங்கள் பழைய மாய் மாலத்தை ஆரம்பமாய் கொண்ட ஸ்தாபனத்தாராயிருக்கிறீர்கள், அந்தவித்து தான் உங்களில் பயிரிடப்பட்டிருக்கிறது என்று பொருள். 143. என்னை தவறாகப் புரிந்து கொள்ளாதீர்கள். தேனே நான் உங்களை நேசிக்கிறேன். இந்த பொருளை நீங்கள் அறிந்து கொள்ள நான் முயற்சிக்கிறேன். பாருங்கள். இப்பிரசங்கம் இவ்விதமே தொடரட்டும், ஆனால், ஒரு நேரத்தில் எது சரியென்றும், நான் விசுவாசிக்கிறதை ஏன் விசுவாசிக்கிறேன் என்பதையும் நீங்கள் அறிய விரும்புகிறேன். உண்மையாக சொல்லப்போனால், பிசாசு உங்களை வஞ்சித்துவிட்டான். அவன் அவ்விதம் செய்திருக்கிறான் என்பதை நான் அறிவேன். கர்த்தருடைய வார்த்தையின்படி அது தவறாயிருக்கிறது. அவன் உங்களை வஞ்சித்துவிட்டான். ஆம், ஐயா. தேவனுடைய வார்த்தை அவ்விதம் கூறுவதால் தான் நான் அவ்விதம் பிரசங்கிக்கிறேன்.  144. "ஓ, சகோ. பிரன்ஹாமே, இது ஒரு வித்தியாசமான காலம்,” என்று நீங்கள் கூறலாம். ஆனால் தேவனுடைய வார்த்தை இன்றும் அதே போல் இருக்கிறதே. சில வருடங்களுக்கு முன்னால், யோசேப்பின் காலத்திய கோதுமை மணிகளை கண்டுபிடித்து அதை பயிரிட்டார்களாம். அது (அந்த செய்தியை பத்திரிகையில் நீங்கள் பார்க்க வில்லையா?) அநேக காலமாகியும் அவை கோதுமைச் செடியைப் பிறப்பித்ததாம். அது இன்னும் கோதுமையாயிருப்பதே அதன் காரணம். அதற்கு தேவை சற்று நீர்பாய்ச்ச வேண்டியதுதான். 145. பல ஆயிரம் வருடங்களுக்கு முன்னால் தேவன் உரைத்த வண்ணமே இன்றும் அவர் வார்த்தை மாறாததாயிருக்கிறது. அதற்கு தேவையானதெல்லாம் தண்ணீர் மட்டுமே! நாம் ஏன் பயிர் முளையப்பெறுகிறதில்லை? ஏனெனில் நாம் தவறான இனவித்தை கொண்டவர்களாயிருக்கிறோம். எத்தனை பேர் உங்களுடைய ஸ்தாபனத்தின் பெயரை மாற்றி கொள்ள விரும்புகிறீர்கள்? - நீ இருமனமுள்ள பிள்ளையாயிருந்தால், ஆரம்பத்தில் இருந்ததைப் பார்க்கிலும் இருமடங்கு நரகத்தின் பிள்ளையாயிருப்பாய்! "மெத்தோடிஸ்டுகளாகிய நீங்கள் எத்தனை பேர் பாப்டிஸ்டுகளாக மாறவிரும்புகிறீர்கள்? ........ "பாப்டிஸ்டு களாகிய நீங்கள் பெந்தேகோஸ்தேயினராக விரும்புகிறீர்களா? உங்கள் அங்கத்தினர் சீட்டை இங்கு கொண்டு வாருங்கள்" ஓ, உங்கள் நன்மைக்காக கூறுகிறேன்! அது பதராயும், சாத்தானாயு மிருக்கிறது. அதில் ஜீவனே இல்லை. அது கலப்பினம், மாய் மாலம், இலையுதிர்ந்து கனியற்று இரண்டுதரஞ் செத்து வேரற்றுபோன மரங்களாயிருக்கிறது.  146. "என் பரமபிதா நடாத நாற்றெல்லாம் வேரோடே பிடுங்கப்படும்" என்று இயேசு கூறவில்லையா? அது ஸ்தாபனமோ அல்லது வேறு எதுவாயிருந்தாலும் சரி. வேரோடு பிடுங்கப்படும்! தேவனுடைய வார்த்தை மட்டுமே நிலைநிற்கும்! அதுதான் சரி. ஆகவே தான் தேவன், "எந்த மனுஷனும் பொய்யன், தேவன் ஒருவரே சத்தியபரர்" என்று கூறினார். 147. அப்படியானால் நாம் எங்கே போகப் போகிறோம்? நீங்கள் உங்கள் சுயநினைவுக்கு வாருங்கள். ஆனாலும் நீங்கள் முன் குறிக்கப்படாமலிருந்தால் செவி கொடுக்க முடியாது. நாம் அதைக் குறித்து பேசப்போகிறோம். வாத்தின் முதுகில் ஊற்றப்பட்ட மிகுதியான தண்ணீரைப் பற்றி அதிசய மொன்று மில்லை. வாத்து தண்ணீரை கிரகிக்கத்தக்க பறவையன்று, அதை வழிந்தோடச் செய்யும் சுபாவமுள்ளது.  148. நோவாவின் பேழை கொப்பேர் மரத்தினாலும் சித்திம் மரத்தினாலும் செய்யப்பட்டதாயிருந்தது. அது குழலைப் போன்று நடுவில் குழியாக இருந்தது. அதிலிருந்த எல்லாம் வெளியெடுக்கப் பட்டது. அவ்விதம் வளர்ந்தது - அது லேசான மரம். அது பிசின் தைல மரத்தைக் காட்டிலும் மிகவும் இலேசாக இருந்தது. அதை ஏன் அவ்விதம் செய்தார்கள்? அதனால் அதை மிதக்கும்படியாக நீரில் அமிழ்த்தினார்கள். அது கிரகிக்கக் கூடியதாயிருந்தது. "சிந்தூர மரம் (oak tree) அதைக் காட்டிலும் நலமானது அன்றோ"? என்று நீங்கள் கேட்கலாம். இல்லை ஐயா' அது கிரகிக்கத்தக்கமரமல்ல, எதிர்த்தடிக்கும் மரம், ஆனால் கொப்பேர் மரமோ ஒரு கிரகிக்கும் மரமாக காணப்பட்டது. ஒரு உண்மையான தேவனுடைய வித்து ஆவியை (ஆவியாகியத் தண்ணீரை --- தமிழாக்கியோன்) கிரகிக்கத்தக்கதாயிருக்கின்றது! உள்ளேயுள்ள எல்லா ஸ்தாபனத்தின் காரியங்களும், அவிசுவாசமும் எடுக்கப்பட்டு விட்டன, அங்கேயிருக்கும் ஜீவனாகிய வித்தினுள் பரிசுத்த ஆவி வரும்பொழுது, அது சரியாக இன்னுமொரு வித்தைப் பிறப்பிக் கின்றது. இன்னுமொரு தேவனுடைய குமாரன் பிறக்கிறான். ஆமென்! மற்றுமொரு தேவகுமாரன், ஒரு குட்டி தேவன்.  149. சார்லி பிரன்ஹாமுக்கும், ஈலாவுக்கும் நான் பிறந்தமையால் நானும் ஒரு பிரன்ஹாமாக இருக்கிறேன். நான் அவர்களுடைய வித்தாயிருப்பதினால் நானும் ஒரு பிரன்ஹாமாக இருக்கிறேன். அவர்கள் இருவருடைய விந்துக்களும் ஒன்று சேர்ந்த ஒப்பந்தப்படி உண்டாக்கப்பட்ட வித்தே நான். 150. தேவனும் அவருடைய வார்த்தையும் ஒன்றாகும் பொழுது, (அல்லேலுயா) தேவனுடைய ஆவி தேவனுடைய வித்தின் மேல் (தேவ வார்த்தையின் மேல்) நீர் பாய்ச்சும் பொழுது, அது தேவனைப் பிறப்பிக்கின்றது; அது ஒரு தனிப்பட்ட ஆளாக இல்லை; அது தேவனாகவே யிருக்கிறது! நீங்கள் மரிக்கிறீர்கள், இனி நீங்களல்ல, உங்களை மரித்தவர்களாக எண்ணி, உள் தோண்டப்பட்டவர்களாக (கசடுகள் நீங்கினவர்களாக - தமிழாக்கியோன்) வித்திலுள்ள ஜீவன் வெளிப்பட காத்திருக்கின்றீர்கள். பின் அவன் அதே மனிதனல்ல, தேவனே அவனில் நிலைத்திருக்கிறார். அந்த வித்தின் ஜீவன் ஆரம்பத்தில் உரைக்கப்பட்ட வார்த்தைக்கு ஒப்பாயிருக்கின்றது. தேவனுடைய வார்த்தை அம்மனிதனில் வெளிப்பட்டிருக்கிற படியினால், இனி அவனல்ல, தேவனே அவனில் நிலைத்திருக்கிறார். ஏனெனில் அவன் மரித்துப்போனான். அவன் ஒரே சமயத்தில் கலப்பினமாகவும் தேவனுடைய குமாரனாகவும் இருக்க முடியாது. ஒன்று அவன் மரணத்தின் பிள்ளையாகவோ அல்லது ஜீவனின் பிள்ளையாகவோ இருக்க வேண்டும். ஆக, அவன் மரணத்தின் ஒரு குமாரனாயிருப்பானானால், சாத்தானிடம் அவன் செல்லட்டும். அங்கு சாத்தான் அவனைக் கொல்லுவான். அவன் தேவகுமாரனாயிருப்பானானால் அவன் தன்னை தேவனுக்குத் தரட்டும். அப்பொழுது அவர் அவனுக்குள் வந்து அவனிலுள்ள சாத்தானைக் கொல்லுவார். பின் தேவன் அவனில் தம் சொந்த ஜீவனைப் பயிரிடுவார். அப்பொழுது இனி அவனல்ல, அது தேவனுடைய ஜீவன். ஏனெனில் அது தேவனுடைய வார்த்தையாயிருந்து, பரிசுத்த ஆவியினால் நீர் பாய்ச்சப்பட்டு, அதே கிரியையை உற்பத்தி செய்கிறது. நீங்கள் அதை புரிந்து கொண்டீர்களா? இன்னும் இந்தப் பொருளின் மேல் பேச எனக்கு விருப்பமே. நான் இன்னும் முப்பது அல்லது நாற்பது பக்கங்களுக்கு வேத வசனங்களை எழுதி வைத்துள்ளேன். ஆனால் நான் மூன்று பக்கங்கள் மட்டுமே முடித்துள்ளேன். 151. சரி. அது வார்த்தையாயிருப்பதால், அது நம்மூலம் அ கிரியைகளைப் பிரத்தியட்சமாக்குகின்றது. நீங்கள் கிறிஸ்துவின் கிரியையை செய்ய வேண்டுமானால் அவர் செய்தபடியே நீங்களும் செய்ய வேண்டும். "என்னை விசுவாசிக்கிறவன் நான் செய்கிற கிரியைகளைத் தானும் செய்வான்” என்று இயேசு கூறினார், அது என்ன? எதை விசுவாசிப்பது? வந்திருப்பவரான அவரே அந்த மூலவித்தும், ஜீவனும் என்று விசுவாசிப்பதேயாகும். எங்கே அந்த வித்து? இங்கேயிருக்கின்ற கைக்குட்டைகளை நான் எடுக்கட்டும். இங்கேயிருக்க வேண்டிய மனிதன் சரியாக இங்கே இருந்திருக்க வேண்டும். இருக்க வேண்டிய மனிதன் ...... நடந்ததென்ன? ஏவாள் அதை கலப்பினமாக்கி விட்டாள். பின் நடந்ததென்ன? மரண மானது சம்பவித்தது. தொடர்ந்து சம்பவித்துக் கொண்டே யிருக்கிறது.  152. என்ன நடந்தது? வார்த்தையானது இங்குள்ளது. வார்தையானது மாறாததாக இங்கு நிலை கொண்டிருக்கிறது. "பலுகிப் பெருகி பூமியை நிரப்புங்கள் என்று கூறப்பட்ட வார்த்தையானது தான் இறங்கத்தக்கதான இடத்தை கண்டுபிடிக்க முடியவில்லை. கடைசியாக, இந்த வார்த்தை ஒரு கன்னியின் கருப்பையைக் கண்டு பிடித்து விட்டது. (இரண்டு கருப்பைகளைக் குறித்து அதிகமாக இன்று மதியம் பேசலாம்). பின் நடந்த காரியம் என்ன? இவரினின்று ஜீவத்தண்ணீர் வித்தின் மேல் பாய்ச்சப்பட்டு, அவ்வித்து தன்னை திரும்பவும் உற்பத்தி செய்வதற்கு ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது. அவரினின்று ஆவி வெளிவந்து பின்பு மேல் நோக்கிச் சென்றது. 153. நாம் இவ்விதமாகத்தான் அந்துள்ளோம். சம்பவித்த காரியம் என்ன? நாம் அதை விசுவாசிக்கிறோம்; நாம் அதை விசுவாசிக்கிறோம். இயேசு, "என்னை விசுவாசிக்கிறவன் நான் செய்கிற கிரியைகளை - பரிசுத்த ஆவியின் கிரியை என்மேல் புறாவைப் போல் வந்திறங்கி இக்கிரியைகளைச் செய்கிறார், (கலப்பினத்தின் மூலமாயல்ல, கன்னியின் மூலமாக) பிறந்ததினால் இக்கிரியையைச் செய்தார். ஒரு கணவனும் மனைவியும் ஒரு பிள்ளையை உண்டாக்குவது போலல்ல; ஒரு கன்னியினிடத்தில் பிறந்ததேயாகும். இதன் மூலமாகவே என் ஜீவனை நான் கொடுக்கிறேன், பிதாவையும், தீர்க்கதரிசிகளையும், எல்லா வேத வார்த்தையும் நீங்கள் விசுவாசித்தால், ஏற்று கொள்வீர்களானால், என்னுடைய ஆவியை உங்களில் பாய்ச்சி நான் செய்கிற அதே கிரியைகளை நீங்களும் செய்யும்படி செய்வீர்கள்” என்றார்.'  154. “நான் செய்கிற கிரியைகளை அவனும் செய்வான்” அவர் என்ன கிரியைகளைச் செய்தார்? பிதாவானவர் காண்பித்ததையே அவர் கண்டார். பிதாவானவர் செய்யக் குமாரன் காண்கிற தெதுவோ, அதையேயன்றி, வேறொன்றையும் - அவர் என்ன வானார்? தேவன் தம்மை மனிதனாக்கினார். தேவன் தாமாய்ச் செய்யமாட்டார்” என்று இயேசு கூறினார். அவர் தாமே தம்மை மனிதனாக்கிக் கொண்டார். தேவன் மாம்சமாகி நமக்குள்ளே வாசம் பண்ணினார். வார்த்தை மாம்சமாகி நமக்குள்ளே வாசம் பண்ணி னார். தேவனுடைய உரைக்கப்பட்ட வார்த்தை ஒரு கன்னியின் மூலம், ஒரு சரீரத்தைக் கொண்டு வந்து, அச்சரீரத்தினின்று ஆவியாகிய தண்ணீர் வெளிவந்து, வார்த்தையாகிய தண்ணீரினால் கழுவப்பட்டதாய் அவருக்குள் சென்று வாசம் செய்து, அங்கிருந்து தேவனுடைய ஜீவனை கிறிஸ்துவின் மூலமாய், வெளிப்படுத்தினது. தேவன் கிறிஸ்துவிலிருந்தார். அவரே அபிஷேகம் பண்ணப்பட்டவர். 155. கிறிஸ்து என்பதற்கு அபிஷேகம் பண்ணப்பட்டவர் என்று பொருள். அவர் அபிஷேகம் பண்ணப்பட்ட ஒரு மனிதன். தேவன் அவரில் வாசம் செய்கிறார். அது என்ன? மாம்சத்தில் இருந்த அந்த வித்தாகிய அபிஷேகம் பண்ணப்பட்டவர், வெளிப்படும் வார்த்தை யாகிய தேவனை உற்பத்தி செய்தார். "அவருடைய மகிமையைக் கண்டோம். அது பிதாவுக்கு ஒரே பேரானவருடைய மகிமைக்கு ஏற்ற மகிமையாகவே இருந்தது. கிருபையால் நிறைந்திருந்தது ...'' பாருங்கள். அதோ அவர். பாருங்கள்? அவர் தேவனுடைய வார்த்தையின் வெளிப்பாடாயிருந்தார். நீங்கள் கலப்பினமானதற்காக கிரயம் செலுத்தும்படி அவர் மரித்தார். அதுதான் காரியம். அது என்ன? நீங்கள் உங்களுடையவர்களல்ல என்று சொல்லு மளவிற்கு மரித்து அவருடைய வார்த்தையினால் நிறைந்து, அவருடைய வார்த்தையை விசுவாசிக்கிறதினால், அவரிலுள்ள பரிசுத்த ஆவி கீழிறங்கி வந்து உங்களிலுள்ள பயிரானது வளரத்தக்கதாக நீர்பாய்ச்சுகிறார். 156. அப்படியானால் என்ன? நம்முடைய கலப்பினத்திற்காகவும், நம்மை தேவனுடைய குமாரரும் குமாரத்திகளுமாக்குவதற் காகவும், தேவன் தம்முடைய ஒரே பேரான குமாரனை மரணத்திற்குட்படுத்தி, கிறிஸ்துவில் அவருடைய வார்த்தை வெளிப்பட்ட விதமாக சபையின் மூலமாக தொடர்ச்சியாக வார்த்தையின் வெளிப்பாடு உண்டாகும்படி செய்கிறார். கிறிஸ்துவே தேவவார்த்தையின் வெளிப்பாடா யிருக்கிறார், அவருடைய ஆவியை அனுப்புவதற்காக அவர் மரித்தார் --- சரீரமோ உயரே சென்று ஆவியானது தண்ணீராக நான் விசுவாசித்ததால், நம்முடைய இரட்சிப்பின் கிரயமாக செலுத்தத்தக்கதாக அது கீழ் நோக்கிப் பாய்ந்தது, "என்னை விசுவாசிக்கிறவன், நான் செய்த கிரியைகளை தானும் செய்வான்'' ... பின்பு பரிசுத்த ஆவியானவர் அதே வார்த்தையின் மேல் வருகிறார் ....  157. "ஆக, பின் ஏன் வேதத்ததையே சுட்டிக்காட்டுகின்றீகள்?” என்று நீங்கள் கேட்கலாம். வேதமானது உன் இருதயத்திற்குள் இருக்க வேண்டும். தேவனுடைய வார்த்தையானது விதையா யிருப்பதினால், இது தனித்து இருக்கும் வரை ஒருகாரியமும் செய்ய முடியாது, ஆனால் அது இருதயமாகிய நிலத்திற்குள் வருமானால், பரிசுத்த ஆவியினால் தேவனுடைய கிரியைகளாகிய தரிசனங் களையும், வல்லமையையும், தாழ்மையையும் வெளிப்படுத்த ஆரம்பிக்கிறது. 'நான் எல்லாம் அறிந்தவன்' என்பது வெளியேறி விடுகிறது. நீங்கள் ஒன்றுமில்லாதவர்களாகி கிறிஸ்து உங்களில் ஜீவிக்கிறார். நீங்கள் மரிக்கிறீர்கள், கிறிஸ்துவோ ஜீவிக்கிறார். அது தான் காரியம். அவர் மரித்ததினால் நான் ஜீவிக்கிறேன். நான் மரிக்கிறேன்; அவர் ஜீவிக்கிறார். நான் மரித்த பின் எனக்கு ஜீவன் தருவதாக வாக்களித்திருக்கிறார். நான் அவருடைய ஜீவனைப் பெறுவதற்காக எனக்காக நானே மரிக்கிறேன். அதை எவ்விதம் நான் செய்கிறேன்? விசுவாசத்தினாலே அவருடைய வித்தை என் இருதயத்தில் ஏற்றுக்கொண்டு, அதை சார்ந்து விசுவாசிக்கிறேன். ஆகவே அது வேதம் சொல்லியபடி சரியாக உற்பத்தி செய்கிறது. 158. என் சகோதரர்களே, தேசம் முழுவதும் தேடி பாருங்கள். போலிகள் தாம் அதிகம் தென்படும். சரி. கிறிஸ்துவில் வெளிப்பட்ட அதே கிரியைகளே அவருடைய சபையிலும் உண்டாகும். அவர் அவ்விதமாக யோவான் 14:12ல் கூறியுள்ளார். மேலும் இயேசு, “வானமும் பூமியும் ஒழிந்துபோகும், என் வார்த்தைகளோ ஒழிந்து போவதில்லை" என்றார். 159. வார்த்தையாகிய விதை மாம்சமாவதற்தாக அவர் முன்குறிக்க பட்டார். நான் இங்கு சற்று நிறுத்துகிறேன், ஏனெனில் ஒலி நாடாக்களை கேட்பவர்கள் புரிந்துகொள்ளாமற் போவார்கள்.  160. முன்குறிக்கப்படுதல்: எல்லா தேவனுடைய குமாரரும் குமாரத்திகளும் முன் குறிக்கப்பட்டவர்கள். எபேசியர்; 1ம் அதிகாரம் 4ம் வசனத்தை உங்களுக்கு குறிப்பிடுகிறேன். சரி. நாம் முன் குறிக்கப்பட்டவர்கள். ஏன்?  கிறிஸ்து மூலவித்தா யிருக்கிறார், விழுதல் உண்டாகும் என்று அறிந்து, நம்முடைய இடத்தை அவர் எடுத்துக் கொள்வதற்காக இந்த மூலவித்து தேவனுடைய தீர்மானத்தின்படி குறிக்கப்பட்டார். நீங்கள் புரிந்து கொள்கிறீர்களா? எல்லா தேவ குமாரரும், குமாரத்திகளும் முன் குறிக்கப்பட்டவர்கள். அவ்விதமிருப்பின் "ஆனால்" என்று வேறு கூறுகிறீர்களே! அப்படியானால் "சிலரை ஆக்கினைக்குட் படுத்துவாரா?” இல்லை ஐயா. நீங்கள் இவ்வுலகில் சுயாதீனப்பிரதி நிதியாக உண்டாக்கப்பட்டிருக்கிறீர்கள், ஆனால் தேவன் - அவர் முடிவற்றவர். எல்லா வற்றையும் முன்னறிந்திருக்கிறார். அவர்கள் யாரென்று அவருக்கு முன்னரே தெரியும்.  161. ஏவாள் அவ்விதம் செய்ய அவளை அவர் உண்டாக்கவில்லை. அவள் அதைச் செய்ய அவளை உண்டாக்கவில்லை. ஆனால் அவள் அவ்விதம் செய்வாள் என்று அவர் முன்னறிந்தார்.  162. அது லூக்கா 12ம் அதிகாரம் என்று நான் நம்புகிறேன். (அதுதான் என்று நான் விசுவாசிக்கிறேன்) அவர்கள் கண்களினால் காணாமலும், காதுகளிருந்தும் கேளாமலும் என்று ஏசாயா நன்றாக கூறினான், ஏசாயா உங்களை முன்பே கண்டான்" என்று இயேசு கூறினதில் வியப்பொன்றுமில்லை. அங்கே அவர்கள் கண்களையும், காதுகளையும் உடையவர்களாகத்தான் இருந்தார்கள். ஆனாலும் அவர்களால் காணமுடியவில்லை. ஏன்? ஏனெனில் அவர்கள் தேவனுடைய வார்த்தைக்கு எதிராளிகளாயிருந்தார்கள். ஆகவே இயேசு "நீங்கள் உங்கள் பிதாவாகிய பிசாசானவனால், உண்டானவர்கள்; உங்கள் பிதாவினுடைய இச்சைகளின் படி செய்ய மனதாயிருக்கிறீர்கள்.” மேலும் இயேசு, “ஓ மாயக்காரரே, என்னிடத்தில் பாவம் உண்டென்று உங்களில் யார் என்னைக் குற்றப் படுத்தக் கூடும்? என்னுடைய ஊழியத்தை மறுதலிக்கிறீர்களா? அப்படியானால் உங்களுடைய ஊழியம் என்னுடைய ஊழியத்தைப் போல் தேவனுடைய வார்த்தையை நிறைவேற்று கிறதா என்று காட்டுங்கள் பார்க்கலாம்'' என்றார். பாருங்கள்! பாருங்கள்? 163. இப்பொழுது, அவர் முன்குறிக்கப்பட்டிருந்தது போல ..... "முன்குறிக்கப்படுதல் எப்படி வருகின்றது?'' என்று நீங்கள் கேட்கலாம். இதை நீங்கள் புரிந்து கொள்ளவில்லையென்றால், நான் முடிக்கும் பொழுது நீங்கள் உங்கள் கரங்களை உயர்த்தலாம். பாருங்கள்? 164. அவர்கள் அங்கிருக்க வேண்டுமென்று முன்குறித்தார். தேவன் ஆதியிலே, ஆதாமையும் ஏவாளையும், பலுகிப் பெருகி பூமியை நிரப்புங்கள் என்று கட்டளை கொடுத்தார். ஆகவேதான் ஆண், பெண் பாகுபாடு அங்கு கொடுக்கப்பட்டது. ஆனால் கலப்பினம் என்ன செய்தது? அது மரணத்தைக் கொண்டு வந்தது. இரண்டு வித கருப்பைகளைப் பற்றி மாலையில் பார்ப்போம். பாருங்கள்? 165. இங்கு கவனியுங்கள், தேவன், குமாரரும் குமாரத்திகளும் கொண்ட ஒரு உலகத்தை தீர்மானத்தில் கொண்டவராய் அதை முன் குறித்தார். அவர்கள் அங்கிருக்க வேண்டுமென்று முன்குறித்தார். ஆனால் தேவனுடைய வார்த்தையை விசுவாசிக் காததினால் கலப்பினம் அங்கு உண்டானது. தேவனோ, நீங்கள் ஆதியிலே எப்படி இருந்திருக்க வேண்டுமோ, அந்நிலைக்கு நீங்கள் தேவனுடைய குமாரரும் குமாரத்திகளுமாயிருப்பதற்காக, திரும்பவும் நீங்கள் கலப்பினம் செய்ய வேண்டாத ஒரு நிலைக்கு உங்களை கொண்டு வந்திருக்கிறார். பாருங்கள்? 166. கிறிஸ்து, தாம் தேவனுடைய குமாரனாயிருப்பதற்கு முன் குறிக்கப்பட்டதால் அவர் அவ்விதம் தான் இருக்க வேண்டும் என்பது தவிர வேறு வழியில்லை. நான் எதைக் குறிப்பிடுகிறேன் என்று உங்களால் காண முடிகிறதா? ஏற்கனவே உங்களுக்கு குறிக்கோள் இருக்குமானால், தேவ வார்த்தையை உங்களால் காணவும், விசுவாசிக்கவும் முடியும், குடும்ப வாகு என்பதைக் குறித்து நீங்கள் கேள்விப் பட்டதுண்டா? ஒரு குடும்பத்திலுள்ள ஒரு மகன் தன் தகப்பனையோ, தாயையோ, அல்லது பாட்டனாரையோ, முப்பாட்டானாரையோ, போன்று கிரியைகள் காணப்படுவதை குடும்ப வாகு என்கிறோம். முன்குறிக்கப்படுதலும் அதனின்றே வருகிறதா யிருக்கின்றது. நீங்கள் ஆதியிலே சரியான வழியில் இருந்திருக்க வேண்டும். ஆனால் நீங்கள் இன்று இருக்கிறதான வழியில் இருந்து விழுதலுக்குக் காரணமானீர்கள். இருந்தாலும் நீங்கள் முன் குறிக்கப் பட்டிருப்பதினால் தேவனு டைய வார்த்தையைக் கேட்டீர்கள். அது உங்களைத் திரும்பவும் முன் குறிக்கப்பட்ட ஸ்தானத்திற்கு அழைத்துக்கொண்டு வந்து விட்டது! ஆமென். நீங்கள் செய்கிறதான இக்காரியங்களை விட்டு விட்டு, தேவனுடைய வார்த்தையை விசுவாசிக்க உங்களுக்கு நேர்ந்தது என்ன? ஏதோ ஒன்று உங்களில் இருந்து கொண்டு, நீங்கள் நித்தியமாக வாழ வேண்டுமென்று கூறினதினால் தானே!  167. "அது சரி, இதற்கு வேத ஆதாரம், பிரசங்கிமார்களே!” இதோ வேத ஆதாரம், “எவர்களை முன் குறித்தாரோ அவர்களை அழைத்து மிருக்கிறார்; எவர்களை அழைத்தாரோ அவர்களை நீதிமான்களாக்கியுமிருக்கிறார்; எவர்களை நீதிமான்களாக் கினாரோ அவர்களை மகிமைப் படுத்தியுமிருக்கிறார்" என்று வேதம் கூறுகிறது. "அப்படியானால் பிரசங்கிப்பதினால் பலன் என்ன சகோ. பிரன்ஹாமே”? என்று நீங்கள் கேட்கலாம்.  168. பயிர் அங்கேயிருக்கிறதே; நான் செய்வதெல்லாம் வித்தை அள்ளி தூவுகிறேன். தீப்பொரியை அனுப்புகிறேன். அவர்கள் அதை எதிர்ப்பார்களாயின், இவ்வுலகத்தோடு ஒன்றி போயுள்ள ஸ்தாபனமே அவ்வாறு செய்யும், அதைக் குறித்து நான் எதுவும் செய்ய முடியாது. ஆனால் அங்கு ஏதாவது ஒன்று அதை கிரகித்துக் கொள்ளுமானால் அது ஒரு தேவ குமாரனாகவோ, குமாரத்தி யாகவோ நிக்சயமாக மாறும். ஆமென். ஏனெனில் அது முன்குறிக் கப்பட்டிருக்கிறது.  169. தேவன் தம்முடைய குமாரனாகிய இயேசுவை முன் குறித்தி ருந்ததால் தான் அவர் மூலமாய் கிரியை செய்ய முடிந்தது. அவர் உலகத் தோற்றத்திற்கு முன்பே அடிக்கப்பட்ட ஆட்டு குட்டியா யிருந்தார்! அவர், தாம் முன் குறிக்கப்பட்ட ஸ்தானத்தை எடுக்க சரியாய் அமைந்தார். ஆமென், அதன் காரணமாகவே அவர் பிதா வின் சித்தத்தை செய்து வார்த்தையின் வெளிப்பாடாயிருந்தார். அது போலவே, ஒவ்வொரு முன் குறிக்கப்பட்ட குமாரர்களும் அத்தகைய வெளிப்படுத்தலை உடையவர்களாயிருப்பார்கள்.  170. உலகத் தோற்ற முதற்கொண்டு, ஒவ்வொரு சந்ததியிலிருந்தும் ஒரு சிறு கூட்ட ஜனங்கள் உயிர்த்தெழுதலில் பங்கடைவார்கள். அதன் காரணமாகவே அவர்கள் அதை உறுதியாய்ப் பிடித்திருக்கின்றனர் ..... பவுலும் இதைக் குறித்து, "சிலர் நிந்தைகளையும் அடிகளையும் கட்டுகளையும் காவலையும் அனு பவித்தார்கள்; கல்லெறி யுண்டார்கள், வாளால் அறுப்புண்டார்கள், பரீட்சை பார்க்கப் பட்டார்கள், பட்டயத்தினால் வெட்டப்பட்டு மரித்தார்கள், செம்மறியாட்டுத் தோல்களையும் வெள்ளாட்டுத் தோல்களையும் போர்த்துக்கொண்டு திரிந்து, குறைவையும் உபத்திரவத்தையும் துன்பத்தையும் அனுபவித்தார்கள்; உலகம் அவர்களுக்குப் பாத்திரமாயிருக்கவில்லை” என்று எபிரேயர் 11ம் அதிகாரத்தில் கூறுகிறார். ஆமென். உண்பதற்கு ஒன்றுமில்லாமல் விரட்டப்பட்டு துன்பப்படுத்தப் பட்டார்கள். வாளால் அறுப்புண்ட ஏசாயா தீர்க்கதரிசி போன்ற இன்னும் பலரையும் குறித்தே பவுல் கூறுகின்றார். தீர்க்கதரிசி ஏசாயா உலகத் தோற்றத்திற்கு முன்பே முன் குறிக்கப் பட்டவன். அவன் ஏவாளின் கருப்பையின் மூலமாக வந்திருக்க வேண்டும். ஆனால் அவன் வேறொரு ஸ்திரீயின் கருப்பையின் மூலமாக வந்தான்; அவனுடைய ஆவி இங்கு சாட்சியாக வரவேண்டியதாயிருக்கிறது. மனிதன் மரிப்பான். 171. ஆனால் இயேசுவின் மூலம் திரும்ப ஜீவிப்பான் என்பதற்கு சாட்சியாக இயேசுவும் தமது மரணம், அடக்கம், உயிர்த் தெழுதலின் மூலமாக சாட்சி பகர்ந்தார், ஏனெனில் வருகிறதான வித்து அவரே. ஆமென். நீங்கள் இதை புரிந்து கொள்கிறீர்கள் என நம்புகிறேன்.  172. சரி. அவர் முன் குறிக்கப்பட்டது போல் சபையாகிய உங்களில் வித்தாகிய வார்த்தையை மாம்சமாக செய்கிறார். "சகோ. பிரன்ஹாமே, நிச்சயமாக ஒவ்வொரு வார்த்தையையும் நாங்கள் விசுவாசிக்கிறோம்” என்று நீங்கள் கூறலாம், அப்படியானால் நீங்கள் உங்கள் பாரம்பரியத்தை சந்திக்கும் பொழுது, தேவனுடைய வார்த்தையை விட்டு பின்னடையாதீர்கள்! பாருங்கள்? என்ன நடந்தாலும் தேவனுடைய வார்த்தையில் மட்டும் நிலைத்திருந்து, பின் என்ன சம்பவிக்கிறது என்று பாருங்கள், "ஓ, கர்த்தாவே, நான் விசுவாசிக்கிறேன், உம்முடைய பரிசுத்த ஆவியை அனுப்பும் " என்று ஜெபித்து, பின்னர் சம்பவிப்பதை கவனித்திருங்கள். அவர் அவ்விதம் செய்வாரெனில் நீங்கள் அதை பெற்றுக் கொண்டீர்கள்... ஒருவித உணர்ச்சிகளாலல்ல, அற்புதங்களாலல்ல. பிசாசுகள் கூட அவ்விதம் செய்கின்றன; ஆனால் தொடர்ந்து அசையாமல் தேவ வார்த்தையை நீங்கள் விசுவாசித்து, வார்த்தையின் வாழ்க்கையை வாழ்ந்து, எதையும் ஒரு போதும் மறுதலிக்காமலிருங்கள். அது தான் சரி. அதுவே வார்த்தையானது உங்களில் மாம்சமாகின்ற காரியம் பாருங்கள். அதே மாம்சமும், ஆவியாகிய தண்ணீ ரும்.  173. சிறிது பொறுத்துக்கொள்ளுங்கள். நான் இதைக் கடந்துபோக விரும்பவில்லை. இயேசு ஆபிரகாமின் வித்தாயிருக்கிறார். (மாம்ச பிரகாரம் பேசுவோமானால் ...... அது சரிதானா?) ஆபிரகாமின் வித்து என்று முன் குறிக்கப்பட்டவர், ஆவியானது அவர் மேல் பொழிந்தபோது எத்தகைய ஜீவனை அவர் உற்பத்தி செய்தார்? அவர் விசுவாச மென்னும் ஜீவனைக் கொண்டு வந்தார். சிறிது பொறுத்துக்கொள்ளுங்கள். நான் இதைக் கடந்து போக விரும்பவில்லை. "ஆபிரகாமைப் போல் அவரும் ஒரு பரதேசியா யிருக்கப்போகிறார் என்று நீங்கள் பொருள்பட சொல்லுகிறீர்களா?" 174. இன்றைக்கு ஜனங்கள் அதில்தான் குழப்பமடைந்திருக்கி றார்கள். ஒரு தேவனுடைய மனிதன் இன்னின்ன காரியங்களை செய்து இன்னின்னப்படி பின்பற்ற வேண்டும் என்று எண்ண முயற்சிக்கிறார்கள். ஓ, இல்லை ஐயா! கிறிஸ்து எவ்விதம் ஆபிரகாமின் வித்தாயிருந்தார்? ஆபிரகாமுடைய வித்தாக (சரீரப்பிரகாரமாக) ஈசாக்கு தோன்றினானே! ஈசாக்கினுடைய வித்தும் முடிவில் விழுந்து மரித்ததே! அது பின் வாங்கி கலப்பினமாயிற்றே! அதைக் குறித்து நாம் நேரடியாகப் பார்ப்போம். பாருங்கள்? ஆனால் ஆபிரகாமின் விசுவாசமென்னும் வித்து எந்த சூழ்நிலையாயிருந்தாலும் தேவனை விசுவாசித்தது. அதுதான் சரி. வ்யூ. நான் கூக்குரலிடவிரும்புகிறேன். இந்த விசுவாசமென்னும் வித்தைக் கவனியுங்கள். அது என்ன? அது ஆபிரகாமின் சரீரமல்ல, ஆபிரகாமின் விசுவாசமாயிருக்கிறது. ஆபிரகாமின் விசுவாசம் எதிலிருந்தது? அது தேவனுடைய வார்த்தையிலிருந்தது. எக்காரியம் வந்தாலும், அது முரண்பட்டதா யிருப்பின், அதை அவன் ஏற்றுக் கொள்ளவில்லை. ஓ, இந்த ஸ்தாபனங்களை அவனுடைய கிரியைகள் துண்டு துண்டாக கிழித்தெறிந்திடாதா? நிச்சயமாக அது கிழித்தெறியும்.  175. விவாகமும், விவாகரத்தும் என்பதைப்பற்றிய சத்தியம் வேதத்தில் அது கொடுக்கப்பட்ட வெளிச்சத்தின்படி வெளியே கொண்டு வரப்படுமானால், இந்த நகரத்தில் மட்டுமல்ல, எந்த நகரத்திலுமுள்ள சபைகளும் உடைந்து சிதறிப் போகும். அதை அவர்கள் ஆதரிக்கின்றார்கள் (தவறான உபதேசத்தை - தமிழாக்கி யோன்) இவ் விஷயத்தில் இரு சாராரும் தவறாயிருக்கின்றார்கள் நான் அதை வார்த்தையின் மூலமாக என்னால் நிரூபிக்கமுடியும். அவர்கள் இருவரும் தவறாயிருக்கிறார்கள். சரி. அது புருஷன் செய்தாலும் ஸ்திரீ செய்தாலும் அதைக் குறித்து நான் ஒன்றும் சொல்லப் போவதில்லை. ஏனெனில் அவர்கள் மத்தியில் போதுமான அளவிற்கு குழப்பம் உண்டு, பாருங்கள்? "அவர்களை விட்டுவிடுங்கள். அவர்கள் குருடருக்கு வழிகாட்டுகிற குருடர்கள்" என்று இயேசு கூறினார். அதைக் குறித்து அவர்கள் சாக்கு போக்கு சொல்லுவார்கள். சத்தியத்தை சொன்னாலும் விசுவாசிக்க மாட்டார்கள், நித்திய ஜீவனுக்கென்று அவர்கள் பிறந்திருந்தால் வார்த்தையை விசுவாசிப்பார்கள். பாருங்கள்? அது தான் சரி. அவர்கள் அதை விசுவாசியா விட்டால், தேவன் தம்மை அவர்களுக்கு வெளிப்படுத்துவார், ஆனாலும் அவர்கள் அதை விசுவாசிக்கமாட்டார்கள். ஏன், ஒருபோதும் விசுவாசிக்க மாட்டார்கள். அவ்வளவுதான் அது. 176. இதைக்குறித்து, நாம் முதலில் கவனம் செலுத்தி, ஏன் இக்காரியங்களை நிச்சயமாக விசுவாசிக்க வேண்டும் என்றும், எதற்காக விசுவாசிக்க வேண்டும் என்றும் பார்க்க வேண்டும், நீங்கள் கட்டாயமாக அவைகளை விசுவாசித்துதான் ஆக வேண்டும். இல்லையென்றால் நீங்கள் இழந்தவர்களாயிருப்பீர்கள். "சகோ. பிரன்ஹாமே, எதை விசுவாசிப்பது? உங்களையா?”  177. இல்லை ஐயா, என்னை இல்லை. நான் வார்த்தையைக் கூறுகிறேன். நான் இங்கு எதையாகிலும் பேசவில்லை. வார்த்தையை விசுவாசிப்பதைக் குறித்து வேதம் என்ன கூறுகிறதோ, அதையே நான் உங்களுக்கு கூறுகிறேன். ஆகவேதான் நான் வார்த்தையை அது எழுதப்பட்ட விதமாகவே விசுவாசிக்கவும் அதன்படி நடக்கவும் முயற்சிக்கிறேன். நான் அதினோடு எதையும் கூட்டு வதோ, குறைப்பதோகிடையாது. அது இருக்கிற விதமாகவே அதை வாசித்து விசுவாசிக்கிறேன். சர்வவல்லமையுள்ள தேவனுடைய கிருபையினாலும், உதவியினாலும் அவர் அதை நிரூபித்து இருக்கிறார், யாராகிலும் அவ்வாறு இல்லை என்று நிரூபிக்க முடியுமா என்று கேட்கிறேன்? ஒலி நாடாக்களைக் கேட்டுக்கொண்டிருக் கிறவர்களும் கூட, நீங்களும் அதைச் செய்யலாம். நான் கூறிய ஏதாகிலும் எப்பொழுதாவது தவறா யிருந்தது என்று நீங்கள் கூறமுடியுமா? அல்லது நான் கூறிய ஏதாகிலும் அது சொல்லப்பட்ட விதமாகவே தேவன் அதை நிரூபிக்காமலிருந்திருக்கிறாரா?  178. சரி, அவள் முன் குறிக்கப்பட்டவள் . இன்றுள்ள சபை முன்குறிக்கப்பட்ட மணவாட்டியா யிருக்கிறதா? கறைதிறை இல்லாத ஒரு மணவாட்டியை தேவன் தமக்காக பெற்றுக் கொள்வார் என்று வேதம் கூறவில்லையா? அப்படியானால் அது முன்குறிக்கப்பட்டதாயிருக்கும் அல்லவா? பாருங்கள்? நல்லது, கிறிஸ்துவும் முன் குறிக்கப்பட்டவராயிருந்தார். அவர் ஆபிரகாமின் ராஜரீகவித்தாயிருந்தார், அவ்வித்து என்ன செய்தது? ஆவியானது கிறிஸ்துவின் மேல் வந்த பொழுது, அவர் தேவவார்தைக்கு சாட்சி பகிர்ந்தார். தண்ணீரான ஆவி, வார்த்தையாகிய வித்தின் மேல் பொழியும் போது, தேவனுடைய வார்த்தையின் பேரில் உள்ள ராஜரீகவித்தான ஆபிராகமின் விசுவாசம், அதே பயிரை திரும்பவும் உற்பத்திச் செய்யும்.  179. "நான் அதை விசுவாசிக்க மாட்டேன்'' என்று நீங்கள் கூறலாம். சரி. நாம் ஆபிரகாமின் வித்து தான் என்பதை வேதத்தில் பார்க்கலாமா? ஆதியாகமம் 17ம் அதிகாரம் 6ம் வசனம் முதல் அதை பார்ப்போம். நான் அநேக குறிப்புகளை விடவேண்டியதா யிருக்கிறது. ஆனாலும் அவைகளின் பேரில் சில குறிப்புகளை மட்டும் பேச விரும்புகிறேன். ஏனெனில் யாராவது ஒரு பரியாசக்காரன் வந்து, "நான் அதை விசுவாசிக்கவில்லை” என்று சொல்லாதபடி அவனைத்தடுத்து நிறுத்தவே இக்காரியங்களைக் குறிப்பிடுகிறேன். பாருங்கள்? சரி. 17:7. நாம் 6ம் வசனத்திலிருந்து துவங்குவோம். “உன்னை மிகவும் அதிகமாய்ப் பலுகப்பண்ணி...... (ஆபிர காமின் வித்து) ...உன்னிலே ஜாதிகளை (புறஜாதியார் பலரும்) உண்டாக்குவேன்; உன்னிடத்திலிருந்து ராஜாக்கள் தோன்று வார்கள். உனக்கும் உனக்குப் பின்வரும் உன் சந்ததிக்கும் நான் தேவனாயிருக்கும்படி எனக்கும் உனக்கும் உனக்குப்பின் தலைமுறை தலைமுறையாக வரும் உன் சந்ததிக்கும் நடுவே, என் உடன்படிக்கையை (கவனியுங்கள்) நித்திய உடன்படிக் கையாக ஸ்தாபிப்பேன்.” 180. இப்பொழுது ஆபிரகாமின் வித்து என்பது என்ன? அது அவனுடைய மாம்சத்தைக் குறிப்பதல்ல. “இதைக்குறித்து பவுலும், வெளிப்பிரகாரமாக யூதன் யூதனல்ல, உள்ளான யூதனே யூதன் என்று கூறியிருக்கிறார். அப்படியானால் ஆபிரகாமின் வித்து என்பது என்ன? --- எந்த ஸ்தாபனம் என்ன கூறினாலும், தகப்பனோ அல்லது தாயோ அல்லது யார் என்ன கூறினாலும், தேவனுடைய முழு ஆலோசனையான வார்த்தையை விசுவாசிப்பதே ஆபிரகாமின் வித்தாகும். தேவன், “என் உடன்படிக்கையை இப்பொழுதே ஸ்தாபிப்பேன் (முன்குறித்தல்), இந்த உடன்படிக்கையை உனக்கும் உனக்குப் பின்வரும் உன் சந்ததிக்கும் தலைமுறை தலைமுறையாக வரும் உன் சந்ததிக்கும் நடுவே, என் உடன்படிக்கையை நித்திய உடன்படிக்கையாக ஸ்தாபிப்பேன், அச்சந்ததி அதை விசுவாசிக்கும்' என்றார். அதுதான் ஆபிரகாமின் வித்து. இப்பொழுது கவளியுங்கள், தேவன், "நான் அதை வித்தினுடன் ஸ்தாபிப்பேன்,” என்றார். 181. "நல்லது. சகோ. பிரன்ஹாமே, அது எல்லோரையும் குறிக்கிறதே" என்று நீங்கள் கூறலாம். சற்று பொறுங்கள். நாம் இப்பொழுது எபேசியர் 1ம் அதிகாரத்திற்கு சென்று, சற்று அதில் கூறப்பட்டதை படித்து, அங்கு இந்த பொருளைப்பற்றி தேவன் என்ன கூறுகிறார் என்று பார்ப்போம். கவனியுங்கள். 182. பவுல் எபேசு சபையின் மக்களை அழைக்கும் விதத்தை கவனியுங்கள். இப்பொழுது படிக்கப்போவதை கவனிக்க நீங்கள் எல்லோரும் உங்களை ஆயத்தப்படுத்திக்கொள்ளுங்கள். நமக்கு இன்னும் சில நிமிடங்களே உள்ளன .... இன்னும் நாற்பத்தைந்து நிமிடங்கள் உள்ளன .... அதன் பின் பகல் உணவிற்காக நாம் கூட்டத்தை முடிப்போம். தேவனுடைய சித்தத்தினாலே இயேசு கிறிஸ்துவினுடைய அப்போஸ்தலனாகிய (அப்போஸ்தலன் என்றால் என்ன? --- அனுப்பப்பட்டவன் என்று பொருள். "இயேசு கிறிஸ்துவினால் அனுப்பப்பட்ட பவுல்” அது சரியா? "சனகரீம் சங்கத்தினருடைய சித்தத்தினாலா? அவ்விதம் தவறாக படித்து விட்டேனா நான்? "லூத்தரன் சபயிைன் சித்தத்தின் படியா?”) பவுல், எபேசுவிலே கிறிஸ்து இயேசுவுக்குள் விசுவாசிகளா யிருக்கிற பரிசுத்தவான்களுக்கு (யார். அது? எல்லாருக்குமா? இல்லை, ஐயா. எல்லாரும் பரிசுத்தவான்களின் ஸ்தானத்தை எடுக்க முடியாது. அது சரி) எழுதுகிற தாவது:  183. கிறிஸ்து இயேசுவுக்குள் ஏற்கனவே இருப்பவர்கள். அதைக் குறித்து தான் இக்காலை நான் இச்சபைக்கு பேசிக்கொண்டிருக் கிறேன் என நம்புகிறேன். இக்காரியத்தை அக்குழந்தைகளுக்கு கூற முடியாது. அவர்கள் பலமான ஆகாரத்தை புசிக்க முடியாது; பாலைத்தான் அவர்கள் குடிக்க வேண்டும். அவர்கள் உணர்ச்சி தடைப்பட்டவர்கள். பாருங்கள்? அவர்களால் பலமான ஆகாரத்தை உண்ண முடியாது என்பதை ஞாபகம் கொள்ளுங்கள். இப்பொழுது கவனியுங்கள். "நம்முடைய பிதாவாகிய தேவனாலும், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினாலும், உங்களுக்கு கிருபையும், சமாதானமும் உண்டாவதாக. (சரி). நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் பிதாவாகிய தேவனுக்கு ஸ்தோத்திரம்; அவர் கிறிஸ்துவுக்குள் உன்னதங்களிலே ஆவிக்குரிய சகல ஆசீர்வாதத்தினாலும் நம்மை (இக்காலை நேரம் போல் இவ்வெளிப்பாட்டில் அன்பு கூருகிறவர்கள்; இதை உட்கொள்ளுங்கள்) ஆசீர்வதித்திருக்கிறார். (இங்கு சபைக்கு பேசுகிறார், வெளியிலுள்ளவர்களுக்கு அல்ல) 184. "தமக்கு முன்பாக நாம் அன்பில் பரிசுத்தமுள்ளவர்களும் குற்றமில்லாதவர்களுமாயிருப்பதற்கு, அவர் உலகத் தோற்றத் துக்கு முன்னே கிறிஸ்துவுக்குள் நம்மை தெரிந்து கொண்டபடியே” நாம் அவரை தெரிந்து கொண்டோமா? "ஓ சகோ. பிரன்ஹாமே, மன்னிக்கவும், நான் அவரை தெரிந்து கொண்டேன்” இல்லை, ஐயா ....வார்த்தையின்படி நீங்கள் அவரை தெரிந்து கொள்ளவில்லை. இயேசு, "நீங்கள் என்னை தெரிந்து கொள்ளவில்லை. நான் உங்களை தெரிந்து கொண்டேன்” என்று கூறினார். அவர் எப்பொழுது நம்மை தெரிந்து கொண்டார்? எப்பொழுது தம்முடைய சபையை தெரிந்து கொண்டதாக இயேசு கூறுகிறார்? உலகத்தோற்றத்துக்கு முன்னே என்று கூறுகிறார். "கிறிஸ்துவுக்குள் நம்மை தெரிந்து கொண்ட படியே” (மேதகு. இன்னார் நடத்திய கடைசி எழுப்புதல் கூட்டத்திலா? இல்லை, இல்லை. ஒருவேளை அவ்விதமாக ஒரு கோட்பாடிலோ, அல்லது பாடப் புத்தகத்திலோ படித்திருப்பீர்கள்; ஆனால் இந்த ஒன்றிலல்ல) "உலகத் தோற்றத்துக்கு முன்னே கிறிஸ்துவுக்குள் நம்மை தெரிந்துகொண்ட படியே”,...... (எப்பொழுது நாம் தெரிந்து கொள்ளப்பட்டோம்? கடைசியாக நடந்த எழுப்புதல் கூட்டத் திலா? நாம் தொடப்பட்ட அந்த இரவிலா? இல்லை. இவ்வுலகம் உண்டாக்கப்படுவதற்கு முன்பே, நட்சத்திரங்களும், அணுக்களும், உண்டாக்கப்படுவதற்கு முன்பே அப்பொழுதுதான் நாம் தெரிந்து கொள்ளப்பட்டோம். ஆமென். நான் அதைக் குறித்து இப்பொழுது பிரசங்கம் செய்யவேண்டாம். நான் இங்கே வேறொன்றை விளக்க முயற்சித்துக் கொண்டிருக்கிறேன். சரி...) "உலகத் தோற்றத்துக்கு முன்னே "...... (அது என்ன ? அங்கத் தினர்களாயிருப்பதற்கா! "இல்லை அல்லது நீங்கள் இரட்சிக்கப் பட்டபின்பு என்ன வேண்டுமானாலும் உங்கள் விருப்பப்படிச் செய்யவா'') தமக்கு முன்பாக நாம் அன்பில் பரிசுத்த முள்ளவர்களும் குற்றமில்லாதவர்களுமாயிருப்பதற்கு... (அங்கத்தினர்களாவதினாலா? ஓ! அது அன்பு அல்லவா? அது உண்மை . சரி. "அன்பிலே" என்று எழுதப்பட்டிருக்கிறது) (தயவு செய்து என்னை மன்னிக்கவும். நான் இடையிட்டு பேசிக்கொண்டிருக்கிறேன் என்றே யூகிக்கிறேன். நான் அவ்விதம் செய்யக் கூடாது. சரி.) .... தம்முடைய தயவுள்ள சித்தத்தின்படியே நம்மை இயேசு கிறிஸ்து மூலமாய்த் தமக்குச் சுவிகார புத்திரராகும்படி (ஆதியிலே இருந்த வித்து, பாருங்கள்) முன்குறித்திருக்கிறார். (என்ன? மு - ன் - கு - றி - த் - தி - ரு - க் - கி - றா - ர்.)  185. யாரால் அது செய்யப்பட்டது? தேவனால்! எப்பொழுது அதைச் செய்தார்? - உலகத்தோற்றத்திற்கு முன்பே! ஏவாளின் மூலம் தவறான பிறப்பினால், நாமெல்லாரும் மரணத்தின் பிள்ளை களாக்கப்படிருப்போமானால், சுயமாக இயங்கும் தேவனானவர் தம்முடைய பிள்ளைகளை மீட்பதற்கென்று ஒரு வழியை ஏற்படுத் தத்தான் வேண்டும். "பிதாவானவர் எனக்குக் கொடுக்கிற (கொடுத்த) யாவும் என்னிடத்தில் வரும்; என்னை அனுப்பின பிதா ஒருவனை இழுத்துக் கொள்ளாவிட்டால் அவன் என்னிடத்தில் வரமாட்டான்," என்று இயேசு கூறினார், ஓ! என்னே ! அப்படியானால் நீங்கள் செய்ததாக கூறும் மகத்தான காரியங்கள் எங்கே? நீங்கள் ஒன்றும் செய்ய வில்லை. நீங்கள் வெட்கப்பட்டாக வேண்டும். ஏனெனில் தேவனே எல்லாவற்றையும் செய்திருக்கிறார்.  186. என்னைக் குறித்து தவறாயும், மோசமாகவும் குற்றப்படுத்தி ஒருவர் பேசுவதாக நண்பர் ஒருவர் என்னிடம் கூறினார். அதற்கு நான், "ஓ! அதை மறந்து விடுங்கள்” என்றேன். "அதை எவ்வாறு நீங்கள் அவ்வளவு சுலபமாக கருது கின்றீர்கள்? உங்கள் குடும்பத்தை சம்பந்தப்படுத்தி சொல்லப்பட்ட காரியமல்லவா?'' என்று கூறினார். அதற்கு நான், "ஓ! என்னே! அவ்விதமான ஒரு சோதனை எனக்கு வரவேண்டுமென்று உலகத் தோற்றத்திற்கு முன்பே குறிக்கப்பட்டிருக்கிறது, ஆகவே அதைப் பற்றி பரவாயில்லை" என்றேன். அதற்கு அவர், “எப்படி அதை தாங்கிக் கொள்கிறீர்கள்?" என்று கேட்டார்.  187, அதற்கு நான், "அவ்விதம் இக்காரியங்களை நான் தாங்காதிருப்பேனானால், எல்லா நேரங்களிலும் நான் விழுந்து பின் வாங்குகிறவனாயிருப்பேன்" என்று கூறினேன். 188. இன்றுள்ள ஜனங்களோடு இருக்கும் காரியம் அதுதான். ''சகோ. பிரன்ஹாமே, நான் தேவனுடைய வார்த்தையின், சத்தியத்தை ஏற்றுக் கொள்வேனானால், என்னை வெளியே துரத்தி விடுவார்களே" என்று கூறுகின்றனர். நல்லது. இங்கு நீங்கள் எதை பெற்றுக்கொள்ள கவனித்துக் கொண்டிருக்கிறீர்கள்? இப் பாதையின் முடிவை கவனித்துப் பாருங்கள். உலகக் காரியங்களை நீங்கள் பார்ப்பீர்களானால், நீங்கள் எங்கே செல்கிறீர்கள் என்று உங்களுக்கே தெரியாது. அவன் இவ்வழியாய்ப் பார்த்துக் கொண்டிருக்கிறான். ஆனால் இனிவரப் போகும் மேலான காரியங்களை நீங்கள் நோக்குவீர்களானால், நீங்கள் போகும் பாதை உங்களுக்குத் தெரியும். பாருங்கள்? அதுவேதான். நீங்கள் போகும் பாதையைக் கவனித்துப் பாருங்கள். தேவனுடைய வார்த்தையின் வரிசையில் சார்ந்து கொள்ளுங்கள். 189. சரி, சுவிகார புத்திரராகும்படி நம்மை முன்குறித்திருக்கிறார். நாம் முன்குறிக்கப்பட்டிருக்கிறோம் என்று நீங்கள் விசுவாசிக் கிறீர்களா? இப்பொழுது, இயேசு முன்குறிக்கப்பட்டவரா? ஒரு வெளிச்சமோ, அணுவோ அல்லது ஏதாகிலு மொன்றோ தோன்றுவதற்கு முன்பே இயேசு அடிக்கப்பட்ட ஆட்டுகுட்டி யாகவும், தேவகுமாரனாகவும் இருந்தார். ஓ, அது தேவனின் மகத்தான காரியம். அப்படியிருக்க, இந்த செயற்கையாக குஞ்சு பொறிக்கப்பட்ட, பட்டாணி அளவுள்ள மூளையுள்ள மனிதவர்க்கம் தேவ வார்த்தையைக் குறித்து தர்க்கம் செய்து அது சரியாயில்லை யென்கிறது. வெட்கத்திற்குரிய காரியம்.  190. நீ யார்? சிலர் நரகம் இல்லையென்று வாதிக்கின்றார்கள், நீங்கள் ஒவ்வொருநாளும் நரகத்தின் மேலலேயே உட்கார்ந்திருக்கிறீர்கள்... 8000 மைல் அகலத்திற்கு உங்களுடைய கால்களுக்கடியில் எரிமலைப் போன்ற குழம்பு இருக்கின்றது, இப்படியிருக்க, நீங்கள் மேலே நோக்கிப் பார்த்து தேவனையும் அவருடைய வார்த்தை யையும் மறுதலிக்கின்றீர்கள்! நீங்கள் தேவனுடைய வார்த்தையை மறுதலிப்பதென்பது தேவனையே மறுதலிக்கிறதாகும். நிச்சயமாக அது தான் சரி. ஓ! கர்த்தாவே, நீர் எவ்வளவு மகத்துவமானவர், நாங்கள் எவ்வளவு உத்தமர்களாயிருக்க வேண்டும். 191. சரி . வார்த்தையின் விசுவாசிகளும் ஆவியும் நிச்சயமாக ஒன்றாக இருத்தல் அவசியம் , உங்களுக்குப் புரிகிறதா? விசுவாசிகளும், வார்த்தையும், ஆவியும் முற்றிலுமாக ஒன்றாக யிருக்க வேண்டும். உங்களுடைய சொந்த எண்ணத்தை நீங்கள் எண்ணுவதில்லை. உங்கள் சொந்த சிந்தனையை நீங்கள் உபயோகிப்ப தில்லை. அது அற்புதமானதில்லையா? கிறிஸ்து இயேசுவி லிருந்த சிந்தையே உங்களிலும் இருக்கும். பாருங்கள்? கிறிஸ்துவிலிருந்த சிந்தை உங்களிலிருக்கு மானால் அவர் வார்த்தையை எடுத்த வண்ணமே நீங்களும் எடுப்பீர்கள். ஏனெனில் அவரே வார்த்தையா யிருக்கிறார். கிறிஸ்துவின் சிந்தை உங்களிலிருக்குமானால் நீங்களும் வார்த்தையாயிருக்கிறீர்கள். தேவனுடைய ஜீவிக்கிற வார்த்தையாய் இவ்வுலகத்தில் அவருக்கு பிரதிநிதிகளாக அவருடைய கிரியைகளை தொடர்ந்து செய்வீர்கள். (அது சரி.) சபையானது அவ்விதமாகவே இருக்க வேண்டும். 192. அது அவ்விதமா யிருக்குமேயானால், வேதமானது ஆதியிலே இயேசுவின் சீஷர்களின் மூலம் வெளிப்பட்ட விதமாக மறுபடியும் உங்களில் வெளிப்பட்டு ஜீவிக்கிறதாயிருக்கும். இப்பொழுது நாம் பார்ப்போம். இங்குள்ள பதினைந்து பக்கங்களை நான் துரிதமாக முடிக்க வேண்டும். அவ்விதம் துரிதமாகச் செய்ய எனக்கு விருப்ப மில்லை. ஆனாலும் அவைகளை வேகமாக முடிக்க முயல்வேன். இல்லையெனில், நான் இன்று பிற்பகல் அதைச் செய்வேன். எனக்கு நாளை ஒரு கூட்டம் உண்டு. நான் அதை துரிதமாகச் செய்ய வேண்டும். சரி, நம்மால் முடிந்தவரை நாம் சிறிது வேகமாகச் செய்யலாம் - அதற்குள்ளாக. நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? 193. சரி. அது அவ்விதமாயிருக்கையில், கிறிஸ்து ஆதி காலங்களில் எவ்விதமாய் வெளிப்பட்டாரோ, வேதமானது அவ்விதமே மறுபடியும் வெளிப்பட்டிருக்கிறது. பாருங்கள்? நீங்கள் கிறிஸ்துவைப் போல முன்குறிக்கப்பட்ட வித்தா யிருக்கிறதினால் மழையானது வித்தின் மேல் பொழியும்போது அது தன்னை உற்பத்தி செய்கின்றது. பரிசுத்த ஆவி பொழியும் பொழுது ... இயேசு தாம் தெரிந்து கொண்ட அந்த வித்துக்கள் மீது பரிசுத்த ஆவி விழுந்த பொது .... எப்பொழுது தெரிந்து கொண்டார்? உலகம் தோன்றுவதற்கு முன்பே ... அப்பொழுதே அவர்கள் முன்குறிக்கப் பட்டுவிட்டனர். அது சரியா? அப்போஸ்தலர்கள் என்ற வார்த்தை யாகிய வித்துக்கள் அந்த மேலறையிலே தரித்திருந்தார்கள், அங்கே அவர்களுக்குள் வித்தானது ஜீவனற்று கிடந்தது. சடுதியிலே வானத்திலிருந்து தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவது போன்று சத்தம் கேட்டது, அது அவ்வறை முழுவதையும் நிரப்பிற்று. அவ்வித்துக்கள் முளைத்து வளர ஆரம்பித்தன, அவர்கள் தேவனுடைய வார்த்தையை வெளிப்படுத்த ஆரம்பித்து விட்டார்கள்.  194. சரி. அப்படியானால் இன்று ஏன் எழுப்புதல் அக்கினி கொழுந்து விட்டு எரியவில்லை? நான் இங்கு ஏறக்குறைய பத்து வேத வாக்கியங்களைக் குறித்து வைத்துள்ளேன் - நான் பேசவேண்டியவைகள். (நீங்கள் அதை இங்கே காணலாம்). ஆனால் நான் அவைகளில் சிலவற்றை விட்டு விடுகிறேன். நான் ... அதன் சுருக்கத்தை நீங்கள் அறிந்துள்ளீர்கள்.  195. சரி. ஏன் எழுப்புதல் அக்கினி கொழுந்துவிட்டு எரியவில்லை? இங்கு சிலருடைய பெயர்களை நான் குறிப்பிட அவசியமாயுள்ளது. தேவன் அவ்விதம் குறிப்பிட அனுமதிக்காத பட்சத்தில் நான் அதை செய்ய விரும்புவதில்லை. ஆனால் இங்கு நான் அவ்விதம் குறிப்பிட வேண்டியவனாயுள்ளேன். சிலகாரியங்களை நான் சொல்ல விரும்புகிறதில்லை. ஆனாலும் அவைகளைச் சொல்லத்தான் வேண்டும். ஏனெனில் இப்பொருள் தெளிவாகும் பொருட்டும், நான் எதை நோக்கி செல்கிறேன் என்றும், நான் ஏன் அதை செய்தேன், எதற்காக செய்தேன் என்பதற் காகவும் இவைகளை நான் குறிப்பிடுகிறேன். இதுவே தேவனுடைய வார்த்தையென்று நான் விசுவாசிக்கிறேன் கிறிஸ்துவுக்கென்று ஒரு சபை உன்டென்று விசுவாசிக்கிறேன். சபையே நிலமா யிருக்கிறது. (அதை குறித்து சற்று பின்பு பார்ப்போம்) அங்கு ஆவியின் மழைபொழிவதற்கு முன்பு வார்த்தையாகிய விதை அங்கு விதைக்கப்பட வேண்டியதா யிருக்கிறது. பாருங்கள்? 196. ஏன் இந்த எழுப்புதல் அக்கினி இன்று குறைந்து போயிற்று? ஓரல் ராபர்ட்ஸ், பில்லிகிரஹாம் போன்ற சுவிசேஷகர்கள் முன்பு தேசத்தை அக்கினியால் எரித்தது போல ஏன் இப்பொழுது இல்லை? என்னுடைய கூட்டங்களோ கேட்கப்படுவது கூட கிடையாது. அந்த மூன்று கூட்டங்கள் தாம். காரியம் என்ன?  197. இங்கு நாம் சற்று ஆழமான காரியங்களைப் படிக்க போகிறோம். இந்த செய்தி அடங்கிய ஒலி நாடாக்கள் பில்லி கிரஹாமின் கையிலோ, ஓரல் ராபர்ட்சின் கையிலோ கிடைக்குமானால், "சகோதரர்களே, நான் உங்களை அவமரியாதை செய்ய விரும்பவில்லை; உங்களோடு நானும் சுவிசேஷ ஊழியத்தில் ஒரு சகோதரன் என்று தெரியப் படுத்துகிறேன். நீங்கள் இச்செய்தியை கேட்ட பின், நான் ஏன் அவ்விதம் செய்தேன் என்று உங்களுக்கு நன்றாய் புரிந்து கொள்ளுதல் உண்டாயிருக்கும். மேலும் நான் காரணத்தை கூறும் பொழுது, அதை நேர்மை யாகவும், உண்மையாகவும் நான் கூறப்போவதால், தேவனுடைய சமூகத்திலும் உங்களுடைய பார்வையிலும் எனக்கு கிருபை கிடைக்கும் என்று நான் நம்புகிறேன்.”  198. பில்லி கிரஹாமின் மூலம் இவ்வுலகம் சற்று காலத்துக்கு முன்பு கொழுந்து விட்டு எரிந்தது. ஆனால் இப்பொழுதோ அது அதிகம் கேட்கப்படுவதில்லை. அவர் தொடர்ந்து சென்று கொண்டுதான் இருக்கிறார். ஆனாலும் அக்கினி குறைந்ததன் காரணம் என்ன? அவ்விதம் ஓரல் ராபர்ட்சும், டாமி ஆஸ்பானும். அவர்கள் எல்லோரும் தேவமனிதர்கள்தாம். என்ன நடந்தது என்னை ஊழியத்திற்கு தேவன் அழைத்தாரென்று நான் விசுவாசிக்கிறேனே, ஆனால் என்னுடைய ஊழியத்திற்கு நேர்ந்தது என்ன? இங்குதான் சில கேள்விகளுக்கு நான் பதிலுரைக்கப் போகிறேன். சம்பவித்தது என்ன?  199. “சகோ. பிரன்ஹாமே, அவர்களெல்லாரைக் காட்டிலும் உம்முடைய ஊழியம் தான் மிகவும் மரித்ததாயிருக்கிறது' என்று நீங்கள் கூறலாம். அது உண்மைதான். அது சரி. என்னையும் ஓரல் ராபர்ட்சையும் விட பில்லிகிரகாம் அதிகமாக அறியப்பட்டார். நான் 6 மாதங்களில் ஜனங்களுக்கு அறியப்படுவதைப் பார்க்கிலும் ஒரேநாளில் ஓரல் ராபர்ட்ஸ் அறியப்பட்டார். டாமி ஆஸ்பார்ன், டாமி ஹிக்ஸ் போன்றவர்கள் அதிகமாக இவ்வுலகில் அறியப்பட்டனர். அவர்கள் எல்லோரையும் விட என் காரியம் அதிக தூரமாயிருந்தது. “சகோ. பிரன்ஹாமே, வார்த்தையை உண்மையாக விசுவாசிக்கிறதாகச் சொல்லுகிறீர்களே உங்களுக்கு நேர்ந்தது என்ன?,'' என்று நீங்கள் கேட்கலாம். என்ன நடைபெற்றது? அதைத்தான் நாம் அறிந்துகொள்ள விரும்புகிறோம். அதைத்தான் நாம் அறிந்துகொள்ள விரும்புகிறோம்.  200. இப்பொழுது உங்கள் மனதை திறந்து சற்று கவனியுங்கள். நீங்கள் சகலத்தையும் ஒதுக்கிவிட்டு, உங்கள் இருதயத்தை ஒரு நிமிடம் திறந்து கவனியுங்கள். ஆதியாகமம் முதல் அதிகாரத்தில், நாம் நம்முடைய சிந்தனைகளுக்கு ஆதாரமாக இன்று, "தங்கள் தங்கள் ஜாதியின்படியே பிறப்பிக்கக் கடவது” என்ற காரியத்தை வாசித்ததை ஞாபகத்தில் இருத்திக் கொள்ளுங்கள், அது தன்னு டைய ஜாதியை மட்டுமே பிறப்பிக்க வேண்டும். அதுதான் உண்மை . ஞாபகம் கொள்ளுங்கள், இவ்வுலகம் முழுவதிலும் விதைகள் விதைக்கப்பட்டிருந்தன. மழையானது, அவைகள் தங்கள் தங்கள் ஜாதியைப் பிறப்பிக்குமாறு செய்தது  201. பயிர்கள் அறுவடையின் காலத்திற்கு அருகாமையில் இருக்கிறது என நான் விசுவாசிக்கிறேன். அதை நீங்கள் விசுவாசிக்கின்றீர்களா? அதை எல்லோரும் ஒப்புக் கொள்வீர்கள். நாம் அறுவடையின் காலத்திற்கு அருகாமையில் இருக்கிறோம், விதைகள் எல்லாம் பயிரிடப்பட்டுவிட்டன. நம்மோடு உள்ள காரியம் அதுதான். விதைகள் எல்லாம் பயிரிடப்பட்டுவிட்டன. ஓ தேவனே, எனக்கு முன்பாக எது கடந்து போயிற்று என்று நீங்கள் பார்க்க விரும்புகின்றேன். விதைகள் எல்லாம் பயிரிடப்பட்டுவிட்டன. விதைக்க ஒரு காலம், அறுவடை செய்ய ஒரு காலம் என்பதை நினைவு கூருங்கள். 202. சரி. மூன்று வகையான விதைகள் விதைக்கப்பட்டன. முதலாவது ஸ்தாபனத்தின் வித்து பில்லிகிரஹாம். அவர்தான் தலைமை பயிரிடுபவர். இரண்டாவது, பெந்தகோஸ்தே வித்து --- ஓரல் ராபர்ட்ஸ். பெந்தகோஸ்தே விதையானது விதைக்கப்பட்டாயிற்று. (நான் இப்பொழுது ஸ்தாபன பெந்தகோஸ்தேயைப் பற்றி பேசுகிறேன்) மூன்றாவது தேவவார்த்தை என்னும் விதை விதைக்கப்பட்டது. சகோதரர்களே, நீங்கள் இதைப் புரிந்து கொள்ள வேண்டும். தேவன் திரும்பச் சொல்லச்சொன்னாலொழிய நான் இதைக் கூறப் போவதில்லை. ஆகவே நீங்கள் இதை தெளிவாய் புரிந்து கொள்ள வேண்டுமென்று விரும்புகிறேன். மூன்று விதமான விதைகள் நடப்பட்டாயிற்று. ஆகவேதான் விதைப்பு என்கிற காரியம் ஏறத்தாழ முடிந்து விட்டதாய் இருக்கின்றது. பாருங்கள்? மழை அல்லது ஆவி பொழியப்படுவதற்கு முன்பு விதைகள் விதைக்கப்பட்டாக வேண்டும். (அது சரியா?) இங்கு நீங்கள் என்னோடு சற்று ஒவ்வாமல் இருக்கலாம். ஆனால் சற்று பொறுங்கள்.  203. விதைகள் விதைக்கப்பட்ட பிறகே மழையானது பொழிந்து விதைகளுக்கு தண்ணீர் பாய்ச்ச வேண்டும். அது சரியா? இங்கு எபிரேய பாஷை தெரிந்தவர்கள் இருக்கிறார்களா? நீங்கள் விரும்பினால் அப்பதத்தைப் பாருங்கள்.  204. அனேக ஸ்தாபனங்கள், நாம் “பின் மாரி”யின் காலத்தில் ஜீவிக்கிறோம் என்று கூறுவதைக் கேள்விப்படுகிறோம். அது அறிவீனம், அவ்விதமான காரியம் ஒன்றுமில்லை. ஓ ..... ஏதோ ஒன்று சம்பவிக்கின்றது. அது என் முன்னால் கடந்து போவதை நான் காண்கிறேன். அந்த ஆவியானவரைப் பிடித்து விட்டேன் பாருங்கள். ஆமென். இது சத்தியம் என்று நான் அறிவேன்; இது கர்த்தர் உரைக்கிறதாவது என்ற விதமாயுள்ளது. ஒரு தரிசனம் என் முன்பு அசைந்து வருகிறது. அதை இங்கு சொல்வதற்கு கடினமா யுள்ளது. ஒவ்வொரு சமயமும் நான் பார்க்கும் போது, அது என் முன்னால் அசைந்து, அவ்விதமாக உடைந்து, இப்பக்கமாக அசைந்து, அவ்வழியே பார்க்கிறது. சில நபர்கள் அங்கு உட்கார்ந்திருப்பதை நான் கவனித்துக்கொண்டேயிருக்கிறேன். பாருங்கள்? 205. சரி. அங்கு அந்த வரிசையில் என்ன நடந்தது என்பதை சரியாக அறியாதவனாக நான் இருக்கிறேன்.  206. அறுவடையின் காலம் அருகாமையிலிருக்கிறது என நான் விசுவாசிக்கிறேன். ஏனெனில் விதைகள் விதைக்கப்பட்டாகி விட்டன. ஸ்தாபனத்தில் வித்துக்களான சபைகளாகிய பாப்டிஸ்டு கள், பிரஸ்பிடேரியன்கள், லூத்தரன்கள் விதைக்கப் பட்டு விட்டனர். ஓரல் ராபர்ட்ஸ், டாமி ஹிக்ஸ், டாமி ஆஸ்பார்ன் போன்ற மகத்தான தேவமனிதர்கள் மூலம் பெந்தகோஸ்தேயின் வித்துக்கள், பெந்தகோஸ்தே ஸ்தாபனத்திற்குள் விதைக்கப்பட்டு விட்டன. பாருங்கள்? கலப்பில்லாத தேவவார்த்தையான வித்தும் ஸ்தாபனங்களுக்கு புறம்பே விதைக்கப்பட்டாயிற்று என்று நான் விசுவாசிக்கிறேன். அது தான் காரியம். பாருங்கள்? 207. வித்தின் செடியானது வளரும் முன்னர் அதற்கு வித்தின் தண்ணீர் அவசியமாயிருக்கின்றது. விதைக்கப்பட்ட விதை வளர்வதற்கு முன்பாக தண்ணீரானது அதின் மேல் பொழியப்பட வேண்டியதாயுள்ளது. 208. "நல்லது, சகோ. பிரன்ஹாமே, எங்களுடைய அமைப்பு அவ்விதம் ......" என்று நீங்கள் கூறலாம். அது சரிதான் என்று நான் அறிந்திருக்கிறேன். உங்கள் எண்ணம் எது என்று நான் கிரகிக்கிறேன்; அதை நீங்கள் மறைக்க முடியாது. பாருங்கள்? ஆனால் எதை நினைக்கிறீர்கள் என்பதைக் குறித்து ஜாக்கிரதையா யிருங்கள்.  209. இப்பொழுது, விதைகள் விதைக்கப்பட்டாக வேண்டும். அது வளர்வதற்கேன்று அதற்கு தண்ணீர் அவசியமாயிருக்கின்றது. "நல்லது, சகோ, பிரன்ஹாமே, (உங்கள் எண்ணங்களை நான் திறக் கப்போகிறேன்) எங்களுக்கு தண்ணீர் இருந்தது" என்று நீங்கள் கூறலாம். அது அவ்விதமே இருக்கட்டும். அது உண்மைதான், நீங்கள் தண்ணீரை உடையவர்களாக இருந்தீர்கள். ஒரு முட்டைகோஸையோ அல்லது ஏதாகிலும் ஒரு விதையையோ விதைக்கும் போது வழக்கமாக சிறிதளவு தண்ணீரை ஊற்றுவார்கள். பாருங்கள்? 210. சரி. விதைக்கும் பருவத்தில் நமக்கு உண்டாயிருப்பது என்ன?  'ஓ முன்மாரி என்று கூறுவீர்கள்.” அறீவீனம். யோவேல் 2ம் அதிகாரத்தில் கூறப்பட்டிருக்கும் முன் மாரியை எபிரேயு பாஷையில் எவ்விதம் குறிக்கப்பட்டிருக்கிறது என்று பாருங்கள். அது (m-o-u-r-e-h,) 'மூரே' என்று எழுதப்பட்டிருக்கிறது, அதன் பொருள்  போதகம். ஆக, போதக மழையானது கடந்து சென்றது, ஸ்தாபனத்தின் போதக மழையானது கடந்து சென்றது என்பதே அதன் பொருள். "நாற்பத்து நாலில் ஒரு கோடி நபர்கள்” என்பது போல. பாப்டிஸ்டுகள், பெந்தகோஸ்தேயினர் அங்கத்தினர்கள் கோடிக்கணக்காக சேர்த்தனர். பாருங்கள்? அதுதான் சரி. அதேசமயம் போதக மழை ஒரு சிறுபான்மையோரான கூட்டத்திற் காகவும் பெய்தது.  211. இப்பொழுது கவனியுங்கள். இப்பொழுது, மூரே என்னும் வார்த்தையை நினைவில் கொள்ளுங்கள். மூரே என்னும் வார்த்தைக்கு முன்மாரி - போதித்தல் என்று பொருள். அது மூரே மழை - போதிக்கும் மழை. போதிக்கும் மழை புறப்பட்டது.  212. பில்லிகிரஹாமும், பெந்தகோஸ்தேயினரும் இவ்வுலகத்தைத் தட்டி எழுப்பினர். அதேபோல் தேவனுடைய வார்த்தையும் இவ்வுலகத்தை தட்டி எழுப்பிற்று. ஆனால் தற்பொழுது காரியம் என்ன? பின்மாரிக்காக அவள் இப்பொழுது காத்து கொண்டிருக் கிறாள். அது அவள் தன் கனிகளைப் பிறப்பிக்கும் போது உண்டாகும். ஓ, நீங்கள் அதை புரிந்து கொள்கிறீர்கள் என நம்புகிறேன்.  213. எந்த ஜாதி விதையை நீங்கள் உங்கள் நிலத்தில் பயிரிடுகிறீர் களோ அதே ஜாதியைத்தான் அறுவடை செய்வீர்கள். ஸ்தாப னங்கள் அதிகமான அங்கத்தினர்கள் வேண்டுமென்று விரும்பினால் அதைதான் அவர்கள் பெறப்போகிறார்கள். அதைத் தான் அவர்கள் பெற்றிருக்கிறார்கள். பெந்தகோஸ்தேயினர் அதிக பெந்கோஸ்தே யினரை விரும்புகின்றனர். அவர்கள் அதையே பெறப்போகிறார் கள். சரி. ஆனால் வார்த்தை தேவ குமாரர்களையும் தேவகுமாரத்தி களையும் உற்பத்தி செய்யப் போகிறது. ஹு ... ஹும். அது இனி வரப்போகிறதாயிருக்கிறது. கவனியுங்கள், வரப்போகின்றதாயுள்ள அந்த மகத்தான பின்மாரி செய்யவிருப் பதை கவனியுங்கள். அவர்கள் மதில்கள் மேலாக ஓடித்தாவி ஒரு சேனையாக வரப்போகிறார்கள். நீங்கள் சிறிது பொறுத்திருங்கள். ஹு.... ஹும். எந்த ஜாதி விதையை நீங்கள் நிலத்தில் பயிரிடுகிறீர்களோ அதே ஜாதியைத்தான் அறுவடை செய்வீர்கள். 214. சரி, இந்த இரண்டு ஸ்தாபன ஜாதிகளைப்பற்றி புரிந்து கொண்டீர்களா? இந்த இரண்டு ஸ்தாபன ஜாதிகளும் ஒன்றாக இணைந்து சோதோமுக்குச் செல்லும். ஆனால் வார்த்தையோ, ராஜரீக வித்தினிடம் தங்கிவிடும். ஆமென். பாருங்கள்? “லோத்தினு டைய நாட்களில் நடந்தது போலவும், மனுஷகுமாரன் வெளிப்படும் நாளிலும் அப்படியே நடக்கும்' என்று இயேசு கூறினார். ஒரு பின் வாங்கிப் போன மனிதனுக்காகவும் (சிறிதளவு தேவபக்தி அவனிடம் இருந்தது) அவனுடைய மனைவிக்காகவும் இரண்டு அபிஷேகிக்கப் பட்ட தூதர்கள் சோதோமிற்கு சென்று அவர்களை மீட்க முயற்சி செய்தனர். அவனுடைய மனைவிக்கு என்ன நடந்ததென்று உங்களுக்குத் தெரியுமா? அவள் கிருபையை இழந்து போனாள். அவர்கள் வெளியே வந்த பிறகு அவனுடைய மகள்கள் எதை உற்பத்தி செய்தார்கள் என்று பாருங்கள். "பிஸ்கோத்திலுள்ள மயிரைப் போன்று” என்ற பழமொழிக்கிணங்க அது எப்பொழுதும் அவ்விதமாயுள்ளது. அது சரியென்று உங்களுக்குத் தெரியும். அவ்விதம் சொல்வதற்தாக மன்னிக்கவும்; அது அப்பொழுதும் அவ்விதமே ... தேவனுடைய வார்த்தையை நீங்கள் மறுதலிக்க முடியாது! 215. ஒருவர் அங்கு ஆபிரகாமோடு தங்கி அவனுக்கு ஒரு அடையாளத்தைக் கொடுத்தார். அது சரிதானா? சரி. சரி. ஒருவர் அங்கேயே .... ஆபிரகாமும் அவனுடைய குழுவினரும் எவ்விதம் அழைக்கப் பட்டனர்? தெரிந்து கொள்ளப்பட்ட வித்து ஒரு போதும் விழுந்து போகவில்லை. அவர்கள் பரதேசிகளாயிருந்தனர். அவர்கள் இங்கும் அங்குமாக சுற்றித் திரிந்து இங்கும் அங்குமாக திரிந்து எந்த ஒரு ஸ்தாபனமாயுமிருக்கவில்லை. ஆனால் ஸ்தாபனமோ அங்கு சென்று ஒரு பட்டணத்தைக் கட்டிக் கொண்டது. லோத்து அங்கு மதகுருவாகவோ, நியாயாதிபதியாகவோ அமர்ந்திருந்தான். அங்கிருந்த கண்காணி, " அந்த மனிதன் நம்மிடையே வேண்டாம், அவன் நம்முடைய பிரமாணங்களோடு ஒத்துப் போகமலிருக் கிறான். அத்தகையவனை நாம் வைத்திருக்க முடியாது" என்றான். அந்த வயது சென்ற லோத்து அங்கு அமர்ந்திருந்தான். “நம்முடைய கூட்டத்தின் விசுவாசப் பிரமாணத்தை அவன் கைக்கொள்ளவில்லை யென்றால், அவன் நம் மத்தியில் வேண்டவே வேண்டாம்” என்று அவர்கள் கூறினார்கள். கலப்பினமே! தேவனுடைய வீட்டின் மேல் உங்களை நியாயாதிபதியாக வைத்தது யார்? ஹு.... ஹும். தேவனு டைய வாரர்த்தை எவ்விதமாயினும் பிரசங்கிக்கப்படும்.  216. பரிசுத்த மார்டீன் அவ்விதமாயிருந்த ஒரு கூட்டத்திற்கு சென்றார். அவர் கதவுகளை உடைத்து உள்ளே சென்ற பிறகும் கூட அங்கிருந்த தலைவன் அவருக்கு எழுந்திருந்து ஒரு மரியாதையும் செலுத்தவில்லை. தேவன் அத்தலைவன் அமர்ந்திருந்த ஆசனத்தையும் அவன் அங்கிகளையும் எரியச்செய்து, தேவனுடைய மனிதனுக்கு மரியாதை செலுத்தத்தக்கதாக எழுந்திருக்கச் செய்தார். ஹு..... ஹும். பாருங்கள்? அது சரி. அவள் அமர்ந்திருந்த சிங்காசனம் தீப்பற்றி எரிந்தது. அது உண்மை . அதை நீங்கள் சபையின் சரித்திரத்தில் படித்திருப்பீர்கள். ஆம் ஐயா. அவர் அங்கு சென்று அற்புதங்களையும் அடையாளங்களையும் நிகழ்த்தி, தான் நிற்கிறதான வார்த்தையை நீரூபித்தார். அவர்கள் தங்கள் கண்காணியையும், தாங்கள் என்ன விரும்பினார்களோ அவைகளை யெல்லாம் அங்கு வைத்திருந்தார்கள். ஆனால், அங்கு முன் குறிக்கப்பட்ட தேவபிள்ளைகள் தேவனுக்கு உண்டு, அவர்களிடமும் தேவன் செல்ல வேண்டுமே. அது தான் சரி. 217. ஆகவே நினைவில் கொள்ளுங்கள், அது என்ன? இப்பொழுது, இங்கு நாம் சிறிது நிறுத்துவோம்... லோத்து ஸ்தாபனமற்றவனாக இருப்பதற்கு அவனுக்கு ஒரு சந்தர்ப்பம் கொடுக்கப்பட்டது. அது சரியா? ஆபிரகாமோடு பிரயாணம் செய்வதற்கு அவனுக்கு ஒரு சந்தர்ப்பம் கொடுக்கப்பட்டது. ஆனால் உலக ஆசை அவனை நெருக்கிப் போட்டுவிட்டது. அதுதான் இன்றும் நடந்திருக்கிறது. ஞாபகம் கொள்ளுங்கள், சோதோமிலிருந்தவர்கள் ஒருபோதும் இயற்கைக்கு மேம்பட்ட அற்புதங்களைக் கண்டதில்லை அவர்களுக்கு ஒரு குருட்டாட்டம் இருந்தது; வார்த்தையை பிரசங்கிப்பது ஒரு அவிசுவாசியை குருடாக்குகிறது, அதை தான் பில்லிகிரகாமும், மற்றவர்களும் அங்கேயுள்ள அவிசுவாசிகளுக்குச் செய்கின்றனர். இதை நீங்கள் மறுக்க முடியாது. அது உண்மை . ஏனெனில், இயேசு, "லோத்தினுடைய நாட்களில் நடந்தது போலவும் மனுஷ குமாரன் வெளிப்படும் நாளிலும் அப்படியே நடக்கும்'' என்றார். இதோ அது இங்கே வேதத்திலுள்ளது. பாருங்கள்? மனுஷ குமாரன் வருகையிலும் அது அப்படியே நடக்கும். 218. இங்கு கவனியுங்கள், வார்த்தை என்ற ஒருவர் இருந்தார். அவர் வார்த்தையாயிருந்தார். அவர் யாருடன் தங்கினார்? அவர் வாக்குத்தத்தம் பண்ணப்பட்டவர்களோடு அல்லது முன் குறிக்கப்பட்டவர்களோடு தங்கினார். வார்த்தை தெரிந்துகொள்ளப் பட்டவர்களோடு தங்கிற்று. இன்றைக்கு வார்த்தையாகிய தேவன் முன்குறிக்கப்பட்டவர்களோடு தான் தங்குவார்! அது வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட ஆபிரகாமின் ராஜரீக வித்தா யிருக்கிறது.  219. அது எவ்வித கிரியையைச் செய்தது? இயேசு கிறிஸ்து என்ற ரூபமாக 800 வருடங்களுக்குப் பின் வெளிப்பட்ட அது என்ன கிரியையைச் செய்தது? ஆபிரகாமிடம் செய்த வார்த்தையாகிய அதே கிரியையை திரும்பவும் செய்தது. அங்கு சில நாளைக்கு முன்பாகத்தான் அவர் ஆபிராமின் பெயரை ஆபிரகாம் என்று மாற்றியிருந்தார். அவர் கூடாரத்திற்கு தம் முதுகை காட்டியவாறு, "உன்னுடைய மனைவி சாராள் (சாராய் அல்ல) எங்கே?” என்று கேட்டார். அதற்கு ஆபிரகாம், “உமக்கு பின்பாக கூடாரத்தில் இருக்கிறாள் " என்றான்.  220. அவர், “ஒரு பூரண உற்பவ காலத் திட்டத்தில் நிச்சயமாக உன்னிடத்திற்கு திரும்ப வருவேன், (ஆங்கில வேதத்தில் - "I Will certainly return" என்று எழுதியிருக்கிறது. "I'' என்று ஆங்கிலத்தில் குறிப்பிடப்பட்ட சொல் தனிப்பட்ட பெயர் சொல்லை குறிக்கிறது. தமிழாக்கியோன்) நீ காத்திருந்த அந்த பிள்ளையை பெற்று கொள்ளுவாய். பின்மாரியானது பெய்யக் காத்திருக்கிறது. வரப்போகும் குமாரனை நீ விசுவாசித்து அந்த வித்தை போதுமான காலம் வரை நீ உனக்குள் வைத்திருந்து விட்டாய், இப்பொழுதோ அவர் வருகிறார்” என்று கூறினார். அந்த தெரிந்து கொள்ளப்பட்ட வித்தே இன்று உண்மையான சபையாகும், பாருங்கள். "நீங்கள் அவருக்காக காத்திருக்கிறீர்கள், நான் அவரை உங்களிடம் அனுப்பப் போகிறேன்." இதை சொன்னவர்யார்? வார்த்தை யானவரே இதை சொன்னார். 221. "ஓ . அது வார்த்தையில்லை" என்று நீங்கள் கூறலாம். தயவுசெய்து என்னை மன்னிக்க வேண்டும். ஆபிரகாம் அவரை ஏலோஹிம் என்று அழைத்தான். ஏலோஹிம் என்பதற்கு தன்னில் தானே நிறைந்தவர், சர்வவல்லவர் என்று பொருள். அவர்தான் வார்த்தையாகிய ஏலோஹிம். அவர் எங்கு வருகிறார்? ஆபிரகாமின் வித்திற்கு வருகிறார். 222. ஸ்தாபனத்தோடு அவருக்கு எந்த விதமான சம்பந்தமுமில்லை என்பதை நினைவு கூறுங்கள். அவர் தெரிந்து கொள்ளப்பட்டவா களோடு தரித்திருந்து அற்புதங்களையும், அடையாளங்களையும் காண்பித்தார். இப்பொழுது சிறிது நேரம் பொருத்திருங்கள்.  223. அப்பொழுது சாராள் அவனுக்குள் .... அந்த சீர்கேட்டைட் பாருங்கள். பாருங்கள்? சாராள் அதை அவிசுவாசித்தாள், தேவன் அவளை அதற்காக கொன்றிருக்கலாம். அது உங்களுக்குத் தெரியுமா அவள் அங்கு வெளியே வந்து ஆபிரகாமை மறுதலித்தாள். அவள் “நான் கிழவியும், என் ஆண்டவன் நூறு வயதுள்ளவரானார் ஸ்திரீகளுக்குள்ள வழிபாடு எனக்கு நின்று போய் அநேக வருடங்கள் ஆகின்றன. ஏன் நாங்கள் கணவனும் மனைவியுமாக வாழ்ந்து 25 அல்லது 30 வருடங்களாகின்றன. ஸ்திரீகளுக்குள்ள வழிபாடும் 50 வருடங்களுக்கு முன்பே நின்று போயிற்று இப்படியிருக்க எனக்கு இன்பம் உண்டாயிருக்கும் என்று அவா கூறுகிறாரே'' என்று தன் உள்ளத்திலே நகைத்தாள், அவள் புன்சிரிப்பு செய்யவில்ல - அவள் தன் உள்ளத்தில் சற்று சிரித்தாள் ஆபிரகாம் - அவனுடைய கணவன். அவ்விதமான மனைவிகளாகத் தான் நீங்கள் இருக்க வேண்டும். இருந்தாக வேண்டும். பவுலுப் இதையே கூறினான். உங்கள் கணவன்மார்களை இவ்விதம்தான் நேசிக்க வேண்டும். கலப்பினம் செய்வதற்காக அல்ல. பாருங்கள் உங்கள் சிந்தனைகளை நினைவில் கொள்ளுங்கள். நாம் அதைக் குறித்து இன்று பிற்பகலில் காண்போம்.  224. சாராள் ஆபிரகாமை மிகவும் நேசித்தாள். “என்னுடைய ஆண்டவன் முதிர்ந்த வயதுமுள்ளவரானார், நானும் கிழவி யானவள். எனக்கு இன்பம் உண்டாயிருக்குமோ?'' என்றாள் இவ்விதமாக நினைத்து உள்ளத்திலே நகைத்தாள். தூதனானவர்தான் வார்த்தை என்பதை ஆபிரகாமுக்கு காண்பித்திருந்தார். அவர் சொன்னார் "சாராள் ஏன் நகைத்தாள்?” அவளோ, "நான் நகைக்கவே யில்லை", என்று மறுத்தாள்.  225. அவர், "இல்லை நீ நகைத்தாய்" என்றார். அது கிருடை பாருங்கள், சரி. தேவன் அவளை அங்கே கொன்றிருக்கக் கூடும் ஆனால் அவ்விதம் செய்யவில்லை. மூடத்தனத்தைப் பாருங்கள்! நப் ஒவ்வொருவரையும் அவர் கொல்லக் கூடும். ஆனால் அவ அவ்விதம் செய்கிறதில்லை. சாராளைக் கொல்லுவதென்பது ஆபிரகாமின் ஜீவனையும் எடுப்பது போலாகும், ஏனெனில் சாராள் ஆபிரகாமின் ஒரு பாகமாயிருந்தாள். அவர்கள் இருவரும் ஒருமைப்பட்டிருந்தார்கள் ! அதே விதமாக சபையைக் கொல்வ தென்பது அவரால் முடியாத காரியம். ஏனென்றால் அது அவருடைய பாகமாயிருக்கிறது. அது வார்த்தை மாம்சமாகிய பாகமாயிருக்கிறது. ஓ ''ஆச்சரியமான கிருபை, அதன் சப்தம் எவ்வளவு இனிமையாயிருக்கிறது!" ஓ, உங்களுக்கு புரிகிறதா? அவரால் அவளைக் கொல்ல முடியாது. அவரால் அவனைக் கொல்ல முடியாது. அவனுடைய ஜீவனை அவர் எடுக்க முடியாது. ஏனெனில் அவள் ஆபிரகாமின் ஒரு பாகமாகயிருந்தாள். சாராள் ஆபிரகாமின் மாம்சத்தின் மாம்சமும், எலும்பின் எலும்புமாயிருந்தாள். பாருங்கள். 226. நமது தவறுகளில் ....... "நான் தோல்வியுற்றேன்” என்று கூறாதீர்கள். இல்லை, அது அவ்விதம்...... ? ஆபிரகாமும் கூட தோல்விகளை சந்தித்தான், பாருங்கள். அவர் தம் சபையை அழிக்க முடியாது. அதற்தாக அவர் முன் குறிக்கப்பட்ட சபையைக் கொல்ல முடியாது. உங்களுடைய ஜீவனை அவர் எடுக்க முடியாது, ஏனெனில் நீங்கள் அவரில் ஒரு பாகமாயிருக்கிறீர்கள். நீங்களே வார்த்தையாயிருக்கிறீர்கள். அந்த வார்த்தை உங்களில் உள்ளது. அது உங்களில் அன்பு , சந்தோஷம், சமாதானம், நீடிய பொறுமை போன்ற கனிகளை வெளிப்படுத்தி நிரூபித்திருக்கிறது. தேவனுடைய எல்லா வார்த்தையும் - நீங்கள் ஒவ்வொரு வார்த்தையையும் விசவாசிக்கிறீர்கள். அது உங்களில் உங்கள் மூலமாய்க் கிரியை செய்கிறது. கிறிஸ்துவின் வார்த்தையில் நீங்கள் ஒரு பாகமா யிருக்கிறீர்கள். அவர்தான் வார்த்தையென்று நாம் போதிக்கப் பட்டுள்ளோம். நாம் அவருடைய மாம்சத்தில் மாம்சமும், எலும்பில் எலும்பாகவும் இருக்கிறோம் என்று போதிக்கப்பட்டு இருக்கிறோம். அதுதான் காரியம். இப்பொழுது, நாம் வெறொன்றிற்கு வருகிறோம்.  227. மூரே என்ற மழை முன்மாரியும், உரிமையின் மழையுமாக கடந்து சென்றது. நடந்ததென்ன? முன்மாரியும் கடந்தது. பின்மாரியும் பொழிந்தது. நடந்ததென்ன? சோதோமும், சோதோமியரும் அக்கினிக்கிரையாயினர்! ஆபிரகாமோ வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட குமாரனைப் பெற்றுக் கொண்டான். 228. " இரண்டையும் அறுப்பு மட்டும் வளர விடுங்கள். அறுப்பு காலத்தில் நான் அறுக்கிறவர்களை நோக்கி: முதலாவது, களைகளைப் பிடுங்கி அவைகளைச் சுட்டெரிக்கிறதற்குக் கட்டுகளாகக் கட்டுங்கள்; கோதுமைேையா என் களஞ்சியத்தில் சேர்த்து வையுங்கள் என்பேன் என்று சொன்னான்” என்று இயேசு கூறினார். பாருங்கள்? பின்மாரியானது சமீபித்திருக்கிறது. நான் அதைக் குறித்து மிக நன்மையான ஒன்றை வைத்துள்ளதால், நான் இந்தப் பொருளின்மேல் அந்த நேரம் ... நான் அதை அறிந்துள்ளேன். பாருங்கள்? 229. ஸ்தாபனமும் பெந்தகோஸ்தே என்ற இரண்டு ஸ்தாபனங்களும் ஒன்றாக இணையப் போகின்றன. ஆனால் அன்று ஆபிரகா மோடு வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட வித்தானது நிலைத்து நின்றது போல இன்றும் வார்த்தை மட்டுமே நிலைத்து நிற்கும். "உங்களுக்கு காதுகளிலிருந்தும் கேட்கவில்லையா? கண்களிலிருந்தும் காண வில்லையா? அன்று நடந்தது போலவே இன்றும் நடக்கும்" என்று இயேசு கூறினார். இக்காலை இயேசு இங்கிருப்பாரென்றால் “லோத்தினுடைய நாட்களில் நடந்தது போலவும் நடக்கும், மனுஷகுமாரன் வெளிப்படும் நாளிலும் அப்படியே நடக்கும் என்று எழுதியிருக்கவில்லையா?" என்று நம்மை கேட்கமாட்டாரா? இரண்டு அறுவடைகள் வருவதை நீங்கள் காணவில்லையா? இவையிரண்டும் கடைசி மழைப் பொழிவை பெற்றுக் கொள்ளப் போகின்றனவே! பின் நடக்கப்போவது என்ன? தூதர்களும் கர்த்தரும் மறைந்து போவார்கள். அதன் பின்பு மழையானது பெய்யப் போகின்றது.  230. சரி. இப்பொழுது ஊக்கமாய் கவனியுங்கள். முன்பாரி, பின்பாரி - இந்தப் பொருளைக் குறித்தே நான் பேசிக் கொண்டிருந்தேன். எல்லா அடையாளங்களும் கடைசி காலத்தை சுட்டி காட்டுகின்றன. தேவனுடைய வார்த்தையை விசுவாசிக்கும் ஒவ்வொருவரும் அதை அறிவீர்கள். 231. இங்கு சற்று நிறுத்தி, நான் சில பெயர்களை குறிப்பிட வேண்டி யதாயிருக்கிறது. நான் கடினமாக இருக்க நோக்கம் கொள்ள வில்லை. என் ஜீவியம் முழுவதிலும் நான் அறிந்ததையே உங்களுக்கு வெளிப்படுத்த விரும்புகிறேன், ஆனாலும் கடைசியில் சில காரியங்களை கூறாமல் வைக்க வேண்டியாதயுள்ளது, அவர் என்னை அனுமதிக்கும் வரையில் நான் காரியங்களை உங்களுக்கு வெளிப்படுத்தப் போகிறேன். சகோதரி உட் அதை அறிந்திருக்கிறார்கள். நான் இப்பாகத்திற்கு வந்த பிறகு, அதன் பின்பு அநேக பக்கங்கள் இருந்த போதிலும், பரிசுத்த ஆவியானவர், "அதை செய்யாதே" என்று கூறினார். சகோதரி உட் அவர்களே, நான் அவ்விதம் செய்யக் கூடாது என்று அவர் எனக்கு சொன்னதை நான் உங்களிடம் சொல்லவில்லையா? ஆகவே, நான் திரும்பிச் சென்று ஜெபித்தேன். அந்த இரவு அவர் எனக்கு தரிசனத்தில், "இப்பாகத்திற்குச் செல், இதை எடுத்து அங்கே பொருத்து. ஏனெனில் அவர்களால் இதை புரிந்து கொள்ள முடியாது. அதற்குரிய நேரம் இன்னும் வரவில்லை, அதை இங்கு பொருத்து''' என்று கூறினார். நான் அவ்விதமே செய்தேன். அது தான் சரி. "பலியைப் பார்க்கிலும் கீழ்ப்படிதல் உத்தமம்” பாருங்கள். சரி. கீழ்ப்ப டிதல் ...  232. கவனியுங்கள். நாம் கடைசி காலத்தில் இருக்கிறோம். புத்தி யுள்ள, புத்தியில்லாத கன்னிகைகளைப் பற்றிய உவமையும் நம்மிடத்தில் உண்டு. புத்தியில்லாத கன்னிகை கலப்பினமாகப் போகிறாள் பாருங்கள். அவளுக்கு வித்து உண்டு. ஆனால் எண்ணெய் இல்லை, அவள் வளர்வதற்கு தகுந்த ஈரம் அங்கு இல்லை. அவள் அங்கு என்ன செய்கிறாள்? பெந்தெகொஸ்தே கூட்டமும் உலக ஸ்தாபனக் கூட்டமும், சுவிசேஷ கூட்டங்களும் ஒன்றாக இணைகின்றார்கள். எதற்காக? (கவனியுங்கள்). சோதோமிற்கு சென்று இந்த அறுவடையை அறுப்பதற்காக.  233. ஒரு கிறிஸ்துவ வர்த்தக சபையில் மிகவும் அறிவாளியான, சிறந்த விதமாக படித்த எனது பெந்தகொஸ்தே நண்பரொருவர், அவர்கள் மத்தியில் அத்தியட்ச குருவின் ஆட்சியிலிருக்கும் (Episcopalian preachers) பிரசங்கிகளும் கத்தோலிக்க குருக்களும் அங்கு வந்திருப்பதைக் குறித்து மிகவும் சத்தமிட்டு தேவனுக்கு துதிகளைச் செலுத்தினார். அவர்கள் கனநித்திரை அடைந்திருக்கிறார்களோ என்று நான் அதிசயித்தேன். "ஓ, சகோ பிரன்ஹாமே, நீங்கள் கேள்விப்படாத மகத்தான காரியம் இது. இந்த கத்தோலிக்கரும், எபிஸ்கோப்பலியன் ஜனங்களும், தாங்கள் பரிசுத்த ஆவியைப் பெற்று கொண்டதாகவும், அவர்களும் அந்நிய பாஷையில் பேசுவதாகவும் கூறுகிறார்கள். தேவனுக்கு மகிமையுண்டாவதாக! அவர்களுடைய சபை புரட்சிகரமாக மாறிவிட்டது" என்று என் நண்பர் கூறினார் ! ஓ என் சகோதரர்களே, அதுதான் அடையாளம் என்பதை நீங்கள் அறியாமலிருக்கிறீர்களா? 234. இந்த புத்தியில்லாத கன்னிகைகள் எண்ணெயை விரும்பி அதை வாங்க போகும் நேரத்தில் தான் மணவாளன் வருகிறார்! ஓ! பெந்தெகொஸ்தேயினரே, உங்களுக்கு நேர்ந்தது என்ன? தேவன் அதை உங்களுக்கு காண்பிக்கா விடில் நீங்கள் பார்க்க முடியாது. அது ஒரு நிச்சயமான காரியம். நீங்கள் ஆரம்பத்திலே முன் குறிக்கப் படவில்லையென்றால் அதை இழந்து போவீர்கள். காத்திருந்து கேட்கிறவைகளாகிய காதுகள் பாக்கியமுள்ளவைகள்; உணர்ந்து கொள்ளும் இருதயம் பாக்கியமுள்ளது, ஏனெனில் காலம் சமீபித்திருக்கிறது. எல்லா அடையாளங்களும் அதையே சுட்டிக் காட்டுகின்றன. பாருங்கள். 235. எத்தகைய எழுப்புதல்களை அவர்கள் பெற்றிருக்கிறார்கள் என்று பாருங்கள். மகத்தான எழுப்புதல்கள், அது பார்வைக்கு நல்லதாய் தோன்றுகிறதல்லவா? "நல்லது, சகோ. பிரன்ஹாமே, நாங்கள் இணைக்கப்பட்டதை பிடித்து கொண்டீர்களே!" என்று நீங்கள் கூறலாம். அங்கேதான் உங்களை பிடிக்க விரும்புகிறேன். எது சரி, எது தவறு என்று நீங்கள் எவ்விதம் அறிந்து கொள்ளப் போகிறீர்கள்? அதற்கு ஒரு வார்த்தையின் பரிசோதனையைக் கொடுங்கள். அது சரியா தவறா என்று கூறுவதற்கு அதுவே சரியான வழியாகும். அதுதான், வார்த்தை பரிசோதனை மாத்திரம் கொடுங்கள். அது வார்த்தையைக் குறித்து என்ன கூறிகிறதென்று நாம் பார்ப்போம். அது ஒரு ஆவியாய் இருக்குமானால் வார்த்தையின் பரிசோதனையைக் கொடுங்கள். அது தேவனுடைய வார்த்தையை மறுதலித்ததானால் அது எதுவாயிருந்தாலும் தேவனால் உண்டானதல்ல.  236. கவனியுங்கள் - வார்த்தை பரிசோதனையைக் கொடுங்கள்; என்ன சம்பவிக்கின்றது நாம் பார்ப்போம். மத்தேயு 24ம் அதிகாரம் 35ம் வசனத்தில், இயேசு இதைக் குறித்து நம்மை எச்சரித்திருக் கின்றார். ஒலி நாடாக்கள் நிமித்தம் நாம் சற்று அதைப் பார்ப்போம். இயேசு கூறியதை சற்று கவனமாக செவிகொடுத்து கேளுங்கள். கூடுமானால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களையும் வஞ்சிக்கத்தக்கதாக அந்த இரு ஆவிகளும் ஒன்று போல இருக்கும் என்று அவர் கூறினார். அதை நீங்கள் அறிந்திருக்கிறீர்களல்லவா? அது உண்மையாக இருக்குமா? ஆம் ஐயா. மத்தேயு 24:35 இவ்விதமாக கூறுகிறது; “வானமும் பூமியும் ஒழிந்து போகும், என் வார்த்தைகளோ ஒழிந்து போவதில்லை.” 237. சிறிது நேரம் ... நாம் இந்தக் கூட்டத்தை முடிக்க இன்னும் 20 நிமிடங்கள் மட்டுமே உள்ளன. ஆனால் நாம் இந்த செய்தியின் மூன்றில் ஒரு பங்கு கூட பிரசங்கிக்கவில்லை. ஆனாலும் நாம் மத்தேயு 24:35யை எவ்விதமாகிலும் படித்தாக வேண்டும். இப்பொழுது, இயேசு என்ன கூறினாரென்பதைக் கூர்ந்து கவனியுங்கள். இப்பொழுது, இந்த இரண்டு ஆவிகளும் மிகவும் நெருங்கியிருந்து, கூடுமானால், தெரிந்து கொள்ளப்பட்டவர்களையும் வஞ்சிக்கும். நீங்கள் அதை அறிவீர்கள், இல்லையா? இப்பொழுது, அது உண்மை யாகுமா? ஆம், ஐயா. மத்தேயு 24:35. எவ்விதமாகிலும் படித்தாக வேண்டும். இப்பொழுது, இயேசு என்ன கூறினாரென்பதைக் கூர்ந்து கவனியுங்கள். வானமும் பூமியும் ஒழிந்து போகும், ஆனால் என் வார்த்தைக ளோ ஒழிந்து போவதில்லை. (பாருங்கள்?) 238. இந்த இரு ஆவிகளும் மிகவும் நெருங்கியுள்ளன ..... அது அவ்விதம் இருந்தாக வேண்டும். அது அவ்விதம் இருக்கத்தான் வேண்டும். இந்த பெந்தெகோஸ்தே ஸ்தாபனமானது உண்மையைப் போல நிச்சயமாக நடிக்கத்தான் வேண்டும். ஆனால் தெரிந்துக்கொள்ளப்பட்டவர்கள் மட்டுமே வஞ்சிக்கப்பட முடியாது என்று இயேசு கூறினார். அந்த நினைவு என்னைக் கொல்லு கின்றது. என் பெந்தெகோஸ்தே சகோதரர்களே, நான் ஏன், எதற்காக செய்தேன் என்பதை உங்களால் காணமுடியவில்லையா? கூடுமானால், அது தெரிந்துகொள்ளப்பட்டவர்களையும் வஞ்சிக்கும். பாருங்கள்? நித்திய ஜீவனுக்கென்று தெரிந்து கொள்ளப்பட்ட வர்களே இதை பிடித்துக் கொள்ள முடியும். நாம் அதைக் குறித்து நிச்சயமாகப் பார்க்கப்போகிறோம். பாருங்கள்?  239.' “நல்லது, நீர் செய்வது சரியென்று உமக்கு எப்படி தெரியும்?” என்று நீங்கள் கேட்கலாம். அப்படியானால் வார்த்தையைக் கொண்டு என்னை சோதித்துப்பாருங்கள். உங்கள் ஸ்தாபனத்தையும் வார்த்தையினால் சோதித்துப் பாருங்கள். அப்பொழுது யார் உண்மையென்று தெரியும். வேதம், "எல்லாவற்றையும்” நீரூபித்துப் பார்த்து .... ” என்று கூறுகின்றது. “இவ்விதம் ஞானஸ்நானம் கொடுப்பதினால் எந்தவித வித்தியாசமும் உண்டாவதில்லை” என்று நீங்கள் கூறலாம். அதுவித்தியாசத்தை உண்டாக்குகிறது! ஏவாளிடம் சாத்தான் நிச்சயமாய் அதைத்தான் கூறினான். 240. ஒரு நல்ல கிறிஸ்தவ மனிதனால் அப்போஸ்தலர் 19ல் சிலபேர் யோவானின் ஞானஸ்நானம் ஏற்கனவே பெற்றிருந்தார்கள். பவுல், அவர்களைப் பார்த்து, "நீங்கள் விசுவாசிகளானபோது பரிசுத்த ஆவியைப் பெற்றீர்களா?," என்று கேட்டான். அதற்கு அவர்கள் : பரிசுத்த ஆவி உண்டென்பதை நாங்கள் கேள்விப்படவே இல்லை என்றார்கள். அப்பொழுது அவன்: அப்படியானால் நீங்கள் எந்த ஞானஸ்நானம் பெற்றீர்கள் என்றான் (பாருங்கள்), அதற்கு அவர்கள்; இயேசுவுக்கு ஞானஸ்நானம் கொடுத்த அந்த மகத்தான மனிதன் யோவான் கொடுத்த ஞானஸ்நானம் பெற்றோம் என்றார்கள். 241. அப்பொழுது பவுல், "இன்றைக்கு அது கிரியை செய்யாது, ஏனெனில் யோவான் மனந்திரும்புதலுக்கென்று ஞானஸ்நானம் கொடுத்தான். (ஆங்கிலத்தில் மனந்திரும்புதலுக்கென்று "unto” என்று இருக்கிறது --- தமிழில் மனந்திரும்புதலுக்கு ஏற்ற --- என்று இருக்கிறது --- தமிழாக்கியோன்). பாவமன்னிப்புக்கென்றல்ல; பலியானது அப்பொழுது செலுத்தப்படாமலிருந்ததே” என்றான். "அதைக் கேட்டபோது அவர்கள் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றார்கள்."  242. தேவன் மோசேயைப் பார்த்து, “உன் கால்களில் இருக்கிற பாதரட்சையைக் கழற்றிப்போடு” என்றார். அதற்கு மோசே, "கர்த்தாவே, நான் இன்று காலை அப்பாத ரட்சைகளை சற்று இறுக்கமாக கட்டி விட்டேன். என்னுடைய தலையிலிருக்கும் தொப்பியை கழற்றுவதின் மூலம் நான் அதிக மரியாதையை உமக்குக் காட்டுவேன்'' என்று கூறியிருந்தால் எப்படியிருந்திருக்கும்? அது கிரியை செய்திருக்காது. அவர் பாதரட்சை என்று தான் கூறினாரேயன்றி தொப்பி என்று கூறவில்லை! தாயாகிய ஏவாளிடம் சாத்தான் வெள்ளையடிக்க முயற்சித்தது போன்று இருக்கிறது அது. ஒவ்வொரு வார்த்தையும், தேவன் அதை எழுதிய பிரகாரமாகவே சத்தியமாயிருக்கிறது. அந்த விதமாகத் தான் அதை நான் விசுவாசிக்கிறேன். 243. " நல்லது நாங்களும் சத்தியத்தை உடையவர்களா யிருக்கிறோம்” என்று நீங்கள் கூறலாம். அப்படியானால் தொடர்ந்து செல்லுங்களேன், அது சரி. நீங்கள் குருடாயிருந்தால் தொடர்ந்து சென்று இருட்டில் தடுமாறுவீர்கள். சகோதரனே, இந்த தேவவார்த்தை தான் உன்னை நியாயந்தீர்க்கப் போகிறது, உன்னு டைய கோட்பாடல்ல. ஓ, அது பார்ப்பதற்கு அழகாயிருக்கும். ஆம் ஐயா. அது பார்ப்பதற்கு அழகாயிருக்கும். 244. "நல்லது சகோ. பிரன்ஹாமே, சற்று பொறுங்கள். கர்த்தருக்கு ஸ்தோத்திரம், அவர்கள் சென்று வியாதியை சொஸ்தப்படுத்து கிறார்களே” என்று நீங்கள் கூறலாம். ஆம், ஐயா. நானும் கூட அதை செய்கிறேன். "அவர்கள் அந்நிய பாஷைகளைப் பேசுகிறதை பார்த்திருக்கிறேன்" என்றும் கூறலாம். ஆம். ஐயா. நான் கூட பேசுகிறேன். அந்நிய பாஷை பேசுதலே பரிசுத்த ஆவியைப் பெற்றதன் ஆரம்ப அடையாளம் என்று தேவனுடைய வார்த்தையைக் கொண்டு யாரும் நிரூபிக்க முடியாது. அவ்விதமாக நான் ஒரு போதும் விசுவாசித்ததில்லை. அந்த மனிதன் வந்து அதைச் செய்ய வேண்டுமென நான் விரும்புகிறேன். அதை குறித்து நான் இந்நாள் மட்டும் சவால் விடுத்திருக்கிறேன். அந்நிய பாஷை பேசுதலை நான் விசுவாசிக்கிறேன். ஆம் ஐயா; ஆனால் சூனியக் காரனும், மந்திரவாதிகளும் பிசாசின் உதவியினால் அந்நிய பாஷைகளைப் பேசி மொழிபெயர்க்கின்றதையும் இயேசு கிறிஸ்துவை மறுதலிப் பதையும் நான் பார்த்திருக்கிறேன். அந்நிய பாஷைகளைப் பேசி வேறொரு மனிதனின் மனைவியோடு வாழும் மனிதனையும் நான் பார்த்திருக்கிறேன். நான் தரிசனத்தைக் கண்டு அவ்விதமிருந்தவனை முகமுகமாக சந்தித்து அவனுடைய ஜீவியத்தைக் குறித்து சாட்சி பகரச் செய்தேன். அதை பரிசுத்த ஆவியென்று நீங்கள் அழைக்க முடியுமா? 245. “நல்லது சகோ. பிரன்ஹாமே. பரிசுத்த ஆவி அந்நிய பாஷைகளைப் பேசுவதை நீங்கள் விசுவாசிக்கிறதில்லையா?" ஆம் ஐயா, விசுவாசிக்கிறேன். ஆனால் அதற்கு வார்த்தையின் பரிசோதனையைக் கொடுங்கள் ! பாருங்கள்? பின்பு கவனியுங்கள். யந்நேக்களும், யம்பிரேக்களும் கூட அற்புதங்களை செய்தார்கள். அது சரி. அவ்விதம் அவர்கள் செய்தார்களா? யந்நேக்களும், யம்பிரேக்களும் ... ஆம் ஐயா, எகிப்திற்கு மோசே சென்றபோது, அடையாளம் என்ற முறையில் செய்த எல்லாகிரியைகளையும், அந்த இரண்டு மந்திரவாதிகளாலும் செய்ய முடிந்தது. இரண்டு பிசாசுகள் மோசே, "வண்டுகள் உண்டாகட்டும்” என்று கூறுவான். அவர்களும் “வண்டுகள் உண்டாகட்டும்” என்று கூறுவார்கள். மோசே, “கோலை கீழே போடு” என்பான். அவர்களும், “கோலை கீழே போடு” என்பார்கள். மோசே, “சர்ப்பம்” என்று கூறுவான். அவர்களும். "சர்ப்பம்” என்று கூறுவார்கள். 246. அது சரி. அவர்களால் அற்புதங்களை செய்ய முடியும். கடைசி நாளில் பிசாசுகள் எழுந்து அற்புதங்களையும் அடையாளங்களையும் செய்து ஜனங்களை வஞ்சிக்கும் என்று வேதம் கூறுகிறது. அது ஒரு கடினமான அவலட்சணம், சகோதரனே, ஆனால் நீ சத்தியத்தை அறிந்து கொள்ள வேண்டும். 247. "அந்நாளில் அநேகர் என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! உமது நாமத்தினாலே தீர்க்கதரிசனம் உரைத்தோம் அல்லவா? உமது நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்தினோம் அல்லவா? உமது நாமத்தினாலே அநேக அற்புதங்களைச் செய்தோம் அல்லவா?'' என்பார்கள். 248. அதற்கு அவர், "அக்கிரம் செய்கைக் காரரே, என்னை விட்டு அகன்று போங்கள் என்று அவர்களுக்குச் சொல்லுவேன்'' என்று இயேசு கூறினார். அக்கிரமம் என்றால் என்ன? தவறு என்று அறிந்தும் அத்தவறை எவ்வாறாயினும் நிறைவேற்றுவதே அக்கிரமமாகும், தேவனுடைய வார்த்தை சரியென்று அறிந்திருந்தும், பின்பு ஏன் நீங்கள் மாய்மாலம் செய்கின்றீர்கள்? இங்கே கொஞ்சம் அங்கே கொஞ்சம் எடுத்து மீதியை மறுதலிக்கும் உங்கள் ஸ்தாபனங் களினாலல்லவா அவ்விதம் செய்கிறீர்கள். ''அக்கிரம் செய்கைக் காரரே, என்னை விட்டு அகன்று போங்கள்; நான் உங்களை ஒருக்காலும் அறியவில்லை." இப்பொழுது, நீங்கள் இப்பொழுதே நரகத்தைக் கடந்து .... அல்லது ... பாருங்கள்?  249. இப்பொழுது, இது உண்மை என்பதை ஞாபகங் கொள்ளுங்கள். இயேசு இவ்விதமே கூறினார். யந்நேயும் யம்பிரேயும் மோசேக்கு எதிர்த்து நின்றார்கள்; "யந்நேயும், யம்பிரேயும் மோசேக்கு எதிர்த்து நின்றது போல” என்று வேதம் கூறுகின்றது. என்ன? கடைசி நாளில் இவர்கள் ஆவிகளாக திரும்பவும் ஜனங்களின் விடுதலைக்குச் சற்று முன்பாக காணப்படுவார்கள். அல்லேலுயா! விடுதலையின் நேரம் இங்கு இருக்கிறது! மத் 24ல் அவர்கள் கூடுமானால் தெரிந்து கொள்ளப் பட்டவர்களையும் வஞ்சிப்பார்கள் என்று சொல்லப்பட்டிருக்கிறது. தெரிந்துக் கொள்ளப்பட்டவர்களே, இதை கிரகித்துக் கொள் வார்கள். இங்கே கொஞ்சம், அங்கே கொஞ்சம் - கூடுமானால் தெரிந்துக் கொள்ளப்பட்டவர்களையும்....... “யந்நேயும், யம்பிரேயும் மோசேக்கு எதிர்த்து நின்றதுபோல, தேவ வார்த்தையின் சத்தியத்தைக் குறித்து துஷ்ட எண்ணமுடைய இம்மனிதர்களும் எதிர்த்து நிற்பார்கள்.” வார்த்தையே சத்தியம். அது சரியா? இது ஏடெடுக்கப்பட்ட பாலில்லை, நண்பர்களே! பாருங்கள். பாருங்கள்?  250. அவ்வளவு நெருக்கமாக இருந்து, கூடுமானால் தெரிந்து கொள்ளப்பட்டவர்களையும் வஞ்சிப்பார்கள் என்று வேதம் கூறுகிறது. ஆனால் தெரிந்து கொள்ளப்பட்டவர்களை வஞ்சிக்க முடியாது. வித்துக்கள் அங்கு இழக்கப்படுகின்றன வென்றால் அவை இழக்கப்படுவதற்கென்றே தெரிந்து கொள்ளப்பட்டவைகள். அவை முன்மாரியில் சென்ற விதைகள். ஸ்தாபனங்கள் விதைக்கப் பட்டன; வார்த்தையும் விதைக்கப்பட்டது, பாருங்கள். கடைசி நாளில் எழும் யந்நேக்களும், யம்பிரேக்களும் அற்புதங்களையும் அடையாளங்களையும் செய்து ஜனங்களை வஞ்சிக்கும் என்று வேதம் குறிப்பிடுகின்றது. அப்படியானால், நீங்கள் வித்தியாசத்தை எவ்விதம் கண்டுபிடிப்பீர்கள்? --- வார்த்தையின் மூலமாகவே! 251. "வேதத்தையும் சாட்சி ஆகமத்தையும் கவனிக்கவேண்டும்; இந்த வார்த்தையின் படியே சொல்லா விட்டால் அவர்களுக்கு விடியற்காலத்து வெளிச்சமில்லை” என்று பழைய ஏற்பாடு கூறுகிறது. அவர்கள் ஏதாவதொன்றை மறுதலித்தால் ....... பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின் நாமத்தை உபயோகித்து ஞானஸ்நானம் கொடுத்த ஒருவரை வேதத்தினின்று எடுத்துக் காட்டுங்கள் பார்க்கலாம். பின் ஏன் அவ்விதம் நீங்கள் செய்கிறதில்லை? -.. கோட்பாடினாலும், கலப்பினத்தினாலும் மரித்த பிள்ளைகள், வேசித்தனத்தில் பிறந்த பிள்ளைகள் கனியற்று இரண்டு தரஞ் செத்து வேரற்றுபோன மரங்கள். "என் பிதா நடாத நாற்றெல்லாம் வேரோடு பிடுங்கப்படும்." "வானமும் பூமியும் ஒழிந்து போகும், என் வார்த்தைகளோ ஒழிந்து போவ தில்லை" என்று இயேசு கூறினார். இப்பொழுது உணர்ந்து கொள்ளுங்கள், நான் ஏன் வார்த்தையில் மட்டும் நிலைநிற்கிறேன் என்று. 252. பெண்கள் தங்கள் தலைமுடியை கத்தரிப்பது சாபமல்ல என்று வேதத்தில் எங்காவது காட்ட முடியுமா? அதுதான் காரியம். ஆனால் நீங்கள் இதைக் குறித்து சாக்கு போக்கு சொல்லுகிறீர்கள். "ஓ, சகோ. பிரன்ஹாம் ஒரு தீர்க்கதரிசிதான். அவர் ஜனங்களோடு பேசி, அவர்கள் பாவங்களை உணர்த்தி, வியாதிகளை சுகமாக்கும் வரை ஏற்றுக் கொள்ளலாம். ஆனால் அவர் உபதேசிப்பதை விசுவாசிக்க முடியாது" என்று ஜனங்கள் கூறுகிறார்கள். நல்லது, நீங்கள் மாய்மாலக்காரராயிருக்கின்றீர்கள். உங்களுக்குக் காரியம் புரிகிறதில்லை! வார்த்தையானது தீர்க்கதரிசிக்கு வருகிறது என்று வேதம் கூறவில்லையா? நான் என்னை தீர்க்கதரிசி என்று அழைத்துக் கொள்கிறதில்லை. நான் தீர்க்கதரிசி அல்ல. ஆனால் நீங்கள் தாம் அவ்விதம் என்னை அழைக்கிறீர்கள். நீங்கள் சொன்னதையே நான் சொல்கிறேன். அப்படியிருந்தும் எனக்கு முதுகைக் காட்டி இவ் விதமாய் கூறுகிறீர்கள். அவ்விதம் சொல்லவில்லை என்று மறுதலிக் காதீர்கள். நீங்கள் அவ்விதம் சொன்ன காரியங்களை நான் ஒலி நாடாக்களில் பதிவு செய்திருக்கிறேன். நீங்கள் அதை அறியீர்கள், அல்லவா? நான் அவ்விதம் கூறவில்லை என்று ஒருமுறையாவது சொல்லிப் பாருங்கள்; நீங்கள் அவ்விதம் கூறவேண்டுமென்று நான் விரும்புகிறேன். அப்பொழுது, உங்கள் சொந்த சப்தத்தையே நீங்கள் திரும்பக் கேட்கும் படி அதை நான் இயக்கிக் காண்பிப்பேன். 253. யந்நேயும், யம்பிரேயும் மோசேக்கு எதிர்த்து நின்றார்கள் --- அவர்கள் அற்புதங்களைச் செய்தார்கள். ஆனால், உண்மையான வார்த்தை எங்கிருந்தது? அவர்கள் அற்புதங்களைச் செய்தவர்கள். அவர்கள் அற்புத வரிசையில் எதையாகிலும் செய்யக் கூடியவர்கள் ... அங்கே அபிஷேகிக்கப்பட்ட இரண்டு தீர்க்கதரிசிகள் - அல்லது ஒரு தீர்க்கதரிசியும் அவனுடைய உதவியாளனும் அங்கு நின்றிருந்தனர். அங்கு தேவனால் அபிஷேகிக்கப்பட்ட தீர்க்க தரிசியான மோசே, "கர்த்தர் உரைக்கிறதாவது” என்ற வார்த்தை யோடும் அவனுடைய உதவியாளனோடும் நின்று கொண்டிருந் தான். விடுதலைக்குச் சற்று முன்னர் எல்லாக் காரியங்களும் வெளிப்படுத்தப்பட்டுவிட்டன. அது சரியா? அற்புதங்களை செய்த அந்த போலி கிரியைக்காரர்கள் அங்கேதானே மரித்துப்போனார்கள். 254. அவர்கள் அங்கு என்ன செய்ய முயற்சித்துக் கொண்டிருந் தார்கள்? அவர்கள் பின்மாரியை உற்பத்தி செய்ய முயற்சித்தார்கள். அறிவீனம்! பின்மாரியானது உலகத்தையே அசைக்கும். முன்மாரியானது விதைகளை விதைத்து விட்டது. அது சரி. ஆனால் பின்மாரியானது உலகத்தை அறுவடை செய்யுமே, சகோதரனே. இந்த பின்மாரி மழையானது ஒரு இணைப்பைக் கொண்டுவரும் மழையாயிருக்கிறது. பெந்தெகோஸ்தேயினரும், மற்ற எல்லாக் கூட்டத்தார்களும் ஒன்றாக இணைந்து வார்த்தையைக் கேட்கக் கூடாதவாறு கதவுகளை அடைத்து உங்களுடைய வாயைக்கூட திறவாதபடி செய்யப் போகிறார்கள். அது சரி. அவர் வருகின்ற நேரம் அதுவே. அவர் வரும்போது அது தான் நடக்கும். அப்பொழுதுதான் நீங்கள் மழையக் காண்பீர்கள். ஓ! அது மட்டும் அமைதியாயிருந்து அது கடந்து போக விடுங்கள், பாருங்கள்?  255. ஆனால், தேவனுடைய வார்த்தை தீர்க்கதரிசிக்கு வருகிறதா யிருக்கிறபடியால் வார்த்தையானது அபிஷேகம் செய்யப்பட்ட தீர்க்கதரிசியினிடத்தில் இருக்கிறது. தேவன் தம்முடைய முறை மைகளை ஒருபோதும் மாற்றுவதில்லை. இல்லை, இல்லை. அவர் தம் முறையை ஒருபோதும் மாற்றினதேயில்லை. அது என்ன? இங்கு அந்த மூன்று திரும்பவும் நிலைகொண்டிருக்கிறது. மோசேயின் நாட்களில்யந்நேயும், யம்பிரேயும் அற்புதங்களையும், அடையாளங் களையும் நடப்பித்தார்கள். அதுபோல சோதோமில் இரண்டுபேர் ஜனங்களின் கண்களைக் குருடாக்கினார்கள். பாருங்கள், அங்கு தேவனால் அபிஷேகிக்கப்பட்ட தீர்க்கதரிசியான ஆபிரகாம் தன் துணைவியான சாராளோடு நிலைகொண்டிருந்தான். அது சரியா? அதே விதமாக மோசே, அற்புதங்களையும் அடையாளங்களையும் செய்த யந்நேயுக்கும், யம்பிரேக்கும் எதிராக தன் உதவியாளனோடு நிலைகொண்டிருந்தான். ஓ, நான் அந்த பொருளின் மேல் இன்னும் இரண்டு மணி நேரம் பிரசங்கிக்க விரும்பினேன். 256. சரி. ஆதியாகமம் 1ல் கூறப்பட்டவாறு அந்தந்த ஜாதிவிதை அந்தந்த ஜாதியைப் பிறப்பிக்கும் என்பதை ஞாபகம் கொள்ளுங்கள். அது எப்பொழுதும் அவ்விதமே. அங்கேதான் எல்லா மாதிரிகளும் காணப்படுகின்றன. ஒரு மனிதன், சபையானது (மணவாட்டி) உபத்திரவத்திற்குள் போகும் என்று கூறுவானானால், அதற்கேற்ற தேவ வித்தை எங்கிருந்து பெறப் போகிறீர்கள் என்று நான் அதிசயிக்கிறேன். "நல்லது அது அவ்விதம் கூறியிருக்கிறதே, அவர்கள் அவ்வாறு செய்யப் போகிறார்கள்” ....... என்றெல்லாம் கூறத்தொடங்கு வீர்களென்றால், மழையானது முன்னர் மற்ற ஜாதிகளின் மேல் பொழியப்பட்டதை நீங்கள் கவனிக்க வில்லையா? நியாயத்தீர்ப்பானது பூமியைத் தொடும் முன்பு நோவா பேழைக்குள் காக்கப்பட்டானே, சோதோம் அழியும் முன்னர் லோத்து வெளியே கொண்டு வரப்பட்டானே! பாருங்கள்? நாம் நிச்சயமாக உபத்திரவத்திற்குள் செல்லுகிறதில்லை; ஆனால் எடுத்துக் கொள்ளப்படுதலில் பங்கடையப் போகிறோம். நீங்கள் ஏன் நியாயந்தீர்க்கப்பட வேண்டும்? இயேசு கிறிஸ்து என்னுடைய உபத்திரவத்தில் என்னோடு இருந்தாரே, அங்கு தான் என் உபத்திரவம் நடைபெற்றது. ஆம். நான் அவரை ஏற்றுக கொண்டதால் விடுதலையாக்கப்பட்டேன். “இரத்தத்தின் அடையாளத்தை அங்கு பார்க்கும் போது நான் உன்னைக் கடந்து செல்வேன்” என்று தேவன் கூறினார். அதுதான் சரி. மோசே, இஸ்ரவேலரோடு உபத்திரவத்தினின்று காப்பாற்றப்பட்டு பத்திரமாயிருந்தான். அது சரி.  257. சரி. ஒவ்வொரு வித்தும் தன்தன் ஜாதியின்படியே வர வேண்டும். தேவன் மனிதனை தம்முடைய சாயலாகவும், ஜாதியாகவும், அவருடைய வார்த்தையாகவும் இருக்க இவ் வுலகத்தில் அவனை உண்டாக்கினார். தேவன் கிறிஸ்துவில் தம்மை வெளிப்படுத்தினார். அது என்ன? தேவன் கிறிஸ்துவுக்குள் இருந்தார். அது தன்னுடைய ஜாதியின்படியே பிறப்பிக்கப்பட்ட ஒரு மனிதன், பாருங்கள்? வார்த்தையாகிய தேவன் .... கிறிஸ்து வார்த்தை என்று எத்தனை பேர் அறிந்திருக்கிறீர்கள்? வார்த்தையானது கிறிஸ்து விலிருந்த போது, ஒரு மனிதன் அவர் மூலமாய் தேவனையே வெளிப்படுத்துவதாயிருந்தது; தேவன் ஆதியிலே மனிதனை தம்முடைய சாயலாக சிருஷ்டித்தார்; அந்த விதமான மனிதனைத் தான் தேவன் இன்றும் சிருஷ்டிக்கிறார். வேத கல்லூரி என்னும் அடைக்காக்கும் கருவி ஒரு கூட்ட கலப்பினத்தை உண்டாக்கு கின்றது. பாருங்கள். ஆனால் தேவன் ஒரு மனிதனை அழைப்பா ரென்றால், அவனை அவர் சாயலாகப் படைத்து வார்த்தையை அவனில் ஜீவிக்கச் செய்கிறார். அதுதான் சரி. அவன்தான் தேவனு டைய மனிதன்; அவன் அவர் சாயலாக, அவரைப் போன்றே இருக்கிறான். நான் செய்கிற கிரியைகளைத் தானும் செய்வான் என்று இயேசு கூறினார். தேவன் மனிதனை தமது சாயலாக, தமது ஜாதியின் படியே சிருஷ்டித்தார். 258. அவருடைய ஜாதி என்றால் என்ன? அவருடைய ஜாதி வார்த்தையாயிருக்கிறது. அவரே அந்த வார்த்தையாயிருக்கிறார், ஆக, ஒரு மனிதன் தேவனுடைய வார்த்தையை மறுதலிப்பானானால், அவன் எவ்விதம் தேவ சாயலாயிருப்பான்? இக் கேள்வியை நீங்களே உங்களை கேட்டுக்கொள்ளுங்கள். 'வார்த்தையானது அவருடைய சாயலை வெளிப்படுத்துகிறது - அப்படியெனில் ஒருவன் தேவனுடைய வார்த்தையை மறுதலித்து, அவனால் தேவ சாயலாக இருக்க முடியுமா?" தேவனுடைய வெளிப் படுத்தப்பட்ட சாயலாக இருக்கிறேன் என்பவர்கள், "ஓ! அது அவ்வித அர்த்தம் கொள்ளவில்லை, நான்தான் அதை கூறினேன். ஆனால் உண்மையாக அவ்விதம் நான் அதை குறிப்பிடவில்லை. நான் அங்கு தவறுதலாய் கூறிவிட்டேன்" என்றெல்லாம் கூறுகிறார்கள். அது பதராயும் ஏவாளுக்கு பிசாசு கொடுத்த கலங்கின தண்ணீராயு மிருக்கிறது. அவ்விதம் தெரிந்து கொள்ளப்பட்டவர்களிடம் அவன் செய்ய முடியாது. இல்லை, ஐயா. ஏனெனில் அவர்கள் அவனைப் புறம்பே தள்ளி விடுவார்கள். அவர்கள் அதை விசுவாசிக்க மாட்டார்கள். "எங்களோடு வந்து ஐக்கியம் கொள்ளுங்கள்” என்று கூறுகின்றார்களா? ஒன்றிலும் நாங்கள் ஐக்கியம் கொள்ள மாட்டோம். நீங்கள் மறுபடியும் பிறந்துதான் ஆகவேண்டும். சேர்ந்து கொள்வதல்ல! நாங்களோ புது சிருஷ்டிகள். 259. நாம் பூமியிலே அவருடைய வெளிப்படுத்தப்பட்ட வார்த்தையாயிருக்கும்படி ஆம், நாம் அவருடைய சொந்த சாயலாகவும், அவருடைய ஜாதியாகவும் இருக்கிறோம். இயேசு தேவனுடைய தற்சொரூபமாயிருந்தார். நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா? அப்படியானால் நாம் யாராயிருக்கிறோம்? நாம் தேவ குமாரராய் இருக்கிறோம். நாம் சபையிலே வெளிப்படுத்தப்பட்ட வார்த்தையாக (கிறிஸ்துவின் ஆவியின் சரீரமாக) இயேசு பூமிலிருந்தபோது செய்த அதே கிரியைகளை தொடர்ந்து செய்கிறோம். பாருங்கள்? அதுவே அவருடைய ஜாதி யின்படி இருக்கும் ஜாதியாகும்.  260. நீங்கள் லூத்தரன் என்ற ஜாதியினின்று லூத்தரனைப் பெற்று கொள்ளலாம். அதேவிதமாக மெத்தோடிஸ்டு, கத்தோலிக்க மார்க்கம், பெந்தெகோஸ்தே, ஒருத்துவம், திரித்துவம் என்ற ஜாதி களினின்று அந்தந்த ஜாதிகளைப் பெற்று கொள்ளலாம். ஆனால் நீங்கள் தேவனுடய ஜாதியாயிருப்பீர்களானால் அது வித்தியாசப் பட்டதாயிருக்கிறது. நீங்களே வார்த்தையின் தற்சொரூபமாயிருந்து வார்த்தையை வெளிப்படுத்துகிறீர்கள். ஓ! தண்ணீர் அதின் மேல் பொழிந்தவுடன் அது கிரியைச் செய்யத்தான் வேண்டும். 261. தேவன் மனிதனை தமது சாயலாகவே சிருஷ்டித்தார் .... இன்னும் தொடர்ந்து பேசிட எனக்கு நேரமில்லை என்றே நான் நினைக்கிறேன்; அது விசேஷமானது ... தேவனுடைய வார்த்தைகள் யாவும் யோக்கியங்களே ... பாருங்கள்? நான் இன்னும் ஆறில் ஒரு பங்குகூட பேசி முடிக்கவில்லை ...... ஹும். சரி. நாம் இங்கே நிறுத்துவோம். நீங்கள் என்ன கூறுகின்றீர்கள்?  262. இன்று பிற்பகல் உங்களில் எத்தனைபேரால் வரமுடியும்? உங்கள் கரங்களை உயர்த்துங்கள் .... நல்லது. உங்களை நீண்ட நேரம் பிடித்து வைக்க நான் விரும்பவில்லை. நான் ... உங்களைக் களைப் புறச்செய்ய விரும்பவில்லை. நான் .... அங்கு ஒலி நாடாக்களைப் பதிவு செய்யும் பையன்கள் ... நான் இன்னும் ஒரு நிமிடத்தில் நேரத்தில் நிறுத்துகிறேன் ... சரி, ஐயா.  263. சரி. நாம் கடைசியாக பேசின பொருள்: தேவன் மனிதனை தம்முடைய சாயலாக தமது ஜாதியின்படியே சிருஷ்டித்தார். தேவன் மனிதனை தமது ஜாதியின்படியே சிருஷ்டித்தார். நீங்கள் அதை புரிந்து கொண்டீர்களா? அவருடைய ஜாதியான ஒரு மனிதன். நல்லது. எத்தகைய ஜாதியான மனிதன். அவன் அவர் மாம்சத்தில் வந்த பொழுது எத்தகைய ஜாதியாயிருந்தாரோ அத்தகையவன்தான் அம்மனிதன். அவ்விதமாகத்தான் அவர் உண்டாக்குகிறார். அது சரியா? மனிதனை தமது ஜாதியின்படியே .... ஆமென். அது சரி, அல்லவா? அவன்தான் அவருடைய ஜாதியான மனிதன். ஹும். 264. ஒரு சமயம் அவர், "என் இருதயத்திற்குகந்த தாசன்" என்று தாவீதைக் குறித்து கூறினார். உங்களுக்கு ஞாபகமிருக்கிறதா? தேவனுடைய ஆவி தாவீதிலிருந்தது. அவன் ஒரு புறம்பாக்கப் பட்ட ராஜாவாயிருந்தான். அபிஷேகம் பண்ணப்பபட்ட தெல்லாம் புறம்பாக்கப்பட்டிருக்கும். புறம்பாக்கப்பட்ட ராஜாவாகிய தாவீது ... மலையின்மேல் ஏறிச் சென்றபோது ... அடுத்த மூன்று நிமிடங்களுக்கு நான் இதைப் பிரசங்கிக்கட்டும். தாவீதின் சொந்த குமாரனும், ஜனங்களும் அவனை புறம்பாக்கின போது - அவனை சிங்காசனத்தினின்றி புறக்கணித்தபோது - அங்கு சிமேயி வந்து அபிஷேகிக்கப்பட்ட ராஜாவின் மேல் துப்பினான். இவன் உபதேசத்தில் முடமானவனாக அங்கு வந்து (அவன் நொண்டியா யிருந்தான் என்று வேதம் கூறுகிறது) ராஜாவின் மேல் துப்பினான். கிறிஸ்துவை கவனியுங்கள். கிறிஸ்துவின் மேலும் துப்பினார்கள்! தாவீதின் பக்கத்திலுள்ள பலசாலி, (தாவீதின் பிரதிநிதியும், தூதனாகவும் இருந்தவன்) பட்டயத்தை உருவி, "அந்தச் செத்த நாய் ராஜாவாகிய என் ஆண்டவனை தூஷிப்பானேன்? நான் போய் அவன் தலையை வாங்கிப் போடட்டுமே" என்றான்.  265. அதற்கு தாவீது, “உன் பட்டயத்தை உறையிலே போடு; அவன் என்னை தூஷிக்கட்டும்," என்று கூறி எருசலேம் மலையின் உச்சியில் சென்று திரும்பிபார்த்து புறக்கணிக்கப்பட்ட அவன் அழுதான். 800 வருடங்களுக்குப் பிறகு தாவீதின் குமாரனானவர், தாவீதில் ஒரு பங்காக இருந்த ஆவியானவர், அதே மலையின் மேல் நின்று எருசலேமைப் பார்த்து அழுதார். அவரும் புறம்பாக்கப்பட்டு துப்பப்பட்டு வேடிக்கைக்குரியவரானார். அது சரியா? அங்கு அந்த கல்வாரி மலையின் மேல் தூதனானவர் அவரோடு நடந்து வந்து, "அந்த நாயின் தலையை நான் வாங்கிப் போடட்டுமே" என்று இயேசுவிடம் கூறுவதைப் போன்றும், இயேசு அதற்கு, "அவனை விட்டு விடுங்கள்'' என்று கூறுவதைப் போன்றும் நான் யூகிக் கின்றேன். ஆனால் எனக்கருமையானவர்களே, ஒரு நேரம் வருகிறதாயிருக்கிறது.  266. ஆனால், திரும்ப வந்து ராஜ்ய பாரத்தைக் கட்டிக் கொண்ட தாவீதைப் பற்றி என்ன? கதையானது மாறிவிட்டது. தாவீது தன்னு டைய ராஜரீகத்தில் வந்தான். இந்த சிமேயி என்னும் மனிதனோ கிருபைக்காக கூக்குரலிட்டான். நிச்சயமாக இயேசு தம்முடைய வல்லமையில் என்றாவது ஒரு நாள் வருவார். அப்பொழுது சிரிப் பொலிகள் அடங்கி மாறி விடும். அதுதான் சரி. அவர்களை இப்பொழுது அவ்விதமாகவே விட்டு விடுங்கள்.  267. “தாவீதே, நீ என் இருதயத்துக்குகந்த தாசன்” என்று தேவன் கூறினார். தேவன் ஒரு மனிதனை சிருஷ்டிக்கும் போது அவர் சாயலாக சிருஷ்டிக்கிறார். "உமக்கு விரோதமாய் நான் பாவம் செய்யாதபடிக்கு, உம்முடைய வார்த்தையை என் இருதயத்தில் வைத்து வைத்தேன்'' என்று தாவீது கூறினான். அவனுக்குத் தேவையாயிருந்ததெல்லாம் மழைதான். அவன் அந்த மழையைப் பெற்றிருந்திருப்பானென்றால், அவனுக்கு எல்லாம் சரியாயிருந் திருக்கும். ஆனால் பரிசுத்த ஆவி இன்னுமாய் அவனுடைய நாட்களில் பொழியப்படாமல் இருந்தது. அவன் வார்த்தையை பெற்றவனாயிருந்தான். அவனுக்குள் அந்த வார்த்தை இருந்ததை அவன் அறிந்திருந்தான். ஆகவே தான் அவன், “கர்த்தாவே, அது வெளிவந்து எவ்விதம் அது நடந்து கொள்ளவேண்டுமோ அது நேரிடாதபடி நான் அதை என் இருதயத்திலே வைத்து வைத்தேன், என்று கூறினான். ஆனால் இயேசு வார்த்தையின் வெளிப்பாடாய் வந்த பொழுது, வித்திலிருந்த ஜீவனை எடுத்து அதை வார்த்தைக்கு திரும்பச் செய்தார். ஆவியின் அனுக்கிரகம் இல்லாமலே தாவீதின் ஆத்துமா நிரம்பி வழிந்தோடினதென்றால், நம்முடையவைகள் எவ்வளவு அதிகமாக இருக்கவேண்டும்? ஆமென். அவர் அற்புத மானவரல்லவா. அவரை நீங்கள் நேசிக்கிறீர்களா? அற்புதன் அல்லவோ! அற்புதன் அல்லவோ! அற்புதன் அல்லவோ கிறிஸ்தேசு கண்டோம் கேள்விப்பட்டோம், வேதத்தில் வாசிக்கின்றோம் அற்புதன் அல்லவோ கிறிஸ்தேசு எத்தனைபேர் அவரை நேசிக்கிறீர்கள்? ஓ! அவர் அற்புத மானவர். அவர் அவ்விதமல்லவா? 268. நண்பர்களே, இது கடினமான உபதேசம். நான் அவ்விதமா யிருக்க நோக்கம் கொள்ளவில்லை. ஆம். நீங்கள் அதை புரிந்து கொள்வீர்கள் என நம்புகிறேன். பாருங்கள்? நான் ஏன் அவ்விதம் நடந்து கொண்டேன் என்பதைத்தான் இன்று உங்களுக்கு தெரியப் படுத்துகிறேன். 269. நாம் கலைந்து போகும் முன்பு, இப்பொழுது பேசினவைகளைக் குறித்த ஒரு சிறுபொருளடக்கத்தைச் சிந்திப்போம். என்னுடைய நோக்கம் தேவனுடைய வார்த்தையாகிய அவரைப் பிரியப்படுத்து வதேயாகும். நான் எல்லாவற்றிற்கும் செவி கொடாமலிருந்து தேவனுடைய வார்த்தையை விசுவாசியாதிருப்பதைக் காட்டிலும், எல்லா தேவனுடைய வார்த்தைக்கும் செவிகொடுத்து தேவனைப் பிரியப்படுத்தவே நான் விரும்புகிறேன். அவருடைய வார்த்தையை அறிந்து, அவருடைய வார்த்தையினாலே அவருக்கு ஊழியம் செய்து அவரை பிரியப்படுத்துவதையே என் குறிக்கோளாகக் கொண்டிருக் கிறேன். நான் மற்றவற்றிற்கு விரோதமாக ... தேவனுடைய ஆவியினால் பிறந்து தெரிந்து கொள்ளப்பட்ட கூட்டத்திலிருக்கும் இங்குள்ள நீங்கள் ஒவ்வொருவரும், ஒருவேளை முன்பு மெத்தோடிஸ்டு, பாப்டிஸ்டு, பிரஸ்பிடேரியன், பெந்தகோஸ்தே போன்ற அமைப்புகளில் இருந்து வந்திருக்கிறீர்கள். நீங்கள் அதை அறிந்திருக்கிறீர்கள். ஆகவே, "அவர்களிடத்தில் போவோம்” என்று கூறுவீர்களானால், அதைத்தான் நீங்கள் செய்யக்கூடும். ஏனெனில் நீங்கள் விதையை தூவுவீர்களானால் அங்கே சில ஆத்துமாக்கள் இருக்கும்; அறுவடையானது ஏதாகிலும் ஒருநாளில் நடைபெறும். அதில் சில, "அவன் ஒரு ஏமாற்றுகாரனேயன்றி வேறல்ல" என்று சொல்லக் கூடும்; நம்முடைய ஆண்டவராகிய இயேசுவைக் குறித்தும் அவ்விதமே கூறினார்களல்லவா? ''அதைப்பற்றி எங்களுக்குத் தெரியாது" என்று கூறினார்கள், நல்லது. அப்படி யானால் என்னோடு ஆராய்ந்து பாருங்கள் என்றார். பாருங்கள், பாருங்கள், பாருங்கள்? “அவன் ஒரு ஏமாற்றுகாரன்” என்று கூறினார்கள். பாருங்கள்? “அப்படியானால் வார்த்தையில் ஆராய்ந்து பாருங்கள்," என்று கூறினார். பாருங்கள். அது வார்த்தையா யிராமலிருக்குமானால் வஞ்சிக்கிறதாய் இருக்கும். பாருங்கள்? உங்களுடைய வேதசாஸ்திரம் தேவனுடைய வார்த்தையினின்று வித்தியாசமா யிருக்குமானால்? அது சரியானதல்ல. பாருங்கள்?  270. வேறு சிலர் "நல்லது. நான் சற்று காலம் அதை பின்பற்ற முயற்சிப்பேன்" என்று கூறுகிறார்கள். அப்படிப்பட்டவர்கள் நெருக்கப்பட்டு பலனிழந்து போவார்கள். அது சரி. பாருங்கள்? ஆனால் நீங்கள் உண்மை யிலே உங்களைத் தாழ்த்தி, "கர்த்தாவே, இனி நானல்ல, நீரே இது முதல் எனக்கு எல்லாம்" என்று உங்களை வெறுமையாக்கினால், அப்பொழுது நீங்கள் நூறாய்ப் பலனளிப் பீர்கள். பாருங்கள்? அது அனைவருக்கும் விடுதலையையும் நீதியையும் கொண்டு வரும். அதை நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? நான் அதை விசுவாசிக்கிறேன். ஆம் ஐயா. இந்த சத்தியத்திற்காக நின்று அவருடைய வார்த்தையைப் பிரசங்கிக்க என் ஜீவனையும் பணயம் வைப்பேன் என்று கர்த்தரிடம் நான் பொருத்தனை செய்திருக் கிறேன். நான் அவ்விதமாகவே இன்னும் தொடர்ந்து நிறை வேற்றுவேன். 271. அது எனக்கு ஒரு மகத்தான காரியம். அவ்விதம் செய்ய வேண்டும் என நான் விரும்புகிறதில்லை, ஆனால் அவ்விதம்தான் நிறைவேற்ற வேண்டுமென்றிருந்தால், அன்று சிங்க கெபியிலும், சிலுவைகளிலும், வாளாலும், மரித்து ஸ்தாபனங்களினின்று உதைத்துத்தள்ளப்பட்டு, செம்மறியாட்டுத் தோலையும், வெள்ளாட்டுத் தோலையும் போர்த்துக் கொண்டு பரதேசிகளைப் போல் அலைந்து திரிந்த பரிசுத்தவான்கள் தங்கள் இரத்தத்தை இப் பூமியில் கலந்தது போல நானும் என் இரத்தத்தை இவ்வுலகோடு கலந்து விடுவேன். இயேசுகிறிஸ்துவின் சீஷர், தாங்கள் அவருடைய நாமத்திற்காக அவமானமடைவதற்குப் பாத்திரராக எண்ணப் பட்டபடியினால் சந்தோஷமடைந்தது போல நானும் கிறிஸ்துவுக் காக நிந்தையை அனுபவிப்பதை ஒரு மகத்தான பாக்கியமாக கருதுவேன். துன்பத்தை அனுபவிக்க அவர்களால் முடிந்தது. நான் துன்பம் அனுபவிக்க விரும்பவில்லை. அவ்விதமே ஒவ்வொருவரும் இருப்பார்கள். "சகோதரர்களே, வாருங்கள் ஒருமித்துபோவோம்" என்று எல்லா ஸ்தாபனங்களோடு நான் என் கரங்களை கோர்த்துக் கொள்ள விருப்பமாயிருக்கிறேன். அவ்விதம் செய்வேனானால், தேவனுடைய கரங்களினின்று என்னுடைய கரத்தை நான் பிடுங்குகிறவனாக இருப்பேன். அவ்விதம் செய்வது எனக்கு தூரமாயிருப்பதாக. நான் தனியாக நிற்பேனானால், அவரோடும், அவருடைய வார்த்தையோடு மட்டுமே நிற்பேன்.  272. “நான் நிற்கும் பாறை கிறிஸ்து தான்; வேறஸ்திபாரம் மணல்தான்" என்று எடி ப்ரூயிட் என்பவர் கூறினார். கிறிஸ்துவே வார்த்தையிலிருக்கிறார். "ஆதியிலே ..... '' என்ன அது? ஒவ்வொரு வித்தும் அதனதன் ஜாதியின்படி தங்களைப் பிறப்பித்தது. ஸ்தாபனத்தின் வித்து ஸ்தாபனத்தை பிறப்பிக்கும், பெந்தகோஸ்தே, பாப்டிஸ்டு வித்துக்கள் திரும்பவும் அவைகளையே பிறப்பித்தன --- தொடர்ந்து ஸ்தாபனங்களாகவே பிறப்பிக்கப் பட்டன. 273. கர்த்தருக்குச் சித்தமானால் இன்று மதியம் அவைகள் எவ்விதம் ஆரம்பிக்கப்பட்டன? அதற்கு காரணம் என்ன? அவைகள் எங்கு எவ்விதம் முடிவடையும் என்பதைக் குறித்து வேதம் கூறுவதை ஆராய்வோம்.  274. உள்ளே வரமுடியாததால் வெளியே தங்கள் மோட்டார் வாகனங்களில் அமர்ந்து, இந்த ஒலிப்பெருக்கி மூலம் செய்தியைக் கேட்டுக்கொண்டிருப்பவர்களை தேவன் ஆசீர்வதிப்பாராக. இந்த சுவற்றை சுற்றி நிற்கும் உங்களெல்லோரையும் கர்த்தர் இக்காலை நேரத்தில் ஆசீர்வதிப்பாராக, கர்த்தருடைய கிருபையினால் நான் எந்தவித குற்றசாட்டுகளையும் கொண்டு வரவில்லையென நம்புகிறேன். என்னை நானே தெளிவுப்படுத்திக் கொள்ளுகிறேன்.  275. நான் இன்று காலை கூறிய விதமாகவே நீங்கள் விசுவாசிப்பீர்களானால் அந்த விதமாகவே நிலைநிற்கமாட்டீர்களா? நிச்சயமாக அவ்விதமாயிருப்பீர்களென நம்புகிறேன். நாம் இப்பொழுது சற்று தலைவணங்கி ஜெபிப்போம். 276. கிருபை நிறைந்த பரமபிதாவே, நாங்கள் இக்கூட்டத்தை முடிக்க முயற்சி செய்யாமல், சிறிது நேரம் இளைப்பாற சமயம் எடுத்துக் கொள்கிறோம். இன்று காலை விதைக்கப்பட்ட விதைகள் பசுமையான நிலத்தில் விழுந்திருக்கட்டும். கர்த்தாவே, அவை பரிபூரண நித்திய ஜீவனைக் கொண்டு வரட்டும். பிதாவே, விதைக்கப்பட்ட விதைகள் பின்மாரிக்காக காத்திருக்கும் போது அவைகளின் மேல் அம்மழை பெய்ய நாங்கள் ஜெபிக்கிறோம். ஏனெனில் கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்கள் புதுப்பெலன் அடைவார்கள் என்று சொல்லப்பட்டிருக்கிறதே. தேவனே, வார்த்தைக்கு நாங்கள் ஓடவேண்டாம், அதிலே நிலைத்திருக்க வேண்டும். இதை அருளிச் செய்யும் கர்த்தாவே. 277. எங்களை ஆசீர்வதியும். இப்பொழுது மதிய உணவு உண்ணப் போகும் ஜனங்களை ஆசீர்வதியும். அவர்களுக்கு உணவு கொடுத்து அதன் மூலம் அவர்கள் பலத்தைப் பெற்று திரும்பவும் இங்கு வர ஆசீர்வதியும், கர்த்தாவே, இங்கு அவர்கள் ஆலயத்தில் அமர்ந்திருந்து காத்திருக்க உதவிபுரியும். நானும் சென்று ஜெபம் செய்து திரும்பிவரச் செய்யும். இம்மதியத்தில் என்னை புதிதாக அபிஷேகம் செய்யும்படி ஜெபிக்கிறேன். கர்த்தாவே, உம்முடைய வார்த்தையை நான் விசுவாசிக்கிறவிதமாக ஜனங்களுக்கு கொடுக்க உதவி செய்யும். பிதாவே அருளிச் செய்யும். 278. இன்னும் சிறிது நேரத்தில் ஒரு கூட்ட ஜனங்களோடு ஞானஸ்நான ஆராதனைக்கு போக இருக்கும் எங்கள் அருமையான மேய்ப்பன் சகோ. நெவிலை அவர்களை ஆசீர்வதிக்கும்படி வேண்டிக் கொள்கிறேன். பிதாவே, வேறுவிதமாக கிறிஸ்தவ ஞானஸ்நானம் பெற்றவர்கள் இங்கிருப்பின், உம்முடைய ஊழியக்காரனான பவுல், “நாங்களாவது, வானத்திலிருந்து வருகிற ஒரு தூதனாவது, (ஒளியின் தூதனின் வேஷத்தை தரித்துக்கொண்ட தூதன்) வேறொரு சுவிசேஷத்தை உங்களுக்குப் பிரசங்கித்தால் அவன் சபிக்கப்பட்ட வனாயிருக்கக்கடவன்'' என்று கூறினான். பிதாவே, இது வேதவசனத்தில் எழுதியிருக்கிறது என நாங்கள் அறிந்திருக்கிறோம். பிதாவே அவர்கள் இருதயத்தில் ஆழமாகப் பதிய வேண்டும். கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் ஞானஸ்நானம் பெறாதவர்களாகிய அந்த ஜனங்களை, அவர்களுடைய பாவமன்னிப் பிற்கென்று திரும்பவும் ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளும்படி கட்டளை கொடுத்தவன் இந்த பவுல் தான் என்று அவர்களுக்கு உணர்த்தியருளும். இது ஜனங்களிடம் செல்வதாக. பிதாவே, திரித்துவ மூன்று கடவுள் சிந்தாந்தத்திற்கு ஆதாரமாக வேதத்தலிருந்து ஒரு வசனத்தையும் அவர்கள் காண்பிக்க முடியாது. ஆகவே, கர்த்தாவே, இந்த ஞானஸ்நான ஆராதனை நடக்கும் போது சத்தியம் இது தான் என்று அவர்கள் உணர்ந்து கொள்ளும்படிச்செய்யும். பிதாவே, நீர் பிதா, குமாரன், பரிசுத்த ஆவி என்ற மூன்று அலுவல்களை உடையவர் என்று நாங்கள் எல்லோரும் விசுவாசிக்கிறோம். மூன்று கடவுள்கள் என்றல்ல, தேவனுடைய நாமம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து என்று நாங்கள் விசுவாசிக்கிறோம். பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின் நாமம்தான் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து.  279. பிதாவே, ஜனங்கள் அதை கவனித்து தங்கள் பாவமன்னிப் பிற்கென்று ஞானஸ்நானத்தில் கீழ்ப்படியட்டும். ஞானஸ்நானத் திற்கென்ற இச்சிறு வார்த்தைகள் ஒவ்வொருவருடைய இருதயத்திலும் ஆழமாய்ப் பதியட்டும். இன்னும் எவ்வளவு காலம் என்பதை நாங்கள் அறியோம். பிதாவே, நேரம் சமீபமாயிருக்கிறது. இன்று மதியம் நாங்கள் பேச இருக்கும் போது, சத்துருவானவன் மிகவும் தைரியமாவதை நாங்கள் காண்கிறோம். கர்த்தாவே, அவர்கள் சிங்காசனத்தைப் பிடித்ததிலிருந்து தொடர்ந்து முன்னேறிக் கொண்டிருக்கிறார்கள். அதை எங்களால் காண முடிகிறது, கர்த்தாவே, அது கம்யூனிஸமல்ல, அது பழைய வேசியாகிய தாயும், அவளுடைய பிள்ளைகளுமாகிய ரோமானிய ஆதிக்கம் என்றும், வர இருக்கிறதான மிருகத்தின் சுரூபம் என்றும் ஜனங்கள் புரிந்து கொள்ளட்டும்.  280. பிதாவாகிய தேவனே, அந்த பின்மாரிக்கு முன்பு நாங்கள் ஆயத்தமாக பேழைக்குள் சென்று பாதுகாப்பை அடைந்து கொள்ள கிருபையருளும். இவைகளை இயேசுவின் நாமத்தில் கேட்டு கொள்கிறோம். ஆமென்.  281. இப்பொழுது, கட்டிடத்திலுள்ள நீங்கள்... வெளியே சென்று உணவருந்தி உள்ளே வரவிரும்பினால் .... நீங்கள் திரும்ப வரலாம். ஆராதனை முடிந்தவுடன், நீங்கள் துரிதமாக மறுபடியும் உள்ளே வாருங்கள். இப்பொழுது நாம் எல்லோரும் எழுந்து நிற்போம். எத்தனைபேர் கர்த்தரின் வார்த்தையை விசுவாசிக்கிறீர்கள், உங்கள் கைகளை உயர்த்துங்கள். ஆமென். கர்த்தருக்கே ஸ்தோத்திரம். நேசிக்கிறேன் --- நேசிக்கிறேன் முன்பு அவர் நேசித்ததால்....... (சகோ. பிரன்ஹாம் கைக்குட்டைகளின் மீது கைகளைவைத்து ஜெபிக்கிறார். கர்த்தராகிய இயேசுவே, இந்த கைக் குட்டைகளை ஆசீர்வதியும். அவைகளின் மேல், கர்த்தாவே, அபிஷேகத்தைத் தாரும். கர்த்தாவே, நாங்கள் அதை இயேசுவின் நாமத்தினால் விசுவாசிக்கிறோம் ... ?) முன்பு அவர் நேசித்ததால். நேசிக்கிறேன் ---- நேசிக்கிறேன் முன்பு அவர் நேசித்ததால்.......